Friday, April 6, 2012

மட்டக்களப்பு நகரில் மஹாத்மா காந்தி ,பேடர்ன் பவுல் உருவச்சிலைகள் சேதமாக்கப்பட்டு தகர்ப்பு

இந்திய நாட்டின் தேசபிதா அஹிம்சா மூர்த்தி அண்ணல் மஹாத்மா காந்தி மற்றும் சாரணிய இயக்கத்தின் தந்தை பேடர்ன் பவுல் ஆகியோரின் உருவச்சிலைகள் மட்டக்களப்பு நகரில் தாகர்க்கப்பட்டுள்ளன. சிலைகளின் தலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டு ள்ளன. 
 மட்டக்களப்பு நகரில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இவ்உருவச்சிலைகள் தகர்க்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான பி.பிரசாந்தன் மாசிலாமணி உட்பட மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகச்சென்று பார்வையிட்டனர்.

சம்பவ இடத்தில் இராணுவ பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸாh'; விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 


Source: http://www.virakesari.lk

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator