Thursday, May 24, 2012

மன்னார் ஆயருக்கான மக்கள் ஆதரவுக் கூட்டத்தை நடாத்த முயன்ற 5 மதகுருமாருக்கு நீதிமன்றம் அழைப்பு:-

judge_CI.bmpமன்னார் தேவாலய சூழலில், மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு மக்கள் ஆதரவை தெரிவிக்கும் கூட்டம் ஒன்றை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பாடு செய்ய முன்நின்று செயற்பட்டனர் என காவற்துறையினர் கருதும் மன்னார் பிரதேசத்தில் உள்ள 5 கத்தோலிக்க மதகுருமாரை மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நேற்று அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இவர்கள் நாளைய தினம் காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமன்னார் டெஸ்மன் குலாஸ், ஆயரின் உதவியாளர் விக்டர், வங்காலை ஜெயபாலன் குரூஸ், முருங்கன் அருள்ராஜ், மடு தேவாலயத்தின் நிர்வாகி எமலியானுஸ்பிள்ளை ஆகிய மதகுருமாருக்கே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி கூட்டம் காரணமாக பிரதேசத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு இடையில் ஐக்கியமின்மை ஏற்படும், பிரதேசத்தின் அமைதிக்கு பங்கம் ஏற்பட காரணமாக அமையும், வாகன போக்குவரத்துக்கு தடையேற்படும், அமைச்சர் ஒருவரின் உருவபொம்மை எரிக்கப்படக் கூடும் ஆகிய காரணங்களின் அடிப்படையில் இந்த மதகுருமார் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் தேவலாய வளாகத்தில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது எனவும் வேறு இனங்களுக்கு இடையூறு ஏற்படாது எனவும் மன்னார் கத்தோலிக்க திருச்சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் வீதிகளில் பேரணிகளோ, ஊர்வலங்களோ ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால் கூட்டத்தை நடத்துவதற்கு காவற்துறையினரிடம் அனுமதியை பெறவில்லை எனவும் திருச்சபை தெரிவித்தள்ளது.
[Source:http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/77917/language/ta-IN/article.aspx]


No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator