Monday, April 23, 2012

கல்முனையில் பிடிக்கப்பட்ட 15 அடி நீள முதலை!

கல்முனை பிரதேசத்தில் 15 அடி நீளமுள்ள முதலை ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வன பரிபாலன சபை அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டுள்ளது. கல்முனை, பாண்டிருப்பு தாளாவட்டான் சந்தியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்தே இம் முதலை பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கிணற்றில் முதலையைக் கண்ட பொதுமக்கள் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததையடுத்து தொடர்ந்து பொலிஸாரின் உதவியுடன் வனப்பரிபாலனை சபை அதிகாரிகள் முதலையை பிடித்து லொறியில் ஏற்றிச் சென்றனர். மேற்படி கிணறு உடைக்கப்பட்டு இம் முதலை பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Spource:http://www.seithy.com/breifNews.php?newsID=59038&category=TamilNews&language=tamil

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator