Monday, May 7, 2012

மன்னாரில் புத்தர் சிலை நிறுவும் அனுமதி இரத்து: ஆனால் சிலை அகற்றப்படவில்லை

Voice of Mannar

மன்னார் திருக்கேதிஸ்வர திருத்தள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்காண அனுமதிப்பத்திரம் கடந்த வியாழக்கிழமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்டச்செயலாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஆனால் புத்தர் சிலை இன்று நான்கு நாட்களாகியும் அகற்றப்படவில்லை.புத்தர் சிலை வைக்கப்பட்ட காணி இரு தனி நபருக்குச் சொந்தமானதாக காணப்பட்டது.இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா அரசுத் தலைவரின் ஆலோசகரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவ விஜய சிங்க திருக்கேதிஸ்வரத்திற்கு சென்று புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டபின்னர் தனியாருக்கு சொந்தமான காணி என்பதால் அதனை அகற்றுமாறு கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிகின்றன..
Source: http://thaaitamil.com/?p=18203

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator