Friday, May 4, 2012

மன்னார் திருக்கேதிஸ்வர திருத்தல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்காண அனுமதிப்பத்திரம் இரத்து


http://www.seithy.com/siteadmin/upload/buddha-bahavan-jaffna150.jpgஜனாதிபதியின் ஆலோசகரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரஜி விஜய சிங்க உள்ளிட்ட குழுவினர் நேற்றையதினம் (03-05-2012) வியாழக்கிழமை மன்னாருக்கு வந்த நிலையில் புதிதாக புத்தர் சிலை வைக்கப்பட்ட திருக்கேதிஸ்வர பகுதிக்குச் சென்ற போது அங்கு சென்ற மன்னார் ஊடகவியலாளர்கலான எஸ்.ஆர்.லெம்பேட் மற்றும் ஜேசப் பெணான்டோ ஆகியோருடன் ஜனாதிபதியின் ஆலோசகரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரஜி விஜய சிங்க முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த புத்தர் சிலைக்காண அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்ட நிலையில் அதனை பார்வையிடச் சென்ற போது அங்கு நின்ற ஊடகவியலாளர்கள் இருவரையும் கண்டு விரக்தி அடைந்த ஜனாதிபதியின் ஆலோசகர் குறித்த இரண்டு பேரையும் அழைத்து கடுமையாக எச்சரித்ததோடு பௌத்த தர்மத்தில் தலையிடக்கூடாது என எச்சரித்துள்ளனர்.
பின் நீண்ட நேரம் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டதன் பின் குறித்த ஊடகவியலாளர்கள் விடப்பட்டனர். குறித்த சம்பவத்தின் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மௌனம் காத்து நின்றார்.
-(மன்னார் நிருபர்)-

http://www.thinakkural.com/news/all-news/local/13963----10----.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator