
மிஹிந்தலைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஞ்சிகுளம் பகுதியில் உள்ள பத்மசிறி என்பவரது வீட்டுத் தோட்டத்தில் வேப்ப மர மொன்றிலிருந்து திடீரென பால் வடிய ஆரம்பித்ததால் இம்மரத்தை பார்வையிடப் பெருமளவானவர்கள் வந்தவண்ணமுள்ளனர்.
அணில் உட்பட பல பிராணிகளும் வேப்பம் மரத்திலிருந்து வெளியேறும் பாலைக் குடித்ததால் வீட்டு உரிமையாளரும் பாலை எடுத்து குடித்துப் பார்த்தபோது கசப்புத்தன்மையுடன்கூடிய சுவையாக இருந்துள்ளது. வேப்ப மரம் மருந்து மூலிகை என்பதால் இப்பகுதிக்கு வரும் பலரும் இம்மரத்திலிருந்து வெளியேறும் பாலை சுவைத்துப் பார்க்கின்றனர்.
source: http://www.thinakkural.com/images/stories/ArtiImage/news/local/komba_tree_.jpg
No comments:
Post a Comment