Tuesday, April 24, 2012

கேரள கஞ்சாவைக் கடத்திய நபர் மன்னாரில் கைது

மன்னாரில் போதைப் பொருள் கடத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடற்படை உத்தியோகத்தர்களும், பொலிஸாரும் கூட்டாக இணைந்து பிரதேசத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர், எழுதூர் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபரிடமிருந்து கேரள கஞ்சா ஒன்பது கிலோ கிராம் மற்றும் 890 கிராம் எடையுடைய விஷ போதைப் பொருள் வகையொன்றென சந்தேகிக்கப்படும் ஹெரோயின் வகைப் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த தேடுதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
சந்தேக நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator