மன்னார் நிருபர்
மிதிவெடிகள் மற்றும் ரி. 56 ரக துப்பாக்கியின் ரவைகளை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் மடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆ ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிவான் திருமதி கே. ஜீவராணி உத்தரவிட்டுள்ளார். மடுதட்சணா மருதமடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய அந்தோனிமுத்து செபஸ்டியான் பிள்ளை அவரது மகன் 28 வயதுடைய செபஸ்டியான்பிள்ளை அந்தோனிப் பிள்ளை மற்றும் 30 வயதுடைய ஞானப்பிரகாசம் அருள்தாஸ் ஆகியோரே கடந்த வியாழன் மன்னார் மாவட்ட நீதிவான் திருமதி கே. ஜீவராணி முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டு அவரின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மிதிவெடிகள் மற்றும் ரி. 56 ரக துப்பாக்கியின் ரவைகளை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் மடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆ ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிவான் திருமதி கே. ஜீவராணி உத்தரவிட்டுள்ளார். மடுதட்சணா மருதமடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய அந்தோனிமுத்து செபஸ்டியான் பிள்ளை அவரது மகன் 28 வயதுடைய செபஸ்டியான்பிள்ளை அந்தோனிப் பிள்ளை மற்றும் 30 வயதுடைய ஞானப்பிரகாசம் அருள்தாஸ் ஆகியோரே கடந்த வியாழன் மன்னார் மாவட்ட நீதிவான் திருமதி கே. ஜீவராணி முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டு அவரின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.