Tuesday, May 22, 2012

மன்னார் தனியார் பேருந்து நிலையத்தினுள் வேறு வாகனங்கள் உட்செல்லத் தடை

மன்னார் தனியார் பேருந்து நிலையத்தினுள் வேறு வாகனங்கள் உட்செல்லத் தடை மன்னார், தலைமன்னார் நிருபர்கள்:
மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தினுள் தமது சங்கத்துக்குச் சொந்தமான பதிவிலுள்ள பேரூந்துகளைத் தவிர வேறு எந்த வாகனங்களும் உட்பிரவேசிக்க மன்னார் நகர சபை தடைவிதித்துள்ளதாக மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் ரீ. ரமேஸ் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலங்களாக மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடங்களிலுள் முச்சக்கர வண்டி உட்படப் பல வாகனங்களும் உட்பிரவேசிக்கின்றமையினால் பயணிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்து வந்ததோடு சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் இவற்றை கட்டுப்படுத்தும் முகமாக மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கம் மன்னார் நகர சபையுடன் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டது. இதனையடுத்து மன்னார் நகர சபையிடம் இவ்விடயம் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மன்னார் நகர சபையின் தலைவர் இந் நடவடிக்கையினை மேற்கொண்டார்.
இந்த நிலையில் தற்போது சங்கத்தின் சேவையில் ஈடுபடும் பேரூந்துகளைத் தவிர ஏனைய வாகனங்கள் உட்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் மன்னார் நகர சபையால் மன்னார் தனியார் போக்குவரத்துச் சாலையின் நுழைவாயிலில் அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
[Source: http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=14579:2012-05-22-08-20-51&catid=54:local&Itemid=458]

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator