வவுனியா- வேப்பங்குளம் பகுதியில்
வீடொன்றின் கிணற்றிலிருந்து, யாழ். பல்கலை கழக 3ம் வருட மாணவியொருவரின்
சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணியளவில், வவுனியா,
வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பின்பக்கமுள்ள கிணற்றிலிருந்தே
குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர். மரணமடைந்தவர் 25 வயதுடைய மரியதாஸ் மரியஜெனற் பௌசியா என
அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் வவுனியாவிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த வேளை, நேற்று மாலை தொடக்கம் காணாமல் போயிருந்தார்.
இவரை தேடும் பணியில் ஈடுபட்ட
உறவினர்கள், இன்று வீட்டுக்கு பின்பக்கம் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக
மீட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வவுனியா காவற்துறையினர் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Source: http://www.saritham.com/?p=57329
No comments:
Post a Comment