Tuesday, May 22, 2012

மன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு கிராமத்தில் 600 ஏக்கர் காணியை அபகரிக்க முயற்சி

மன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு கிராமத்தில் 600 ஏக்கர் காணியை அபகரிக்க முயற்சி : மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள கட்டுக்காரன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள மன்னார் ஆயர் இல்லம் மற்றும் அப்பகுதி மக்களுக்குச் சொந்தமான சுமார் 600 ஏக்கர் காணியை அமைச்சர் ஒருவரின் சகோதரரால் அபகரிப்பதற்காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதீக்கப்பட்ட மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
குறித்த கட்டுக்காரன் குடியிருப்பு கிராமாத்தில் சுமார் 600 ஏக்கர் காணிகள் காணப்படுகின்றது.அவை மன்னார் ஆயரில்லத்திற்கும் கட்டுக்காரன் குடியிருப்பு கிராம மக்களுக்கும் சொந்தமானதாக காணப்படுகின்றது.
-இந்த நிலையில் கட்டுக்காரன் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் அமைச்சர் றிஸாட் பதீயுதினின் சகோதரர் ஒருவருக்கு விற்பனை செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
-கடந்த வாரம் கனரக வாகனங்களை பயண்படுத்தி காணிக்குள் உள்ள மரங்கள் வெட்டப்பட்தோடு காடுகளும் அழிக்கப்பட்டது.
இது தொடர்பில் கேட்ட போது தற்காலிக வீதி அமைப்பதற்காகவே காடுகள் வெட்டப்படுவதாக கூறினார்கள்.
எனினும் பாதீக்கப்பட்ட கிராம மக்களாகிய நாங்கள் மன்னார் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
பின் மன்னார் பிரதேசச் செயலாளர் கட்டுக்காரன் குடியிருப்பு கிராம சேவையாளரினுடாக காணியை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த கட்டுக்காரன் குடியிப்பு கிராமத்தை சேர்ந்த குறித்த தனி நபரை தன்னிடம் வந்து சந்திக்குமாறு கூறியிருந்தார். அதனை உரிய நபரிடம் கிராம சேவையாளர் கூறிய போது குறித்த நபர் கூறியுள்ளார் நான் வர மாட்டேன்.அமைச்சர் தான் வருவார் என்று.
இந்த நிலையில் மன்னார் பிரதேசச்செயலாளர் குறித்த நபருக்கு மீண்டும் எழுத்து மூலம் அழைப்பானை விடுத்திருந்தார்.பின் அங்கு சென்ற குறித்த நபர் அமைச்சரின் சகோதரன் ஒருவரே குறித்த காணியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் மன்னார் பிரதேசச் செயலக அதிகாரிகளினால் அமைச்சரின் சகோதரருக்கு தொலைபேசியூடாக தொடர்பை ஏற்படுத்தியிருந்த போது குறித்த காணியை தானே பெற்றுக்கொள்ளவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த காணிக்காண ஆவனத்தை மன்னார் பிரதேசச் செயலகத்தில் கொண்டு வந்து சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளினால் கோரிக்கை விடப்பட்டது.
இந்த நிலையில் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை.இந்த நிலையில் குறித்த காணி அபகரிக்கப்படுகின்றமை தொடர்பில் மன்னார் ஆயர் உள்ளிட்ட குறித்த கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் தலைமன்னார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும் தலைமன்னார் பொலிஸார் இது வரை முறைப்பாடுகளை மேற்கொள்ளவில்லை.தற்போது இரவு நேரங்களில் பலரை வைத்து காணிகளை சுற்றி வேளியடைக்கும் நடவடிக்கைகளும் இடம் பெற்று வருவதாக பாதீக்கப்பட்ட மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
[Source: http://www.seithy.com/breifNews.php?newsID=60512&category=TamilNews&language=tamil]

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator