த.மனோகரன்
தமிழரின் சொத்து கல்வி என்கின்றோம். அதிலும் யாழ்ப்பாணத்தவரின் முதன்மைச் சொத்து கல்வியே தான் என்று அடித்துக் கூறுகின்றோம். அன்றிலிருந்தது அந்த உயர்நிலை. இன்று யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்வி நிலை பின்தள்ளப்பட்டு, புறக்கணிக்கப்பட்டுள்ளதன் பெறுபேறுகளைத் தேசிய ரீதியிலான பரீட்சைப் பெறுபேறுகளைக் கொண்டு கணிப்பிட முடிகின்றது. யாழ்ப்பாணக் கல்வி, யாழ்ப்பாணத் தமிழரின் கல்வி இன்று நாட்டின் பின்தள்ளப்பட்டுள்ளமையை மதிப்பீடுகளும் வெளிப்படுத்துகின்றன.
இந்திய முன்னாள் ஜனாதிபதிக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் எலிசபெத் மகாராணியாருக்கும் கற்பித்த பெருமை யாழ்ப்பாணத்தவருக்கு உண்டு என்று பெருமை பேசிக்கொண்டிருந்தால் போதாது. இலங்கையில் ஏனைய
சமூகத்தவர்கள் யாழ்ப்பாணத்தவரின் கல்வியின் உயர்வை, மேன்மையைக் கண்டு பொறாமை கொண்ட காலம் போய் இன்று இலங்கையின் கல்வியில் பின்னடைந்த மாவட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டமும் ஒன்று என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அவலம் தீவிர சிந்தனைக்குரியது. தலை நிமிர்ந்து பெருமையுடன் திகழ்ந்த யாழ்ப்பாணக் கல்வி இன்று தொய்ந்து துவண்டுவிட்டது என்பதை வேதனையுடன் ஏற்றேயாக வேண்டும்.
யாழ்ப்பாணக் கல்விச் சமூகம் இன்றைய நிலையைச் சீர்செய்ய திட்டமிட வேண்டும். ஆக்கபூர்வமான செயற்பாட்டில் ஈடுபட வேண்டும். ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை, கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை ஆகியவற்றின் வருடாந்த பெறுபேறுகளை ஆய்வு செய்யும் போது படிப்படியாகக் கீழ் நோக்கியே கல்வித்தரம் நகர்ந்து வருதை அவதானிக்க முடிகின்றது.
கடந்த கால சூழ்நிலைகளை மட்டும் இதற்கான ஏதுவாகக்கூறிக்கொண்டிருக்க முடியாது. யாழ்ப்பாணக் கல்வி நிர்வாக ஒழுங்கமைப்பில் பாரிய குறைபாடுகளும் இதற்கான காரணிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படக்கூடியதாயுள்ளது. அத்துடன் தேவையற்ற வெளியார் தலையீடுகளும் கல்வித்துறையின் பின்னடைவுக்கான ஒதுக்களிலொன்றாகக் காணப்படுகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்திலே வலிகாமம், யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் என ஐந்து கல்வி வலயங்களும் அவற்றிலடங்கும் பதினைந்து கல்விக் கோட்டங்களும் மொத்தமாக நானூற்று தொண்ணூறு (490) பாடசாலைகளும் உள்ளன. கடந்த ஆண்டு இறுதி நிலையின் படி நானூற்று இருபது பாடசாலைகள் மட்டுமே இயங்குவதாயும் எழுபது பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலுள்ளதாகவும் கணிப்பீடுகள் வெளிப்படுத்துகின்றன.
யாழ்ப்பாணக் கல்வி வலயம்
யாழ்ப்பாணக் கல்வி வலயத்திலுள்ள நூற்றி பதின்மூன்று பாடசாலைகளில் பதினான்கு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் தற்போது இயங்கும் பாடசாலைகள் தொண்ணூற்றொன்பது (99) மட்டுமேயாகும். இக்கல்வி வலயத்தில் யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய் ஆகிய கல்விக் கோட்டங்கள் உள்ளன. அவற்றில் முறையே 28,40,45 என்ற எண்ணிக்கையான பாடசாலைகளடங்குகின்றன. இவற்றில் யாழ்ப்பாணக் கல்விக் கோட்டத்தில் எட்டுப் பாடசாலைகளும் கோப்பாய் கல்விக் கோட்டத்தில் ஆறுமாகப் பதின்நான்கு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலுள்ளமை வெளிப்படுகின்றது.
இவ்வலயத்தில் அதிபர்கள் தரம் கொண்ட நூற்றிப் பதின்மூன்று பேர் இருக்க வேண்டிய போதும் தற்போது அத்தரத்திலிருப்போர் எண்பத்து நான்கு பேர் மட்டுமே.
வலிகாமம் வலயம்
தெல்லிப்பளை, சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில் ஆகிய நான்கு கல்விக் கோட்டங்களை உள்ளடக்கிய இக்கல்வி வலயத்தில் நூற்றி ஐம்பது பாடசாலைகளிலிருந்த போதும் தற்போது இயங்கும் பாடசாலைகள் நூற்றி இருபத் தொன்பது மட்டுமே என்பது கணிப்பிடப்பட்டுள்ளது. தெல்லிப்பளைக் கல்விக் கோட்டத்தில் பதினேழு பாடசாலைகளும் உடுவில் கோட்டத்தில் மூன்றும் சண்டிலிப்பாயில் ஒன்றுமாக மொத்தம் இருபத்தொரு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலுள்ளன.
அதிபர் தரம் கொண்ட ஆளணி நூற்றி நாற்பத்தி இரண்டாக இருக்க வேண்டிய நிலையில் அத்தரத்தில் எண்பத்தொருபேரே இருப்பது தெரிய வந்துள்ளது.
வலிகாமம் கல்வி வலயத்தில தெல்லிப்பளையில் இருபத்தெட்டு பாடசாலைகளும் சண்டிலிப்பாயில் நாற்பது பாடசாலைகளும் சங்கானையில் முப்பத்தொரு பாடசாலைகளும் உடுவிலில் முப்பது பாடசாலைகளுமே தற்போது இயங்குகின்றன.
வடமராட்சி கல்வி வலயம்
இக்கல்வி வலயத்தில் பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி ஆகிய மூன்று கல்விக் கோட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறைக் கல்விக் கோட்டத்திலுள்ள முப்பத்துமூன்று பாடசாலைகளில் இரு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் முப்பத்தொரு பாடசாலைகளே இயங்குகின்றன. அதேபோல் கரவெட்டி கல்விக் கோட்டத்திலுள்ள முப்பத்து மூன்று பாடசாலைகளில் இரண்டு மூடப்பட்ட நிலையில் முப்பத்தொன்று மட்டுமே இயங்குகின்றன.
மருதங்கேணி கல்விக் கோட்டத்தில் அடங்கும் பாடசாலைகளின் எண்ணிக்கை பத்தொன்பதாகும். அவற்றிலே இயங்குபவை பதினேழாகவும் மூடப்பட்ட நிலையிலுள்ளவை இரண்டு எனவும் அறிக்கையிடப்பட்டுள்ளன.
வடமராட்சிக் கல்வி வலயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் தர ஆளணியின் எண்ணிக்கை எண்பத்தாறாக இருந்த போதிலும் தற்போது அத்தரத்தில் ஐம்பத்திமூன்று பேரே உள்ளமை தெரியவந்துள்ளது.
தென்மராட்சி கல்வி வலயம்
தென்மராட்சிக் கல்வி வலயத்திற்குட்பட்டதாக சாவகச்சேரி கல்விக் கோட்டம் மட்டுமேயுள்ளது. இக்கல்விக் கோட்டத்தில் மொத்தமாக அறுபத்தாறு பாடசாலைகள் அடங்குகின்றன. இருந்த போதிலும் ஒன்பது பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் ஐம்பத்தேழு பாடசாலைகள் மட்டுமே இயங்குவதும் ஐம்பத்தெட்டு நிரந்தர அதிபர்களுக்கான ஒதுக்கீடு இருந்த போதிலும் முப்பத்தாறு அதிபர் தரம் கொண்டவர்கள் மட்டுமே செயற்படுகின்றனர்.
தீவகக் கல்வி வலயம்
தீவகக் கல்வி வலயமானது வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, காரைநகர் ஆகிய நான்கு கல்வி கோட்டங்களை உள்ளடக்கியதாக விளங்குகின்றது. இவற்றில் முறையே 34,18,10,14 என மொத்தம் எழுபத்தாறு பாடசாலைகள் அடங்கியிருந்த போதும் மொத்தமாக இருபது பாடசாலைகள் செயலிழந்த நிலையில் மூடப்பட்டுள்ளமை தெரியவருகின்றது.
வேலணை கல்விக் கோட்டத்தில் பன்னிரெண்டு பாடசாலைகளும், ஊர்காவற்றுறையில் இரண்டும், நெடுந்தீவில் இரண்டும் காரை நகரில் நான்குமாக மூடப்பட்டுள்ள இருபது பாடசாலைகளுமுள்ளன.
ஐம்பது நிரந்தர அதிபர்களுக்கான ஒதுக்கீடு இருக்கும் போது இருபத்தைந்து பேர் மட்டுமே அத்தரத்தைக் கொண்டவர்களாயுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மொத்த அரசினர் பாடசாலைகள் 490 இற்குப் புறம்பாக ஆறு தனியார் பாடசாலைகளும் செயற்படுகின்றன. குறிப்பிட்ட அரசினர் பாடசாலைகளில் ஏழு பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மத்திய கல்வியமைச்சின் நிர்வாகத்தின் கீழ் செயற்பட, ஏனையவை மாகாண கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டிற்குட்பட்டவையாக உள்ளன.
தரம் 3 எனப்படும் ஆரம்பப் பாடசாலைகளாக யாழ்.மாவட்டத்தில் இருநூற்றி முப்பத்தைந்து பாடசாலைகள் உள்ளபோதும் நூற்றி எழுபத்தைந்து பாடசாலைகள் மட்டுமே இயங்குவதும் அறுபது பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணம் வரை வகுப்புகள் கொண்ட தரம் 2 எனத் தரப்படுத்தப்பட்டுள்ள நூற்று அறுபத்தியிரண்டு பாடசாலைகளில் ஏழு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் நூற்றி ஐம்பத்தைந்து பாடசாலைகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தர வகுப்புகளில் கலை, வர்த்தகப் பிரிவு வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்பட்ட நாற்பத்தெட்டுப் பாடசாலைகளில் நாற்பத்தேழும், அதே தர வகுப்புகளில் கலை, கணிதம், வர்த்தகம், விஞ்ஞானம் ஆகிய நான்கு துறைக்குமான பாடங்கள் கற்பிக்கப்படும் வகுப்புகளைக் கொண்டதாகச் செயற்பட அனுமதிக்கப்பட்டுள்ள நாற்பத்தைந்து பாடசாலைகளில் நாற்பத்து மூன்று பாடசாலைகளும் தற்போது இயங்கும் நிலையில் உயர்தர வகுப்புகள் கொண்ட மூன்று பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலேயேயுள்ளமை கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வித் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமேயன்றி ஏனைய எந்த அழுத்தங்களுக்கும் கல்வித்துறை ஆட்படலாகாது. யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் ஆரம்பப் பயிற்சி பெற்ற முதல் மொழிக்கான ஆசிரிய தேவை நானூற்றி எண்பதாகக் கணிக்கப்பட்டுள்ள போதிலும் இவ்வலயத்தில் குறித்த தகைமை பெற்ற ஆசிரியர்கள் நூற்றி தொண்ணூறு வரையானவர்களே கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது. அதாவது ஆரம்ப வகுப்புகளில் கற்பிக்கும் தகைமை கொண்ட முந்நூறுக்குக்கிட்டிய ஆசிரிய வெற்றிடங்கள் இருப்பது தெரிய வருகின்றது.
அதேபோல் வலிகாமக் கல்வி வலயத்தில் ஆரம்ப வகுப்புகளில் கற்பிக்கும் தகைமைகொண்ட ஆங்கில ஆசிரியர்களின் தேவை நூற்றி இருபதாக இருக்கும் போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாற்பத்தைந்தாக மட்டுமே இருப்பதும் தெரியவருகின்றது. அதேபோல் வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் ஆகிய வலயங்களிலும் தேவைக்குக் குறைந்த ஆங்கில ஆசிரியர்களே கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதும் வெளிப்பட்டுள்ளது. அதேவேளை, ஆரம்ப வகுப்பில் முதல்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பாரிய தேவையுள்ள போதும் யாழ்.கல்வி வலயத்தில் ஆங்கில ஆசிரியர்கள் மேலதிகமாக பணியிலீடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் ஆசிரிய வளப்பங்கீட்டின் ஒழுங்கற்ற நிலையையும் நோக்குவது தவறில்லை.
ஆசிரியர்களும் கற்பிக்கும் மனநிலையில் உரிய சூழல், பணியாற்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பது மறுப்பதற்கில்லை. இருந்த போதிலும் மாணவ, மாணவியரின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். உரிய காலத்தில், உரிய கல்வியைக் குறித்த பாடத்திட்டத்திற்கமைய பாடசாலைகளில் மாணவ, மாணவியர் பெற்றுக்கொள்ள வழி செய்வது கல்வித்துறையினரின் பொறுப்பேயன்றி எப்படியாவது பாடசாலைகள் செயற்பட்டால் போதும் என்ற மன நிலையில் செயற்படக்கூடாது.
அறுபது வரையான ஆரம்பப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இயங்கும் ஆரம்பப் பாடசாலைகளிலும் ஆரம்பக் கல்வியை ஆட்டங் காணச் செய்யக்கூடாது. ஆரம்பக் கல்வியில் காணப்படும், ஏற்படும் பின்னடைவு இடை நிலைக் கல்வியின் போது பிள்ளைகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், உயர் கல்வியைத் தொடர வாய்ப்பற்ற நிலையையும் ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
போக்குவரத்து போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு ஏற்ற போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுப்பதில் கவனம் செலுத்துவதுடன், அதற்கேற்ற வழிமுறைகளை ஆராய்ந்து செயற்படுத்த வேண்டும். அதைவிடுத்து இடமாற்றம் மூலம் போக்குவரத்துப் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்பது உகந்ததல்ல. இதை ஆசிரிய சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும். கல்வி நிர்வாகத்துறையினரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.
யாழ்ப்பாண நகரிலிருந்து வேலணைக்கு ஒரு ஆசிரியர் பணிக்காகப் பயணிப்பது சிரமமானதென்றால் யாழ்.மாவட்டத்திலிருந்து தினமும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்குப் பயணம் செய்து பணிபுரியும் ஆசிரியர்களின் நிலை எவ்வாறிருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
துவண்டு, தொய்ந்து போயுள்ளது யாழ்ப்பாணத் தமிழர் கல்வி என்பதை மறுக்க முடியாது. அதுவே யதார்த்தம். உண்மை நிலை. இதை ஒவ்வொருவரும் மனதிற்கொள்ள வேண்டும். சமூக நோக்கில் சிந்திக்க வேண்டும். அன்றைய யாழ்ப்பாணக் கல்வித் தரத்தையும் இன்றைய கல்வித்தரத்தையும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். தொய்விற்குக் காரணத்தைக் கண்டறிந்து தமிழர் கல்வியைத் தூக்கி நிறுத்த வழிகாணவேண்டும்.
அரசியல் மற்றும் அதிகாரத் தரப்பாரின் தலையீடு கல்வித்துறையில் புகாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கல்வித்துறை நாட்டின் தேசிய கல்விக் கொள்கைக்கமைய சமத்துவமாக, சுயாதீனமாக உரியவளங்களைக் கற்கும் பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுத்து தமது பணியை ஆற்ற வேண்டும்.
ஒரு பாடசாலையின் உயிர்நாடியாக முதலில் தோன்றமளிப்பவர் அப்பாடசாலையின் அதிபரே. தரமும், தகுதியும் கொண்டவர்களே ஆளுமைகொண்ட அதிபர்களாகச் செயற்படத் தக்கவர்கள். இன்றைய நிலையில் பல பாடசாலைகளில் ஆளுமையற்ற அதிபர்களின் நிர்வாகத்தில் கல்வித்தரம் தாழ்ந்துள்ளமை வெளிப்பட்டுள்ளது. மறுக்க முடியாத இந்த யதார்த்த நிலை கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
உலகப் புகழ்பெற்ற வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டமேதைகள், கணக்காளர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள் என்று பல்துறைசார் புத்திஜீவிகளை உருவாக்கிய அன்றைய யாழ்ப்பாணக் கல்வி நிலையை இன்றைய கல்வி நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்து தொய்ந்த இடத்தைக் கண்டறிந்து சீர் செய்ய வேண்டும். இது காலத்தின் தேவைமட்டுமல்ல, தமிழ்ச் சமுதாயத்தின் தேவையுமாகும்.
ஒரு காலத்தில் ஆண்டு தோறும் பல்துறைகளுக்குமாகப் பல்கலைக்கழகத்திற்குத் தகைமை கொண்டவர்களாக மாணவ, மாணவியினரை உருவாக்கிய மானிப்பாய் இந்துக்கல்லூரி, மானிப்பாய் மகளிர் கல்லூரி, யாழ்.மத்திய கல்லூரில சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, அளவெட்டி அருணோதயாக் கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிலையங்களிலிருந்து இன்று எத்தனைபேர் பல்கலைக்கழக அனுமதி பெறுகின்றனர் என்பதை ஆராய வேண்டும். இந்தப் பின்னடைவின் ஏதுக்கள் கண்டறியப்பட வேண்டும்.
தமிழர் கல்வியைக் குறிப்பாக யாழ்ப்பாணக் கல்வியை மேன்மைப்படுத்த அன்று நம்முன்னோர் பாடுபட்டனர். அல்லும்பகலும் அயராது உழைத்தனர். இன்று நாம் அவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை மட்டும் நடத்தும் நிலையில் உள்ளமை கவலைக்குரியது.
யாழ்ப்பாணக் கல்வி நிலையைச் சீர்செய்ய மாணவ, மாணவியரின் கல்வித் தேவையை அதாவது அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரிய ஆளணியை ஒழுங்குபடுத்தல் முதன்மையாகின்றது. பூரணத்துவமான அதாவது ஒரு மாணவன் தான் கற்கும் சகல பாடங்களுக்கும் உரிய கற்பிக்கும் தகைமை கொண்ட ஆசிரியர்களைப் பெற்றுக்கொள்ளும் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் ஏனைய பௌதீக வளங்களும் உரிய படி கிடைக்கச் செய்ய வேண்டும். காலத்தின் தேவையறிந்து காலம் தாழ்த்தாது செய்யப்பட வேண்டியது இது.
கல்வியே சமூகத்தின் உயிர்நாடி. சமூகத்தின் உயர்வுக்கு ஆதாரம் கல்வி என்று மேடைப் பேச்சிலும் அறிக்கைகளிலும் மட்டுப்படாது யாழ்ப்பாணத் தமிழர் கல்வியை பண்டைய நிலைக்கு முன்னிலைப்படுத்த ஆசிரிய சமூகமும் பல்கலைக்கழக சமூகமும் பெற்றோரும் கல்விமான்களும் புத்திஜீவிகளும் சமூக அமைப்புகளும் இணைந்து முன்வந்து செயற்பட வேண்டும்.
காலத்தில் வழங்கப்பட வேண்டிய கல்வியை, அதன் பெறுமதியை உணர்ந்து செயற்படுவது இறை பணியாகும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது போல் கல்விச் சேவையே சமூக சேவை, தேவை என்பதை நினைவிலிருத்தி நமது பிள்ளைகளின் வளமான வாழ்விற்கு வழிதிறப்போம்.
source: http://www.thinakkural.com/articles/13153-2012-04-19-20-35-35.html
தமிழரின் சொத்து கல்வி என்கின்றோம். அதிலும் யாழ்ப்பாணத்தவரின் முதன்மைச் சொத்து கல்வியே தான் என்று அடித்துக் கூறுகின்றோம். அன்றிலிருந்தது அந்த உயர்நிலை. இன்று யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்வி நிலை பின்தள்ளப்பட்டு, புறக்கணிக்கப்பட்டுள்ளதன் பெறுபேறுகளைத் தேசிய ரீதியிலான பரீட்சைப் பெறுபேறுகளைக் கொண்டு கணிப்பிட முடிகின்றது. யாழ்ப்பாணக் கல்வி, யாழ்ப்பாணத் தமிழரின் கல்வி இன்று நாட்டின் பின்தள்ளப்பட்டுள்ளமையை மதிப்பீடுகளும் வெளிப்படுத்துகின்றன.
இந்திய முன்னாள் ஜனாதிபதிக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் எலிசபெத் மகாராணியாருக்கும் கற்பித்த பெருமை யாழ்ப்பாணத்தவருக்கு உண்டு என்று பெருமை பேசிக்கொண்டிருந்தால் போதாது. இலங்கையில் ஏனைய
சமூகத்தவர்கள் யாழ்ப்பாணத்தவரின் கல்வியின் உயர்வை, மேன்மையைக் கண்டு பொறாமை கொண்ட காலம் போய் இன்று இலங்கையின் கல்வியில் பின்னடைந்த மாவட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டமும் ஒன்று என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அவலம் தீவிர சிந்தனைக்குரியது. தலை நிமிர்ந்து பெருமையுடன் திகழ்ந்த யாழ்ப்பாணக் கல்வி இன்று தொய்ந்து துவண்டுவிட்டது என்பதை வேதனையுடன் ஏற்றேயாக வேண்டும்.
யாழ்ப்பாணக் கல்விச் சமூகம் இன்றைய நிலையைச் சீர்செய்ய திட்டமிட வேண்டும். ஆக்கபூர்வமான செயற்பாட்டில் ஈடுபட வேண்டும். ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை, கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை ஆகியவற்றின் வருடாந்த பெறுபேறுகளை ஆய்வு செய்யும் போது படிப்படியாகக் கீழ் நோக்கியே கல்வித்தரம் நகர்ந்து வருதை அவதானிக்க முடிகின்றது.
கடந்த கால சூழ்நிலைகளை மட்டும் இதற்கான ஏதுவாகக்கூறிக்கொண்டிருக்க முடியாது. யாழ்ப்பாணக் கல்வி நிர்வாக ஒழுங்கமைப்பில் பாரிய குறைபாடுகளும் இதற்கான காரணிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படக்கூடியதாயுள்ளது. அத்துடன் தேவையற்ற வெளியார் தலையீடுகளும் கல்வித்துறையின் பின்னடைவுக்கான ஒதுக்களிலொன்றாகக் காணப்படுகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்திலே வலிகாமம், யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் என ஐந்து கல்வி வலயங்களும் அவற்றிலடங்கும் பதினைந்து கல்விக் கோட்டங்களும் மொத்தமாக நானூற்று தொண்ணூறு (490) பாடசாலைகளும் உள்ளன. கடந்த ஆண்டு இறுதி நிலையின் படி நானூற்று இருபது பாடசாலைகள் மட்டுமே இயங்குவதாயும் எழுபது பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலுள்ளதாகவும் கணிப்பீடுகள் வெளிப்படுத்துகின்றன.
யாழ்ப்பாணக் கல்வி வலயம்
யாழ்ப்பாணக் கல்வி வலயத்திலுள்ள நூற்றி பதின்மூன்று பாடசாலைகளில் பதினான்கு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் தற்போது இயங்கும் பாடசாலைகள் தொண்ணூற்றொன்பது (99) மட்டுமேயாகும். இக்கல்வி வலயத்தில் யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய் ஆகிய கல்விக் கோட்டங்கள் உள்ளன. அவற்றில் முறையே 28,40,45 என்ற எண்ணிக்கையான பாடசாலைகளடங்குகின்றன. இவற்றில் யாழ்ப்பாணக் கல்விக் கோட்டத்தில் எட்டுப் பாடசாலைகளும் கோப்பாய் கல்விக் கோட்டத்தில் ஆறுமாகப் பதின்நான்கு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலுள்ளமை வெளிப்படுகின்றது.
இவ்வலயத்தில் அதிபர்கள் தரம் கொண்ட நூற்றிப் பதின்மூன்று பேர் இருக்க வேண்டிய போதும் தற்போது அத்தரத்திலிருப்போர் எண்பத்து நான்கு பேர் மட்டுமே.
வலிகாமம் வலயம்
தெல்லிப்பளை, சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில் ஆகிய நான்கு கல்விக் கோட்டங்களை உள்ளடக்கிய இக்கல்வி வலயத்தில் நூற்றி ஐம்பது பாடசாலைகளிலிருந்த போதும் தற்போது இயங்கும் பாடசாலைகள் நூற்றி இருபத் தொன்பது மட்டுமே என்பது கணிப்பிடப்பட்டுள்ளது. தெல்லிப்பளைக் கல்விக் கோட்டத்தில் பதினேழு பாடசாலைகளும் உடுவில் கோட்டத்தில் மூன்றும் சண்டிலிப்பாயில் ஒன்றுமாக மொத்தம் இருபத்தொரு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலுள்ளன.
அதிபர் தரம் கொண்ட ஆளணி நூற்றி நாற்பத்தி இரண்டாக இருக்க வேண்டிய நிலையில் அத்தரத்தில் எண்பத்தொருபேரே இருப்பது தெரிய வந்துள்ளது.
வலிகாமம் கல்வி வலயத்தில தெல்லிப்பளையில் இருபத்தெட்டு பாடசாலைகளும் சண்டிலிப்பாயில் நாற்பது பாடசாலைகளும் சங்கானையில் முப்பத்தொரு பாடசாலைகளும் உடுவிலில் முப்பது பாடசாலைகளுமே தற்போது இயங்குகின்றன.
வடமராட்சி கல்வி வலயம்
இக்கல்வி வலயத்தில் பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி ஆகிய மூன்று கல்விக் கோட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறைக் கல்விக் கோட்டத்திலுள்ள முப்பத்துமூன்று பாடசாலைகளில் இரு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் முப்பத்தொரு பாடசாலைகளே இயங்குகின்றன. அதேபோல் கரவெட்டி கல்விக் கோட்டத்திலுள்ள முப்பத்து மூன்று பாடசாலைகளில் இரண்டு மூடப்பட்ட நிலையில் முப்பத்தொன்று மட்டுமே இயங்குகின்றன.
மருதங்கேணி கல்விக் கோட்டத்தில் அடங்கும் பாடசாலைகளின் எண்ணிக்கை பத்தொன்பதாகும். அவற்றிலே இயங்குபவை பதினேழாகவும் மூடப்பட்ட நிலையிலுள்ளவை இரண்டு எனவும் அறிக்கையிடப்பட்டுள்ளன.
வடமராட்சிக் கல்வி வலயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் தர ஆளணியின் எண்ணிக்கை எண்பத்தாறாக இருந்த போதிலும் தற்போது அத்தரத்தில் ஐம்பத்திமூன்று பேரே உள்ளமை தெரியவந்துள்ளது.
தென்மராட்சி கல்வி வலயம்
தென்மராட்சிக் கல்வி வலயத்திற்குட்பட்டதாக சாவகச்சேரி கல்விக் கோட்டம் மட்டுமேயுள்ளது. இக்கல்விக் கோட்டத்தில் மொத்தமாக அறுபத்தாறு பாடசாலைகள் அடங்குகின்றன. இருந்த போதிலும் ஒன்பது பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் ஐம்பத்தேழு பாடசாலைகள் மட்டுமே இயங்குவதும் ஐம்பத்தெட்டு நிரந்தர அதிபர்களுக்கான ஒதுக்கீடு இருந்த போதிலும் முப்பத்தாறு அதிபர் தரம் கொண்டவர்கள் மட்டுமே செயற்படுகின்றனர்.
தீவகக் கல்வி வலயம்
தீவகக் கல்வி வலயமானது வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, காரைநகர் ஆகிய நான்கு கல்வி கோட்டங்களை உள்ளடக்கியதாக விளங்குகின்றது. இவற்றில் முறையே 34,18,10,14 என மொத்தம் எழுபத்தாறு பாடசாலைகள் அடங்கியிருந்த போதும் மொத்தமாக இருபது பாடசாலைகள் செயலிழந்த நிலையில் மூடப்பட்டுள்ளமை தெரியவருகின்றது.
வேலணை கல்விக் கோட்டத்தில் பன்னிரெண்டு பாடசாலைகளும், ஊர்காவற்றுறையில் இரண்டும், நெடுந்தீவில் இரண்டும் காரை நகரில் நான்குமாக மூடப்பட்டுள்ள இருபது பாடசாலைகளுமுள்ளன.
ஐம்பது நிரந்தர அதிபர்களுக்கான ஒதுக்கீடு இருக்கும் போது இருபத்தைந்து பேர் மட்டுமே அத்தரத்தைக் கொண்டவர்களாயுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மொத்த அரசினர் பாடசாலைகள் 490 இற்குப் புறம்பாக ஆறு தனியார் பாடசாலைகளும் செயற்படுகின்றன. குறிப்பிட்ட அரசினர் பாடசாலைகளில் ஏழு பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மத்திய கல்வியமைச்சின் நிர்வாகத்தின் கீழ் செயற்பட, ஏனையவை மாகாண கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டிற்குட்பட்டவையாக உள்ளன.
தரம் 3 எனப்படும் ஆரம்பப் பாடசாலைகளாக யாழ்.மாவட்டத்தில் இருநூற்றி முப்பத்தைந்து பாடசாலைகள் உள்ளபோதும் நூற்றி எழுபத்தைந்து பாடசாலைகள் மட்டுமே இயங்குவதும் அறுபது பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணம் வரை வகுப்புகள் கொண்ட தரம் 2 எனத் தரப்படுத்தப்பட்டுள்ள நூற்று அறுபத்தியிரண்டு பாடசாலைகளில் ஏழு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் நூற்றி ஐம்பத்தைந்து பாடசாலைகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தர வகுப்புகளில் கலை, வர்த்தகப் பிரிவு வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்பட்ட நாற்பத்தெட்டுப் பாடசாலைகளில் நாற்பத்தேழும், அதே தர வகுப்புகளில் கலை, கணிதம், வர்த்தகம், விஞ்ஞானம் ஆகிய நான்கு துறைக்குமான பாடங்கள் கற்பிக்கப்படும் வகுப்புகளைக் கொண்டதாகச் செயற்பட அனுமதிக்கப்பட்டுள்ள நாற்பத்தைந்து பாடசாலைகளில் நாற்பத்து மூன்று பாடசாலைகளும் தற்போது இயங்கும் நிலையில் உயர்தர வகுப்புகள் கொண்ட மூன்று பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலேயேயுள்ளமை கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வித் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமேயன்றி ஏனைய எந்த அழுத்தங்களுக்கும் கல்வித்துறை ஆட்படலாகாது. யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் ஆரம்பப் பயிற்சி பெற்ற முதல் மொழிக்கான ஆசிரிய தேவை நானூற்றி எண்பதாகக் கணிக்கப்பட்டுள்ள போதிலும் இவ்வலயத்தில் குறித்த தகைமை பெற்ற ஆசிரியர்கள் நூற்றி தொண்ணூறு வரையானவர்களே கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது. அதாவது ஆரம்ப வகுப்புகளில் கற்பிக்கும் தகைமை கொண்ட முந்நூறுக்குக்கிட்டிய ஆசிரிய வெற்றிடங்கள் இருப்பது தெரிய வருகின்றது.
அதேபோல் வலிகாமக் கல்வி வலயத்தில் ஆரம்ப வகுப்புகளில் கற்பிக்கும் தகைமைகொண்ட ஆங்கில ஆசிரியர்களின் தேவை நூற்றி இருபதாக இருக்கும் போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாற்பத்தைந்தாக மட்டுமே இருப்பதும் தெரியவருகின்றது. அதேபோல் வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் ஆகிய வலயங்களிலும் தேவைக்குக் குறைந்த ஆங்கில ஆசிரியர்களே கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதும் வெளிப்பட்டுள்ளது. அதேவேளை, ஆரம்ப வகுப்பில் முதல்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பாரிய தேவையுள்ள போதும் யாழ்.கல்வி வலயத்தில் ஆங்கில ஆசிரியர்கள் மேலதிகமாக பணியிலீடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் ஆசிரிய வளப்பங்கீட்டின் ஒழுங்கற்ற நிலையையும் நோக்குவது தவறில்லை.
ஆசிரியர்களும் கற்பிக்கும் மனநிலையில் உரிய சூழல், பணியாற்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பது மறுப்பதற்கில்லை. இருந்த போதிலும் மாணவ, மாணவியரின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். உரிய காலத்தில், உரிய கல்வியைக் குறித்த பாடத்திட்டத்திற்கமைய பாடசாலைகளில் மாணவ, மாணவியர் பெற்றுக்கொள்ள வழி செய்வது கல்வித்துறையினரின் பொறுப்பேயன்றி எப்படியாவது பாடசாலைகள் செயற்பட்டால் போதும் என்ற மன நிலையில் செயற்படக்கூடாது.
அறுபது வரையான ஆரம்பப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இயங்கும் ஆரம்பப் பாடசாலைகளிலும் ஆரம்பக் கல்வியை ஆட்டங் காணச் செய்யக்கூடாது. ஆரம்பக் கல்வியில் காணப்படும், ஏற்படும் பின்னடைவு இடை நிலைக் கல்வியின் போது பிள்ளைகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், உயர் கல்வியைத் தொடர வாய்ப்பற்ற நிலையையும் ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
போக்குவரத்து போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு ஏற்ற போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுப்பதில் கவனம் செலுத்துவதுடன், அதற்கேற்ற வழிமுறைகளை ஆராய்ந்து செயற்படுத்த வேண்டும். அதைவிடுத்து இடமாற்றம் மூலம் போக்குவரத்துப் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்பது உகந்ததல்ல. இதை ஆசிரிய சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும். கல்வி நிர்வாகத்துறையினரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.
யாழ்ப்பாண நகரிலிருந்து வேலணைக்கு ஒரு ஆசிரியர் பணிக்காகப் பயணிப்பது சிரமமானதென்றால் யாழ்.மாவட்டத்திலிருந்து தினமும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்குப் பயணம் செய்து பணிபுரியும் ஆசிரியர்களின் நிலை எவ்வாறிருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
துவண்டு, தொய்ந்து போயுள்ளது யாழ்ப்பாணத் தமிழர் கல்வி என்பதை மறுக்க முடியாது. அதுவே யதார்த்தம். உண்மை நிலை. இதை ஒவ்வொருவரும் மனதிற்கொள்ள வேண்டும். சமூக நோக்கில் சிந்திக்க வேண்டும். அன்றைய யாழ்ப்பாணக் கல்வித் தரத்தையும் இன்றைய கல்வித்தரத்தையும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். தொய்விற்குக் காரணத்தைக் கண்டறிந்து தமிழர் கல்வியைத் தூக்கி நிறுத்த வழிகாணவேண்டும்.
அரசியல் மற்றும் அதிகாரத் தரப்பாரின் தலையீடு கல்வித்துறையில் புகாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கல்வித்துறை நாட்டின் தேசிய கல்விக் கொள்கைக்கமைய சமத்துவமாக, சுயாதீனமாக உரியவளங்களைக் கற்கும் பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுத்து தமது பணியை ஆற்ற வேண்டும்.
ஒரு பாடசாலையின் உயிர்நாடியாக முதலில் தோன்றமளிப்பவர் அப்பாடசாலையின் அதிபரே. தரமும், தகுதியும் கொண்டவர்களே ஆளுமைகொண்ட அதிபர்களாகச் செயற்படத் தக்கவர்கள். இன்றைய நிலையில் பல பாடசாலைகளில் ஆளுமையற்ற அதிபர்களின் நிர்வாகத்தில் கல்வித்தரம் தாழ்ந்துள்ளமை வெளிப்பட்டுள்ளது. மறுக்க முடியாத இந்த யதார்த்த நிலை கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
உலகப் புகழ்பெற்ற வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டமேதைகள், கணக்காளர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள் என்று பல்துறைசார் புத்திஜீவிகளை உருவாக்கிய அன்றைய யாழ்ப்பாணக் கல்வி நிலையை இன்றைய கல்வி நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்து தொய்ந்த இடத்தைக் கண்டறிந்து சீர் செய்ய வேண்டும். இது காலத்தின் தேவைமட்டுமல்ல, தமிழ்ச் சமுதாயத்தின் தேவையுமாகும்.
ஒரு காலத்தில் ஆண்டு தோறும் பல்துறைகளுக்குமாகப் பல்கலைக்கழகத்திற்குத் தகைமை கொண்டவர்களாக மாணவ, மாணவியினரை உருவாக்கிய மானிப்பாய் இந்துக்கல்லூரி, மானிப்பாய் மகளிர் கல்லூரி, யாழ்.மத்திய கல்லூரில சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, அளவெட்டி அருணோதயாக் கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிலையங்களிலிருந்து இன்று எத்தனைபேர் பல்கலைக்கழக அனுமதி பெறுகின்றனர் என்பதை ஆராய வேண்டும். இந்தப் பின்னடைவின் ஏதுக்கள் கண்டறியப்பட வேண்டும்.
தமிழர் கல்வியைக் குறிப்பாக யாழ்ப்பாணக் கல்வியை மேன்மைப்படுத்த அன்று நம்முன்னோர் பாடுபட்டனர். அல்லும்பகலும் அயராது உழைத்தனர். இன்று நாம் அவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை மட்டும் நடத்தும் நிலையில் உள்ளமை கவலைக்குரியது.
யாழ்ப்பாணக் கல்வி நிலையைச் சீர்செய்ய மாணவ, மாணவியரின் கல்வித் தேவையை அதாவது அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரிய ஆளணியை ஒழுங்குபடுத்தல் முதன்மையாகின்றது. பூரணத்துவமான அதாவது ஒரு மாணவன் தான் கற்கும் சகல பாடங்களுக்கும் உரிய கற்பிக்கும் தகைமை கொண்ட ஆசிரியர்களைப் பெற்றுக்கொள்ளும் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் ஏனைய பௌதீக வளங்களும் உரிய படி கிடைக்கச் செய்ய வேண்டும். காலத்தின் தேவையறிந்து காலம் தாழ்த்தாது செய்யப்பட வேண்டியது இது.
கல்வியே சமூகத்தின் உயிர்நாடி. சமூகத்தின் உயர்வுக்கு ஆதாரம் கல்வி என்று மேடைப் பேச்சிலும் அறிக்கைகளிலும் மட்டுப்படாது யாழ்ப்பாணத் தமிழர் கல்வியை பண்டைய நிலைக்கு முன்னிலைப்படுத்த ஆசிரிய சமூகமும் பல்கலைக்கழக சமூகமும் பெற்றோரும் கல்விமான்களும் புத்திஜீவிகளும் சமூக அமைப்புகளும் இணைந்து முன்வந்து செயற்பட வேண்டும்.
காலத்தில் வழங்கப்பட வேண்டிய கல்வியை, அதன் பெறுமதியை உணர்ந்து செயற்படுவது இறை பணியாகும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது போல் கல்விச் சேவையே சமூக சேவை, தேவை என்பதை நினைவிலிருத்தி நமது பிள்ளைகளின் வளமான வாழ்விற்கு வழிதிறப்போம்.
source: http://www.thinakkural.com/articles/13153-2012-04-19-20-35-35.html
No comments:
Post a Comment