Wednesday, April 25, 2012

ஜேர்மனியில் மாணவர்களுக்கு கடுமையான சட்ட திட்டங்கள் விதிப்பு


ஜேர்மனியில் சட்டங்கள் மிக கடுமையாக இருப்பதனால், 80 சதவிகித மாணவர்கள் படித்து முடித்ததும் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
புலம்பெயர்வு மற்றும் ஒருங்கிணைப்பு குறித்த ஜேர்மன் அறக்கட்டளைகளின் நிபுணர் குழு ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இத்தாலி நாடுகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களைப் பற்றி ஆய்வு செய்தனர்.

இவர்கள் திறமையான வெளிநாட்டு மாணவர்களை தமது நாட்டுக்குக் கொண்டுவரும் பல்வேறு நாடுகளின் வழிமுறைகளை கண்டறிந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

இதன் இயக்குநரான குனில்லா ஃபிங்க்கே கூறுகையில், படித்து முடித்த பின்பு ஜேர்மனியில் தங்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான சட்டம் தெரியவில்லை.


அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் அனைத்து வெளிநாட்டு மாணவர்களும் படித்துப் பயன் பெறலாம். அவர்களுக்கு ஜேர்மனியை விட ஆங்கிலமே நன்றாகத் தெரிந்திருக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் வெளிநாட்டு மாணவர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் நீண்ட ஒப்பந்தத்துக்கு அமர்த்தக்கூடாது என்கிறார். ஏனெனில் இவர்களில் 40 சதவீதம் பேர் இன வேறுபாட்டுத் தொல்லையில் சிக்கி அவதிப்படுவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பசுமைக்கட்சியின் கல்வி செய்தித் தொடர்பாளரான காய் கெஹ்ரிங், ஜேர்மனியின் பண்பாடு மக்களை வரவேற்காமல் அச்சுறுத்துகிறது என்றார்.

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator