Tuesday, April 17, 2012

மனித நேயமிக்க காவலர்களால் மீட்கப்பட்ட முதியவர் (படங்கள்)



 திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரயிலடி அருகே உள்ள மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பையில் ஒரு முதியவர் பல நாட்களாக பட்டினியாக கிடக்கும் தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்திற்க்கு சொன்னார்கள் சில மனிதாபிமானிகள்.
அந்த முதியவரால் எழுந்து நடக்க முடியவில்லை. அவரது முனகல் சத்தம் தான் குப்பைக்குள் மனிதன் இருப்பதாக சொன்னது. இந்த தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலிசார் முதல், வருவாய் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என்று பலருக்கும் தகவல் சொல்லிவிட்டு நகர்ந்தனர
மனித நேயமிக்க காவலர்களால் மீட்கப்பட்ட முதியவர் (படங்கள்)

 திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரயிலடி அருகே உள்ள மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பையில் ஒரு முதியவர் பல நாட்களாக பட்டினியாக கிடக்கும் தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்திற்க்கு சொன்னார்கள் சில மனிதாபிமானிகள்.

 அந்த முதியவரால் எழுந்து நடக்க முடியவில்லை. அவரது முனகல் சத்தம் தான் குப்பைக்குள் மனிதன் இருப்பதாக சொன்னது. இந்த தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலிசார் முதல், வருவாய் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என்று பலருக்கும் தகவல் சொல்லிவிட்டு நகர்ந்தனர்.


இந்த தகவல் கிடைத்த முத்துப்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் தெட்சிணாமூர்த்தி, செல்வராஸ் ஆகியோரை அனுப்பி அந்த முதியவரை மீட்டுவர சொன்னதன் பேரில் குப்பையில் கிடந்த அந்த முதியவர் மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட அந்த முதியவருக்கு முதலில் குடிக்க தண்ணீரும், உண்ண உணவும் கொடுக்கப்பட்டது. குளிக்க வைத்து திருத்துறைப்பூண்டி மருத்துவமணைக்கு அனுப் பிவைக்கப்பட்டார்.

 மருத்துவமணைக்கு செல்லும் முன்பு தனது பெயர் மூசா. தூன் இந்துவாக பக்கிரிசாமியாக இருந்து முஸ்லிமாக மதம் மாறியவன்.

என்னை என் பிள்ளைகள் விரட்டிவிட்டார்கள்.  அதனால் தான் இப்படி குப்பையில் கிடந்தேன் என்றார் மூச்சு வாங்கியவாறு.

 இந்த மனித நேய சேவை செய்த சிறப்பு சப் இன்ஸ்அபக்டர்களை பொதுமக்கள் பாராட்டித்தான் சென்றார்கள்.
 Source:http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=74231


No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator