அழகிரி
ஆதரவாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம், கட்சியில் புயலைக்
கிளப்புவதற்கு முன், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வீட்டுக்குள் புயல்
வீசி வருகிறது. ஸ்டாலின் மதுரைக்கு வந்த பிரச்னையில் தி.மு.க., தென் மண்டல
செயலர் அழகிரியின் ஆதரவாளர்கள், 17 பேருக்கு, தி.மு.க., தலைமை விளக்கம்
கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
அடுத்து என்ன: இதையடுத்து, கடும் கோபமான அழகிரி, மதுரை வந்ததும், கட்சியில், யாருக்கும் வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று, கட்சி சட்ட திட்டத்தில் இல்லை என்று பதிலளித்தார். அவரது ஆதரவாளர்கள், 17 பேரும், கட்சித் தலைமைக்கு, தனித்தனியே விளக்கம் அளித்து பதில் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து கட்சி என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பு: இந்த நடவடிக்கைக்குப் பின், ஸ்டாலின் - அழகிரி இடையே எழுந்துள்ள மோதலில், வெல்லப் போவது யார் என்ற கேள்விக்கு பதிலும் அடங்கியுள்ளது. 17 பேர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், ஸ்டாலின் விட மாட்டார்; நடவடிக்கை எடுத்தால், அழகிரி சும்மா இருக்க மாட்டார் என்ற நிலையில், இருதலைக்கொள்ளி எறும்பாக, கருணாநிதி தவித்து வருகிறார்.
பிள்ளைகளும் நீங்களும்... : இந்த விவகாரம் கோபாலபுரம் வீட்டில், நேற்று புயலாக வெடித்ததாகக் கூறப்படுகிறது. தலைமைக்கு மிக நெருக்க மான கட்சிப் பிரமுகர் ஒருவர், இதுபற்றி கூறும்போது, தலைவர் இந்த விவகாரத்தை, சமாதானமாகக் கொண்டு செல்ல, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழகிரிக்கு போன் செய்தார். அவர், தலைவருடன் பேச மறுத்து விட்டார். தயாளு அம்மாளிடம் பேசிய அழகிரி, தலைவரை ஒருமையில் பேசியதாகவும் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில், ஸ்டாலினும் கலந்து கொண்டு, தடித்த வார்த்தைகள் பரிமாறப்பட்டன. இதில், தலைவர் நாற்காலியில் இருந்து கீழே விழுந்துள்ளார். பிள்ளைகளும், நீங்களும், மொகரைக்கட்டைகளும்... என்று, தயாளு அம்மாளிடம் கோபமாக பேசிவிட்டு, காலை டிபன் சாப்பிட மறுத்து விட்டார். தயாளு அம்மாள் கோபித்துக் கொண்டு, நீங்க சாப்பிட்டா சாப்பிடுங்க... இல்லேன்னா போங்க... என்று கூறிவிட்டு, வீட்டின் கீழே வந்துள்ளார். இந்த சண்டை, எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார்.
பெயர் வெளியிட விரும்பாத, மற்றொரு தி.மு.க., நிர்வாகி கூறும்போது, தலைவரின் கட்டுப்பாட்டில் தி.மு.க., இல்லை. குடும்பமும், அவரது கட்டுப்பாட்டில்இல்லை; ஆளுக்கொரு பக்கம் ஆதிக்கம் செலுத்துகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று, எங்களுக்கே தெரியவில்லை என்று, வருத்தத்துடன் கூறினார்.
http://tamil.yahoo.c...-175100686.html
அடுத்து என்ன: இதையடுத்து, கடும் கோபமான அழகிரி, மதுரை வந்ததும், கட்சியில், யாருக்கும் வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று, கட்சி சட்ட திட்டத்தில் இல்லை என்று பதிலளித்தார். அவரது ஆதரவாளர்கள், 17 பேரும், கட்சித் தலைமைக்கு, தனித்தனியே விளக்கம் அளித்து பதில் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து கட்சி என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பு: இந்த நடவடிக்கைக்குப் பின், ஸ்டாலின் - அழகிரி இடையே எழுந்துள்ள மோதலில், வெல்லப் போவது யார் என்ற கேள்விக்கு பதிலும் அடங்கியுள்ளது. 17 பேர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், ஸ்டாலின் விட மாட்டார்; நடவடிக்கை எடுத்தால், அழகிரி சும்மா இருக்க மாட்டார் என்ற நிலையில், இருதலைக்கொள்ளி எறும்பாக, கருணாநிதி தவித்து வருகிறார்.
பிள்ளைகளும் நீங்களும்... : இந்த விவகாரம் கோபாலபுரம் வீட்டில், நேற்று புயலாக வெடித்ததாகக் கூறப்படுகிறது. தலைமைக்கு மிக நெருக்க மான கட்சிப் பிரமுகர் ஒருவர், இதுபற்றி கூறும்போது, தலைவர் இந்த விவகாரத்தை, சமாதானமாகக் கொண்டு செல்ல, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழகிரிக்கு போன் செய்தார். அவர், தலைவருடன் பேச மறுத்து விட்டார். தயாளு அம்மாளிடம் பேசிய அழகிரி, தலைவரை ஒருமையில் பேசியதாகவும் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில், ஸ்டாலினும் கலந்து கொண்டு, தடித்த வார்த்தைகள் பரிமாறப்பட்டன. இதில், தலைவர் நாற்காலியில் இருந்து கீழே விழுந்துள்ளார். பிள்ளைகளும், நீங்களும், மொகரைக்கட்டைகளும்... என்று, தயாளு அம்மாளிடம் கோபமாக பேசிவிட்டு, காலை டிபன் சாப்பிட மறுத்து விட்டார். தயாளு அம்மாள் கோபித்துக் கொண்டு, நீங்க சாப்பிட்டா சாப்பிடுங்க... இல்லேன்னா போங்க... என்று கூறிவிட்டு, வீட்டின் கீழே வந்துள்ளார். இந்த சண்டை, எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார்.
பெயர் வெளியிட விரும்பாத, மற்றொரு தி.மு.க., நிர்வாகி கூறும்போது, தலைவரின் கட்டுப்பாட்டில் தி.மு.க., இல்லை. குடும்பமும், அவரது கட்டுப்பாட்டில்இல்லை; ஆளுக்கொரு பக்கம் ஆதிக்கம் செலுத்துகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று, எங்களுக்கே தெரியவில்லை என்று, வருத்தத்துடன் கூறினார்.
http://tamil.yahoo.c...-175100686.html
No comments:
Post a Comment