Monday, April 23, 2012

இலங்கைத் தமிழ் தலைவர்கள் தனி ஈழத்தை கோரவில்லை – ரங்கராஜன்

இலங்கைத் தமிழ் தலைவர்கள் தனி ஈழத்தை கோரவில்லை என இந்திய மாக்சிச கம்யூனிஸட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரீ.கே. ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென்றே தமிழ்;த் தலைவர்கள் விரும்புகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட இலங்கையின் சகல அரசியல் தலைவர்களும் ஐக்கிய இலங்கை என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


ஈழம் பற்றி பேசவில்லை எனவும், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் என ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பிரதிநிதிகள் குழுவில் ரங்க்ராஜன் அங்கம் வகித்திருந்தார்.
நான் ஓர் இலங்கையன், இலங்கையனாகவே சாக விரும்புகின்றேன் என சம்பந்தன் மேலும் கூறினார் என ரங்கராஜன் குறிப்பிட்டுள்ளார்.
http://www.globaltam...IN/article.aspx

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator