வெளிநாட்டில் வேலை வாய்ப்பினை பெற்றுத் தருவதாகக் கூறி 2.8 மில்லியன் ரூபாவை மோசடி செய்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிங்கிரியவைச் சேர்ந்த மனோஜ் குமார என்பவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி நால்வரிடம் தலா 7 இலட்சம் ரூபாவைப் பெற்றுள்ளார். இவர் தம்மை ஏமாற்ற முயல்வதை உணர்ந்து கொண்ட நால்வராலும் செய்யப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு நீதிமன்றத்தில் பொலிஸாரால் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/13646----28-----.html
No comments:
Post a Comment