ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு குறித்து நேரில் ஆய்வு
செய்வதற்காக இந்திய எம்.பி.க்களின் குழு வரும் ஏப்ரல் 16 -அன்று இலங்கைக்கு
செல்ல இருக்கிறது. இப்பயணத்துக்கான ஏற்பாடுகளை வெளியுறவுத்துறை மற்றும்
நாடாளுமன்ற அமைச்சகம் இணைந்து செய்து வருகிறது.
இலங்கை செல்லும் 14 எம்.பி.க்களில் 7 பேர் தமிழ்நாட்டை
சேர்ந்தவர்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக எம்.பி.க்கள்
என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், கிருஷ்ணசாமி, மாணிக்தாகூர்
ஆகிய 4 பேர் இடம் பெற்றுள்ளனர். தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன்
இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் தமிழக
எம்.பி. ரங்கராஜன் இலங்கை செல்கிறார்.
