யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட
மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதையினால் பாதிக்கப்பட்ட தில்லைநாதன்
தனராஜ் என்ற முதலாம் வருட கலைப்பீட மாணவன் படுகாயமடைந்த நிலையில் கடந்த
மார்ச் மாதம் 28ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டார்,இம்மாணவன் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று
வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சிரேஸ்ட மாணவர்களினால்
மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம்
ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொண்ட இந்நிலையில் மூன்றாம் வருட கலைப்பீட
மாணவர்கள் மூவரை பல்கலைக்கழக நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்துவது என
முடிவு செய்யப்பட்டது.
சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதையின்
காரணமாக குறித்த மாணவனின் காதின் செவிப்பறை உடைக்கப்பட்டுள்ளதுடன் கை
மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
source: http://184.107.230.170/~onlineut/News_More.php?id=37567970211114098