Saturday, April 28, 2012

இலங்கையைத் தொழிலாளர்களுக்கு கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா


இலங்கையைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவாக கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, சுவிஸர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக அந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக பணியகத்தின் தலைவர் அமல் சேனாலங்காதீர தெரிவித்துள்ளார்.
தாதியர்கள், பொறியலாளர்கள், விடுதி, விமான நிலையம், வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றவும் இலங்கையர்கள் இந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இதற்கு தேவையான பயற்சிகளை வழங்க பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
.

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator