Wednesday, April 18, 2012

செல்போனுக்கு சார்ஜ் செய்த வாலிபர் பலி

சித்தூர் மாவட்டம் சதும் மண்டலத்தைச் சேர்ந்தவர் சுதாகர்ரெட்டி (32), விவசாயி. இவர் நேற்று பிற்பகல் தனது வீட்டில் செல்போனுக்கு சார்ஜ் செய்வதற்காக சார்ஜரை சுவிட்ச்போர் டில் பொருத்தினார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதாக தெரிகிறது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவரது தலை சுவற்றில் மோதியது. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சதும் அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Source: http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=74278

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator