Friday, May 4, 2012

திருக்கோயில்களில் நாளாந்தம் தொடரும் ஒலி பெருக்கிப் பாவனை; மாணவர்கள் கற்க முடியாதுள்ளதாக விசனம்

http://184.107.230.170/~onlineut/Admin/news/Upload/News/b046cf66399dd500c6838a6f36fbf6eb.jpgமல்லாகம் பகுதியில் உள்ள திருக்கோயில்களில் நாளாந்தம் தொடரும் ஒலி பெருக்கிப் பாவனையால் பாடசாலை மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலைமை காணப்படுவதாக பெற்றோர்களும் மாணவர்களும் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.

க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் தம்மை தயார்படுத்திக் கொண்டிருக்கும் சமயத்தில்
இத்தகைய செல்பாட்டை மேற்க்கொள்வது பெரும் இடைஞ்சலாக அமைந்துள்ளது.

அதிகாலையில் ஒலி பெருக்கியின் சத்தம் காணப்படுவதுடன் மீண்டும் மாலை முதல் நள்ளிரவு வரை இந்த சத்தம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக இத்தகைய ஒலி பெருக்கிப் பாவனையால் மாணவர்களுடைய கல்வி குழம்புவதுடன் வயோதிபர்கள் நோயாளர்களும் கூட இரவு நேரம் நிம்மதியாக உறங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

காவற்றுறையினர், ஒலி பெருக்கிப்பாவனைக்கு அனுமதி வழங்கும் போது அதிக ஒலியுடன் நீண்ட தூரத்திற்கு ஒலிபெருக்கியைகட்டி பாவிப்பதை கட்டுப்படுத்தியும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பாவித்துவிட்டு மற்றயை நேரத்தில் அதனை பாவிக்காது ஆலய சுற்றாடலில் உள்ளவாகளுக்கு மட்டும் கேட்கும் வகையில பயன்படுத்தத்தக்கவாறு அனுமதி வழங்குவார்களேயானால் பாடசாலை மாணவர்களின் கல்வி குழம்பாததுடன் வயோதிபர்களும் நோயாளர்களும் நிம்மதியாக உறங்க முடியும் எனவும் பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=195171027205499327

 

Our Note: மன்னாரில் உள்ள மத நிறுவனங்கள் இதனை கருத்தில் எடுக்கும் என எதிர்பார்கின்றோம்

 

 

நேர்த்திக் கடன் செலுத்திய நாய்!

http://dinamani.com/Images/article/2012/5/4/praise.jpgதருமபுரி, மே 4: உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த மூன்றரை வயது நாய், தனது எஜமானுடன் கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் செலுத்திய சம்பவம் பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த கீழ்தும்பலஹள்ளியைச் சேர்ந்தவர் தங்கவேல் (43). விவசாயியான இவர், கால்நடைகளை வளர்த்து வருகிறார். பசு மாட்டிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பாலை தினமும் சுற்றுப் பகுதி குடியிருப்புதாரர்களுக்கும், டீ கடை, பால் வியாபாரிகளுக்கும் வழங்கி வந்தார். 3 ஆண்டுகளுக்கு முன் ஓர் ஆண் நாயை வளர்ப்பதற்காக வாங்கி வந்தார். அதற்கு "மணி' என்று பெயர் சூட்டினார். 6 மாதம் ஆன நிலையில் அந்த நாய், தங்கவேலுடன் நன்றாக பழகிவிட்டது. பால் விற்பனைக்குச் செல்லும் தங்கவேலுடன் ஓடியே வந்ததால், நாய்க்கு தனியாக வண்டி செய்தார் தங்கவேல். மாட்டு வண்டியைப் போல நாய்க்கு ஏற்ற அளவில் மோட்டார் சைக்கிள் சக்கரங்கள் இரண்டை இணைத்து இந்த வண்டியை தயார் செய்தார். இந்த வண்டியில் தங்கவேலையும், பால் கேன்களையும் வைத்து கடந்த 2 ஆண்டுகளாக வலம் வந்தது "மணி'.

6 மாதங்களுக்கு முன் பால் விற்பனைக்கு சென்ற இடத்தில் கார் மோதி மணியின் காலில் பலத்தக் காயம் ஏற்பட்டது.

கால் விரைவில் குணமடைந்தால் காரிமங்கலம் ராமசுவாமி கோயிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதாக வேண்டியிருந்தார் தங்கவேல். பொட்டுமாரனஹள்ளியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் 40 நாள்களாக தொடர் சிகிச்சை பெற்ற மணி, இப்போது நலமுடன் உள்ளது. பெரிய பாரத்தை இழுத்துச் செல்ல முடியாது என்றாலும் தனது வண்டியை பாரம் இல்லாமல் இழுத்துச் செல்லும் திறனுடன் உள்ளது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை நேர்த்திக் கடனையும் செலுத்தியது. தனது வண்டியிலேயே சுவாமிக்கு மாவிளக்கு, தேங்காய், பழம், மாலை உள்ளிட்ட பூஜை பொருள்களை சுமந்து காரிமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து ராமசுவாமி கோயிலுக்குச் சென்ற மணி, தனது எஜமானுடன் நேர்த்திக் கடனைச் செலுத்தியது. இதை அந்தப் பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர்.

Source: http://dinamani.com/Images/article/2012/5/4/praise.jpg

மதுரைக்கு வந்த சோதனை!

மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகா சன்னிதானமாக, சுவாமி நித்யானந்த பரமஹம்சர் நியமிக்கப்பட்டிருப்பது அந்த ஆதீனத்தின் தனியுரிமையாக இருக்கலாம். இந்த நியமனத்துக்குத் தடை விதிக்க நீதிமன்றமும்கூட மறுத்துவிட்டது என்றாலும்கூட, மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர் எடுத்த முடிவு ஆன்மிகவாதிகளைப் புண்படுத்தி இருக்கிறது என்றால், பொதுமக்களைத் திகைப்பிலும் நகைப்பிலும் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு பழம்பெரும் கோயில் கோபுரம் சரிந்து விழுந்தால், பக்தர்களின் மனங்கள் பதறுவதற்கு ஒப்பானது இந்தத் தவறான வாரிசு நியமன முடிவு என்பதுதான் உண்மை.

 

சைவத் திருமடங்கள் சமயத்தையும் தமிழையும் வளர்ப்பதற்காக நிறுவப்பட்டவை. சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு சமயக் குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தொடங்கப்பட்டது மதுரை ஆதீனம் என்பது வரலாறு. இந்த ஆதீனத்தின் தலைவர் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைப்பது என்பது அறிவிப்பின் மூலம் நிகழ்த்தப்படுவதல்ல.

 

சைவப் பாரம்பரியத்தில் வந்த ஒருவர்தான் மடாதிபதியாக முடியும் என்பது மட்டுமல்லாமல், அப்படி மடாதிபதியாக நியமனம் பெறுவதற்குப் பல கட்டங்களைக் கடந்தாக வேண்டும். திருநீறு அணிந்து ருத்திராட்சம் தரித்து பஞ்சாட்சர மந்திரம் முறையாகக் குருமகா சன்னிதானத்திடமிருந்து உபதேசிக்கப்பட்டு தீட்சை பெறுவது முதல் கட்டம். கட்டளைத் தம்பிரானாக மகா சன்னிதானத்தின் ஏவல்களைக் கவனித்து, விசேஷ தீட்சை பெற்றபிறகு பூசைத் தம்பிரானாக நித்திய பூஜைகளைச் செய்து, ஒடுக்கத் தம்பிரானாகத் தன்னை உணரும் தியானப் பயிற்சியிலும் தேர்ந்த பிறகுதான் இளைய பட்டத்திற்கான தகுதியைப் பெற முடியும்.

 

இப்போதைய மதுரை ஆதீனத்தின் 292-வது குரு மகா சன்னிதானம் தனது பூர்வாசிரமத்தில் அருணகிரியாக இருந்து தருமபுரம் ஆதீனத்தில் மூன்று ஆண்டுகள் சைவ சித்தாந்தத்தில் பயிற்சி பெற்றவர். 291-வது மகா சன்னிதானம் வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் அடுத்த வாரிசு பற்றிய சூசகம் பெற்றதால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

 

நித்யானந்தர் சைவ வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டுமே ஓர் ஆதீனத்தின் வாரிசாகப் பட்டம் சூட்டுவதற்குப் போதுமான தகுதி அல்ல. ஏனெனில், சுவாமி நித்யானந்த பரமஹம்சர் ஒரு யோக குரு. வேதம், தாந்தீரிகம், யோகம் பயின்றவர். அவருக்கு சைவ சித்தாந்தத்தில் போதுமான பயிற்சி கிடையாது.

 

பக்தி மார்க்கம் அவரது வழிமுறை அல்ல. அவரது சீடர்கள் பக்தி செய்தாலும், அவரது படத்துக்குத்தான் பூஜை செய்கிறார்களே தவிர, அவர்கள் சைவ சித்தாந்திகள் அல்லர். சுவாமி நித்யானந்தரின் பயிற்சிகள் ஹதயோகம் சார்ந்தவை; சித்தர் வழிமுறை. சித்தர்கள் மனவெளி மனிதர்கள். சாதாரண மனிதர்களின் மனஒழுங்குகள் சித்தர்களிடம் கிடையாது. அவர்களும் அவர்களது பயிற்சிகளும் சமயச் சடங்குகளுக்குக் கட்டுப்படாதவை.

 

ஆனால், மதுரை ஆதீனத்தின் அடிப்படையோ, சடங்குகள், மரபுகள் சார்ந்தது. சாதாரண எளிய மனிதர்களை உருவ வழிபாட்டின் மூலம் மனதைக் கனியச் செய்து, கடைத்தேற்றம் செய்யும் பக்தி மார்க்கம். மேலும், மடாதிபதிகள் என்பவர்கள் அவர்கள் சார்ந்த திருமடங்களில் திரண்ட சொத்துகளைப் பராமரிக்கும் நிர்வாகிகளும்கூட. சைவ சித்தாந்த வகுப்புகளில் தொடங்கி, அவர்களது திருமடத்துக்குச் சொந்தமான, சம்பந்தப்பட்ட ஆலயங்களின் சமயச் சடங்குகளை நிர்வகிக்கும் பொறுப்புகளையும் கொண்டவர்கள்.

 

மதுரை ஆதீனத்தின் திரண்ட சொத்துகளை அபகரிக்க நித்யானந்தர் முயற்சிக்கிறார் என்கிற குற்றச்சாட்டில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. நித்யானந்த தியான பீடத்துக்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. அவற்றின் சொத்துகள் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம். ஆகவே, ஆதீனத்தின் சொத்துகளை அவர் அழித்துவிடுவார் என்ற அச்சம் அர்த்தமில்லாதது.

 

தனது சீடர்கள் உதவியுடன் உலகம் முழுவதிலும் 40 இடங்களில் மதுரை ஆதீனத்தின் கிளைகள் தொடங்கப்படும் என்று பட்டமேற்ற நாளில் சுவாமி நித்யானந்தர் கூறியிருக்கிறார். ஒரு மதம் எவ்வாறு வழிபாட்டுக்கூடங்களின் எண்ணிக்கையை வைத்து அளவிடப்பட முடியாதோ, அதேபோன்று ஒரு மடம் அல்லது ஆதீனத்தின் சமயக் கொள்கையை அதன் கிளைகளின் எண்ணிக்கையால் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது. மனிதர்கள் தேடி வந்தால் அது ஆன்மிகம். மனிதர்களைத் தேடிச் சென்றால் அது வணிகம்.

 

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் குருமகா சன்னிதானமாக நித்யானந்தர் தரிசனத்துக்கு வருவதும் அவரது சீடர்கள் நித்யானந்தரைப் போற்றி கோஷம் எழுப்புவதும் மதுரை ஆதீனத்துக்கு இழைக்கப்படும் அவமானம் என்பதை அவர் ஏன் உணரவில்லை? உலகளாவிய அளவில் தனது ஆன்மிகப் பணியை எடுத்துச் செல்லும் வாய்ப்புள்ள நித்யானந்தர் தன்னை ஏன் மதுரை ஆதீனமாகச் சுருக்கிக் கொள்ள வேண்டும்?

 

ஒவ்வொரு மனிதருக்கும் ஓர் அடையாளம் உள்ளது. பெயர் உள்ளது. முகவரி உள்ளது. ஆதீனங்களும் அப்படித்தான். மதுரை ஆதீனத்துக்கு ஒரு வரலாறும், தனிஅடையாளமும் பாரம்பரியமும் உள்ளது. நித்யானந்தருக்கு என்று ஒரு தனி அடையாளம் இருக்கிறது. பக்தர்கள் இருக்கிறார்கள். நித்யானந்த தியான பீடத்துக்குள் மதுரை ஆதீனம் கரைந்துவிடுவதும் தவறு. மதுரை ஆதீனத்தில் நித்யானந்த தியான பீடம் கலந்துவிடுவதும் தவறு. இவையென்ன அரசியல் கட்சிகளா ஒன்றோடு ஒன்று இணைவதற்கும் பிரிவதற்கும்? இல்லை, இதென்ன வணிக நிறுவனங்களா ஒன்றை ஒன்று விழுங்குவதற்கு?

 

பக்தர்களின் நம்பகத்தன்மையைப் பெறுவதிலும் மக்களோடு மக்களாய் மாற வேண்டிய அணுகுமுறைகளிலும் அக்கறை கொள்ள வேண்டிய மடாலயங்கள், தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கி, கேலிப் பொருளாவது வேதனையிலும் வேதனை. இத்தகைய நடவடிக்கைகளால் ஏற்படும் சலிப்பு, மக்களின் தெய்வ நம்பிக்கையை பலவீனப்படுத்தும். இதை மதுரை ஆதீனம், சுவாமி நித்யானந்தர் இருவருமே புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், இவர்களை சரித்திரம் ருத்திராட்சப் பூனைகள் என்று எள்ளி நகையாடும்!

source: http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=592455&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=


மூளை வளர்ச்சி குறைந்த வர்களுக்கு நல்ல செய்தி

http://tamil.indiansutras.com/img/2012/04/26-sex44-300.jpgசெக்ஸ் என்ற வார்த்தையே ஒரு சிலருக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தும். மூளை, உடல் ஆகியவற்றை உற்சாகப்படுத்தும். அந்த வார்த்தையை போல மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் ஆற்றல் செக்ஸ்சுக்கு உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உடலுறவினால் ஏற்படும் நன்மைகள்/தீமைகள் பத்தி எத்தனையோ ஆய்வுகள், பல்வேறு மருத்துவ இதழ்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. பதின்பருவத்தினர் செக்ஸ் வைத்துக்கொண்டால் மூளை சோர்வடையும் என்று கூட ஒரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. அதேபோல சுவாரஸ்யமான ஆய்வு ஒன்று சமீபத்தில் நடைபெற்றுள்ளது.
மன உளைச்சல்
துன்பகரமான, மன உளைச்சல் தரக்கூடிய செயல்கள் மூளை வளர்ச்சியை பாதிக்கின்றன என்று ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது. அதேபோல் இன்பம், உற்சாகம் தரக்கூடிய செயல்களை செய்தால் மூளை வளர்ச்சியின் மீது ஏதாவது தாக்கம் ஏற்படுகிறதா என்று ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்காக அமெரிக்காவின் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எலிகளை வைத்து பரிசோதனை செய்தனர். வயது வந்த ஆண் எலிகளுடன் உடலுறவில் ஈடுபடத் தகுதியுள்ள பெண் எலிகளை ஒரே பெட்டிக்குள், ஒரு நாளில் இருமுறை அல்லது இரு வாரங்களில் ஒரு முறை என ஒன்றாக வைத்தார்கள்.
அப்படி வைத்த எலிகளின் ரத்தத்தில் இருக்கும் மன உளைச்சலுடன் தொடர்புடைய ஹார்மோனான குளுக்கோகார்டிகாய்ட்ஸின் (glucocorticoids) அளவையும் கணக்கிட்டார்கள். மூளை வளர்ச்சி மீதான துன்பமான நிகழ்வுகளின் தாக்கத்துக்கு இந்த ஹார்மோன் காரணமாயிருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டார்கள் ஆய்வாளர்கள்!
படபடப்பு குறைந்தது
சோதனையின் முடிவில், கன்னி கழியாத எலிகளுடன் ஒப்பிடுகையில், செக்ஸ்/உடலுறவில் ஈடுபட்ட எலிகளின் மூளை வளர்ச்சி அதிகரித்திருந்தது கண்டறியப்பட்டது. பெண் எலிகளுடன் இரு வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே உறவுகொண்ட எலிகளின் உடலில் உளைச்சல் தொடர்பான ஹார்மோன்களின் (stress hormones) அளவு அதிகரித்துவிட்டிருந்ததாம். ஆனால், தினமும் இரு முறை பெண் எலிகளுடன் உறவு கொண்ட ஆண் எலிகளின் உடலில் உளைச்சல் தொடர்பான ஹார்மோன்கள் அதிகரிக்கவே இல்லையாம்!.
உறவில் அதிகம் ஈடுபட்ட எலிகளிடம், எலிகளின் பொதுவான குணமான படபடப்பு, பயம் போன்றவை குறைவாக இருந்ததாம். அவை, புதிய சூழல்களில் விடப்பட்டபோது உணவை எந்த தயக்கமும், பயமும் இல்லாமல் உண்டனவாம்!
நினைவுச்செல்கள் அதிகரிப்பு
குறிப்பாக, மூளையின் நினைவுச் செயல்களுக்கு அடிப்படையாக கருதப்படும் ஹிப்போகேம்பஸ் (hippocampus) என்னும் பகுதியிலுள்ள நரம்புகள், அணுக்களின் எண்ணிக்கை கூடியிருந்ததும் கண்டறியப்பட்டது. துன்பமான நிகழ்வுகளின்போது இந்தப் பகுதியின் அணுக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் தன்மையுடையவை என்பது குறிப்பிடத்தக்கது!
மூளை வளர்ச்சியை பாதிக்கும் தன்மை உடைய உளைச்சல் ஹார்மோன்களின் பாதிப்பை, செக்ஸ் போன்ற மகிழ்ச்சி தரக்கூடிய அனுபவங்களின்மூலம் மாற்றியமைக்க முடியும்” என்று தெரியவந்துள்ளதாக கூறினர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்!

source: http://tamil.indiansutras.com/img/2012/04/26-sex44-300.jpg

வைஷ்ணவியுடன் வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற மதுரை ஆதீனம்

http://www.nakkheeeran.com/UltimateEditorInclude/UserFiles/vaishnavi%20atheenam%202.jpgமதுரை ஆதினத்தின் தனி உதவியாளராக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வைஷ்ணவி(திருமணமகாதவர்) நியமிக்கப்பட்டார். கடந்த 6 மாதத்திற்கு மேலாக மதுரை ஆதினத்திற்கு உதவியாளராக இருந்த வைஷ்ணவி, கடந்த திங்கள்கிழமை அதிகாலை 6 மணிக்கு ஆதின டத்தில் இருந்து காணவில்லை என்று ஆதினமும், நித்தியானந்தாவும் ரகசிய ஆலோசனை செய்து போலீசுக்கு போகாமல் தேடி வந்தார்கள்.

இந்த நிலையில் வைஷ்ணவி மாயமான செய்தி அம்பலமாகிவிட்டதால், பதட்டமானது மதுரை ஆதீன மடம். ஏற்கனவெ நித்தியானந்தாவை மதுரை அடுத்த ஆதீனமாக அறிவித்த சர்ச்சையே இன்னும் ஓயாமல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகும் நிலையில் இந்த பிரச்சனையை வேறு வளரக்கூடாது என்று நினைத்த ஆதீனம், மடத்தை விட்டு சென்ற வைஷ்ண வியிடம் தூது மூலம் சமாதானம் பேசி மடத்துக்கே அழைத்து வந்துவிட்டதாக தகவல் வருகிறது.

சர்ச்சை - நெருக்கடிகளில் இருந்து தப்பித்து நிம்மதி காண, வைஷ்ணவியுடன் மதுரை ஆதீனம் வரும் மே 6ம் தேதி வெளிநாடு தப்பிச்செல்ல ஏற்பாடு செய்து வந்தார்.

ஆனால் நித்திக்கும் எதிராக போராட்டம் வலுத்து வருவதை கண்டு, வெளிநாடு செல்லும் திட்டத்தை கைவிட்டு விட்டாராம் ஆதீனம்.

மதுரை ஆதீனத்தின் அடுத்த ஆதீனமாக நித்தியானந்தாவை அறிவித்ததை வாபஸ் பெறும் வரை ஓயமாட்டோம் என்று உண்ண்ணாவிரதம் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற ஆதீனங்கள் ஒன்றினைந்து வரும் 12ம் தேதி நித்தி - மதுரை ஆதீனத்திற்கு எதிர்ப்பு தெரிவிது மாபெரும் கண்டன பேரணி பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் வெளிநாடுக்கு தப்பிச்சென்றுவிட்டால் பிரச்சனை இன்னும் பெரிதாகும் என்று உணர்ந்த மதுரை ஆதீனம் அந்த முடிவை கைவிட்டுவிட்டதாக தகவல் வருகிறது.

-முகில்

Source: http://www.nakkheeeran.com/UltimateEditorInclude/UserFiles/vaishnavi%20atheenam%202.jpg

\

வேப்ப மரத்திலிருந்து பால் வடிகிறது

http://www.thinakkural.com/images/stories/ArtiImage/news/local/komba_tree_.jpgஅநுராதபுரம் நிருபர்

மிஹிந்தலைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஞ்சிகுளம் பகுதியில் உள்ள பத்மசிறி என்பவரது வீட்டுத் தோட்டத்தில் வேப்ப மர மொன்றிலிருந்து திடீரென பால் வடிய ஆரம்பித்ததால் இம்மரத்தை பார்வையிடப் பெருமளவானவர்கள் வந்தவண்ணமுள்ளனர்.
அணில் உட்பட பல பிராணிகளும் வேப்பம் மரத்திலிருந்து வெளியேறும் பாலைக் குடித்ததால் வீட்டு உரிமையாளரும் பாலை எடுத்து குடித்துப் பார்த்தபோது கசப்புத்தன்மையுடன்கூடிய சுவையாக இருந்துள்ளது. வேப்ப மரம் மருந்து மூலிகை என்பதால் இப்பகுதிக்கு வரும் பலரும் இம்மரத்திலிருந்து வெளியேறும் பாலை சுவைத்துப் பார்க்கின்றனர்.

source: http://www.thinakkural.com/images/stories/ArtiImage/news/local/komba_tree_.jpg

மன்னார் திருக்கேதிஸ்வர திருத்தல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்காண அனுமதிப்பத்திரம் இரத்து


http://www.seithy.com/siteadmin/upload/buddha-bahavan-jaffna150.jpgஜனாதிபதியின் ஆலோசகரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரஜி விஜய சிங்க உள்ளிட்ட குழுவினர் நேற்றையதினம் (03-05-2012) வியாழக்கிழமை மன்னாருக்கு வந்த நிலையில் புதிதாக புத்தர் சிலை வைக்கப்பட்ட திருக்கேதிஸ்வர பகுதிக்குச் சென்ற போது அங்கு சென்ற மன்னார் ஊடகவியலாளர்கலான எஸ்.ஆர்.லெம்பேட் மற்றும் ஜேசப் பெணான்டோ ஆகியோருடன் ஜனாதிபதியின் ஆலோசகரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரஜி விஜய சிங்க முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த புத்தர் சிலைக்காண அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்ட நிலையில் அதனை பார்வையிடச் சென்ற போது அங்கு நின்ற ஊடகவியலாளர்கள் இருவரையும் கண்டு விரக்தி அடைந்த ஜனாதிபதியின் ஆலோசகர் குறித்த இரண்டு பேரையும் அழைத்து கடுமையாக எச்சரித்ததோடு பௌத்த தர்மத்தில் தலையிடக்கூடாது என எச்சரித்துள்ளனர்.
பின் நீண்ட நேரம் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டதன் பின் குறித்த ஊடகவியலாளர்கள் விடப்பட்டனர். குறித்த சம்பவத்தின் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மௌனம் காத்து நின்றார்.
-(மன்னார் நிருபர்)-

http://www.thinakkural.com/news/all-news/local/13963----10----.html

Sunday, April 29, 2012

சோனியாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய பெண்ணுக்கு அடி

சோனியாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய பெண்ணுக்கு அடி
போலீசார் சரமாரியாக தாக்கியதால் மக்கள் கோபம்

கர்நாடக மாநிலம் தும்கூரில், காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், அவருக்கு எதிராக பெண் ஒருவர் கறுப்புக் கொடி காட்டியதால், பெரும் பரபரப்பு உருவானது. கறுப்புக் கொடி காட்டிய அந்தப் பெண்ணை போலீசார் சரமாரியாக தாக்கியதால், மக்கள் கோபம் அடைந்தனர்.

Papamottai GTMS School Citizen’s Rights awareness Programme

Mn Cit Com,
29-04-2012

Dear Mr.Sugumar/ Ms.Sarumathy.

Progress Report of Papamottai GTMS School Citizen’s Rights awareness Programme.
As scheduled we conducted the Sixth Awareness Programme at Manthai West AGA division at Papamottai GTMS School on 29/04/12 at 9 a.m to 4.p.m around 31 participants from seven villages attended. Among them WRDS, RDS, Religious institution members ,Released Cadres, Disabled people, Widows and resettled people from India .
The Three resource personal conducted the Fundamental Rights, Children & Women rights, IDP & Disabled Rights, How to obtain Important Documents such as Birth, Death and Marriage certificates, Register those person who returned from India etc.
There was group discussion, group work, Presentation from group leaders, Question time, and Evolution.

MANNAR SXBC SOUND PRODUCTION

உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவனை கொல்ல முயற்சி: கள்ளக்காதலனுடன் மனைவி கைது

உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவனை கொல்ல முயற்சி: கள்ளக்காதலனுடன் மனைவி கைது

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கள்ளிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் முனியப்பன் (வயது 28). இவரது மனைவி ஆனந்தி (23). ஆனந்திக்கும், அதேபகுதியை சேர்ந்த சாமண்ணன் மகன் மாதையன்(25) என்பவருக்கும் இடையே கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு தண்டனைக் குறைப்பு இல்லை – சிறைச்சாலைகள் ஆணையாளர்

Sarath_Fonseka
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டவர் என்பதால், சிறைக்கைதிகளுக்கு நன்னடத்தை அடிப்படையில் வழங்கப்படும் தண்டனைக்குறைப்புக்கு விண்ணப்பிக்க முடியாது என்று சிறிலங்காவின் சிறைச்சாலைகள் ஆணையாளர் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
“தனது மருமகனின் நிறுவனத்துக்கு முறைகேடாக கேள்விப்பத்திர உத்தரவு வழங்கிய குற்றச்சாட்டில், சிறிலங்காவின் இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேகாவுக்கு 30 மாத சிறைத்தண்டனை விதித்தது.
இந்த சிறைத்தண்டனை 2010 ஒக்ரோபரில் ஆரம்பமானது. ஆண்டு மார்ச் மாதமே இது முடிவடைகிறது.

காதல் அதிகரிக்க பேசாதீங்க..

loveஆணோ அல்லது பெண்ணோ, பேசுவதை விட தொடுவதுதான் அவர்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க உதவுகிறதாம்.
காதல் மொழியை எவ்வளவுதான் பேசினாலம் கிளர்ச்சி பிளஸ் உணர்ச்சி என்பது மிக மிக மெதுவாகவே தூண்டப்படுகிறதாம். அதேசமயம், லேசான ஒரு தொடுதல் பல ஆயிரம் காதல் உணர்வுகளை ஒரு சேரத் தருகிறதாம். மேலும் தொடுதல் மூலம் உணர்வுகள் அதிகரித்து, உறவுகளும் வலுப்பட உதவுகிறதாம்.
இதுகுறித்து ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உங்களது ஆண் நண்பர்களையோ அல்லது பெண் தோழிகளையோ உரிய இடத்தில் தொடுவதன் மூலம் நீங்கள் நினைப்பதை அடைய முடியும். அவர்களுக்கு உணர்ச்சிகள் விரைவாக தூண்டப்படும். மேலும் உங்களின் உறவுகளும் வலுப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
madurai-aadheenam-muttமதுரை: மதுரை ஆதீனத்தின் மகா குரு சன்னிதானமாக நித்தியானந்தாவை அறிவித்ததற்கு இந்து அமைப்புகள் மதுரையில் போராட்டம் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது. மதுரை ஆதீனத்திற்குள் புகுந்த இந்து மக்கள் கட்சியினர், திருஞானசம்பந்தரின் பாடல்களைப் பாடினர். பதிலுக்கு நித்தியானந்தாவின் புகழை அவரது ஆதரவாளர்கள் பாடியதால் மோதல் சூழல் ஏற்பட்டது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கப் பெண்களிடம் சிக்கப்போகும் பீரிஸ் குழு

வரும் மே 18ம் நாள் அமெரிக்க இராஜங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனை சந்திப்பதற்காக அமெரிக்கா செல்லும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான சிறிலங்கா குழுவினர் ஒபாமா நிர்வாகத்தின் முக்கியமான பல அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளனர்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, நாமல் ராஜபக்ச, சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோரும் அமெரிக்கா செல்கின்றனர்.

இவர்கள் வொசிங்டனில் சந்திக்கத் திட்டமிட்டுள்ள – சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவருமே, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கியமான மூத்த பெண் இராஜதந்திரிகளாவர்.

வடக்கு கிழக்கை கண்காணிக்க டில்லியில் விசேட அலுவலகம்.

வடக்கு கிழக்குப் பகுதிகளில் நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகளையும் கண்காணிப்பதற்குப் புதுடில்லியில் அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் இந்திய அரசின் கவனம் திரும்பியுள்ளதாகத் தெரியவருகிறது.

அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவியான சுஷ்மா சுவராஜ் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்தபோது இது தொடர்பான யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார். இதற்கமையப் புதுடில்லியில் இந்தக் கண்காணிப்பு அலுவலகத்தை நிறுவுவது குறித்து இந்திய அரசு கவனம் செலுத்தியுள்ளதாகப் புதுடில்லி இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

தேயிலை ஏற்றுமதியில் வில்லங்கம் புதிய திட்டத்தால் ஆபத்து என அச்சம் _

  வெளிநாடுகளிலிருந்து விலை குறைந்த தரமற்ற தேயிலையை இறக்குமதி செய்து இலங்கை தேயிலையுடன் கலந்து வெளிநாடுகளுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்யும் திட்டமொன்றை இலங்கை தேயிலை கவுன்சில் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

வியட்நாம், இந்தோனேஷியா, கென்யா போன்ற நாடுகளில் இருந்து விலை குறைந்த தேயிலையை இறக்குமதி செய்து இலங்கைத் தேயிலையுடன் கலந்து மீண்டும் ஏற்றுமதி செய்ய தேயிலை கவுன்சில் ஆராய்ந்தபோது இதை எதிர்த்து தேயிலை கவுன்சிலின் அப்போதைய தலைவர் மெரில் பெர்னாண்டோ தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்தார்.

வன்னி மாவட்ட சுகாதாரத் துறை பணி நியமனத்தில் அரசியல் தலையீடு; கண்டித்து கூட்டமைப்பு போராட்டம் நடத்தவுள்ளது

வன்னி மாவட்ட சுகாதாரத் துறையில் பணி நியமனம் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள அரசியல் தலையீட்டைக் கண்டித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வன்னி நிலம் தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டமும் உண்ணாவிரதப் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

வன்னி மாவட்ட வைத்தியசாலைகளில் சுமார் 15 வருடங்களாக போருக்கு மத்தியிலும் தற்காலிக அடிப்படையில் சேவையாற்றிய ஊழியர்களை புறந்தள்ளிவிட்டு அரசியல் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்ததுடன், உரிய நடவடிக்கை எடுக்குமாறு, வட மாகாண ஆளுநரிடம், கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்திருந்தார்.

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator