இலங்கையில், இவ்வருடம் ஆரம்பித்து, மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் டெங்கு நோய் தாக்கத்திற்கு 9657 பேர் உள்ளாகியதுடன், 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நோயாளர்களில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களெனவும்,ஜனவரி மாதத்தில் நாட்டில் அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு . தெரிவித்துள்ளது.
தற்போது, நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதால் டெங்கு நுளம்பு பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக ஏற்பட்டுள்ளது.எனவே சுற்றுப்புற சூழலை பாதுகாக்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment