Friday, May 25, 2012

மன்னாரில் கரையொதுங்கிய சடலம்

மன்னாரில் கரையொதுங்கிய சடலம் மன்னார் பிரதான பாலத்திற்கு அருகிலுள்ள கடற்படையினரின் காவலரணுக்கு முன்பாக வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை காலை கரையொதுங்கியது. இந்த வயோதிபத்தாய் மன்னார் பெரிய கடையைச் சேர்ந்த செபமாலை றெசினா (வயது 76) என அவரது மகன் அடையாளம் காட்டியுள்ளார்.
இந்தப்பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவரெனவும் மன்னார் உப்பள கடற்கரை வீதியூடாக வீட்டிற்கு வரும் போது தவறி கடலில் விழுந்திருக்கலாம் என அவரது மகன் தெரிவித்தார்.
மன்னார் நீதிவான் ஏ.யூட்சன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்ட போதே வயோதிபத்தாயின் மகன் இவ்வாறு தெரிவித்தார்.
சடலத்தை பார்வையிட்ட நீதிவான் சடலத்தை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்து பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
[Source: http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=14649:2012-05-25-12-56-23&catid=54:local&Itemid=458]

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator