Wednesday, April 18, 2012

கொழும்பில் நடமாடும் கண்காணிப்புக் கெமரா முறை

  கொழும்பு நகரில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி கொழும்பை பாதுகாப்புமிக்க நகராக்குவதற்கான வேலைத் திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக நடமாடும் பாதுகாப்பு கண்காணிப்பு கெமரா முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்தார்.

நடமாடும் பாதுகாப்பு கண்காணிப்பு கெமரா பொருத்தப்பட்ட வேன் நேற்று மாலை பொலிஸ் தலைமையக வளாகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அதன்போதே பொலிஸ் மா அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு நகரில் பல்வேறு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 2010 டிசம்பர் 29 ஆம் திகதி பாதுகாப்புக் கெமராக்கள் 110 கொழும்பு நகரில் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
_
source: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37643

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator