Saturday, April 28, 2012

மன்னாரில் கடந்த 3 வாரத்தில் 20 கிலோ கஞ்சா பிடிபட்டது

மன்னார் நிருபர்

மன்னாரில் கடந்த 3 வார காலங்களுக்குள் 20 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பல சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவங்களில் பேசாலை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்த மட்டும் 10 கிலோ நிறையுடைய கஞ்சா கைப்பற்றப்பட்ட நிலையில் வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகத் தெரவிக்கப்படுகிறது.
தென்னிந்தியாவிலிருந்து படகு மூலம் மன்னாருக்கு ஹெரோயின் மற்றும் கஞ்சா ஆகியன அதிகளவில் எடுத்து வரப்படும் நிலையில் கடற்படையினர் இக்கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் பகுதியில் கடந்த மூன்று வாரங்களுக்குள் கைப்பற்றப்பட்ட 20 கிலோ கஞஅசா தொடர்பில் மன்னார் பொலிஸார் பல்வேறு காணங்களில் விசாரணைகளை மேற்கொண்டவருகின்றனர்.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/13724---3--20---.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator