Tuesday, May 22, 2012

மன்னார் அல்-அஸ்ஹர் மகா வித்தியாலய நவோதய பாடசாலை-

principal மன்னார் அல்-அஸ்ஹர் மகா வித்தியாலய நவோதய பாடசாலை-மன்னார் அல்-அஸ்ஹர் மகா வித்தியாலய நவோதய பாடசாலை வட மாகாணத்தில் மிகவும் பழைமை வாய்ந்த பிரபலமாகிய பாடசாலையாகும். இப்பாடசாலை மன்னார் நகரின் முதல் அரச பாடசாலையாகும்.1908 ஆம் ஆண்டு அரச தமிழ் கலவன் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. மும்மொழிகளையும் கொண்ட பாடசாலையாக விளங்கியது.
இப்பாடசாலையில் முஸ்ஸிம்,இந்து,கிறிஸ்தவம்,பௌத்தம் ஆகிய நான்கு மதங்களையும் கொண்ட ஒரே நேரத்தில் கல்வி கற்ற சிறப்பு மிக்க பாடசாலையாக திகழ்ந்தது. 1908 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இப்பாடசாலையின் அதிபராக எம்.வை மாஹீர் கடமையாற்றுகின்றார்.

-சாரணர்:
-மன்னார் நகரின் முதல் அரச கனிஸ்ட பாடசாலையாக இருந்த போது மாவட்டத்தின் முதல் சாரணியம் ஸ்தாபிக்கப்பட்டது.தற்போது சாரணியம் இப்பாடசாலையில் வளர்ச்சியடைந்துள்ளது.

-பான்ட் இசைக்குழு:
மாவட்டத்தில் முதல் பான்ட் இசை வாத்தியக்குழு இப்பாடசாலையிலேயே ஆரம்பிக்கப்பட்டு தேசிய மட்டத்தில் வெற்றியீட்டியுள்ளது.
-விளையாட்டு மைதானம்:
மாவட்டத்தின் பழம் பெரும் விளையாட்டு மைதானமாக இப்பாடசாலையின் விளையாட்டரங்கு திகழ்ந்து வருகின்றது.இந்த மைதானம் பல நூற்றுக்கணக்கான வீர வீராங்கனைகளை உருவாக்கி பெருமை சேர்த்துள்ளது.
-இப்பாடசாலையில் ஆராம்ப காலத்தில் இடம் பெற்ற விளையாட்டுப்போட்டி மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போது அன்றைய காலங்களில் பதவியில் இருந்த பிரதமர்களும்,ஜனாதிபதியும் கலந்து கொண்டிருந்தனர்.

1949 ஆம் ஆண்டு இடம் பெற்ற பாடசாலை நிகழ்வில் அன்றைய பிரதமராக இருந்த டி.எஸ்.சேனநாயக்க,1953 ஆம் ஆண்டு இடம் பெற்ற நிகழ்வில் அன்றைய பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவை,1954 ஆம் ஆண்டு இடம் பெற்ற நிகழ்வின் போது பிரதமர் டட்லி சேனாநாயக்கா கலந்து கொண்டார். 1979 ஆம் ஆண்டு இடம் பெற்ற நிகழ்வில் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்தனா,1989 ஆம் ஆண்டு இடம் பெற்ற நிகழ்வில் அன்றைய ஜனாதிபதியாக இருந்த ஆர்.பிரேமதாஸ ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை சிறப்புக்கூறிய அம்சமாகும்.
இப்பாடசாலை பல பட்டதாரிகளையும், பல கல்விமாண்களையும், வைத்தியர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும், அமைச்சர்களையம்,சமூதாயத்தலைவர்களையும், ஊடகவியளாலர்களையும் உருவாக்கியுள்ளது. இப்பாடசாலை சாதி,மத,பேதமற்ற நிலையில் மும்மத மாணவர்களையும் ஒன்று சேர்த்து பல சாதனைகளை புரிந்து வெற்றி நடை போட்டு வருகின்றது. இப்பாடசாலை தனது 104 வது வருடப்பூர்த்தியை (1908-2012) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதியை எதிர்பார்த்துள்ளது
[Source: mannarwin.com]

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator