Wednesday, April 18, 2012

அதிகமா கூல்டிரிங்க் குடிக்காதீங்க! இதயத்துக்கு ஆபத்து !!

இப்பொழுதெல்லாம் எதற்கெடுத்தாலும் கூல்டிரிங்க்ஸ் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோடை காலத்தில் சில்லென்று குடித்தால் போதுமே என்று தோன்றுவதால் தினசரி இனிப்பு கலந்த கூல்டிரிங்ஸ்களாக குடிக்கின்றனர். இப்படி தினசரி கூலாக குடிப்பவர்களின் இதயம் பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம், குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வு மேற்கொண்டது. ஆய்விற்கு ஆண்கள் மட்டுமே உட்படுத்தப்பட்டனர்.

கடந்த 22 ஆண்டுகளாக அமெரிக்கர்கள் 40 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது,

செல்போனில் உலா வரும் ஆவி


தூத்துக்குடியில் செல்போனில் பதிவாகியுள்ள மர்ம உருவ படத்தினால் ஆவி உலா வருவதாக வதந்தி பரவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்தவர் யுவராஜ். இவர் தூத்துக்குடி துறைமுகத்தின் நுழைவு பகுதியில் தற்காலிக அடையாள அட்டை வழங்கும் பிரிவில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 14ம் தேதியன்று இரவு செல்போனில் அவரது நண்பர் படம் எடுத்தார். அதில் அவருக்கு படத்திற்கு பின்னால் மர்ம உருவம் ஒன்று அந்தரத்தில் நிற்பது போன்றும் பதிவாகியுள்ளது. இது சினிமாவில் வரும் ஆவி, பேய் உருவம் போல இருந்துள்ளது.

தமிழக மக்களின் புறக்கணிப்பால் கப்பல் சேவை நிறுத்தம்



கொழும்பு - தூத்துக்குடி கப்பல் சேவை கடந்த ஆண்டு ஜூன் மாதம்
தொடங்கப்பட்டது. பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த கப்பல் போக்குவரத்து
கடந்த நவம்பர் மாதம் 18-ந் திகதியுடன் நிறுத்தப்பட்டது.
.
இந்தநிலையில் தூத்துக்குடி-கொழும்பு இடையே சிறிய பயணிகள் கப்பல் வரும்
19-ந் திகதி இயக்கப்படும் என துறைமுக பொறுப்பு கழகம் அறிவித்தது.

சிறிலங்கா ஆட்சியாளர் மீதான எதிர்ப்பும் இந்த பயண புறக்கணிப்பிற்கு
முக்கிய காரணங்களில் ஒ ன்றாகும். சிறிய கப்பல் இயக்கப்படும் என்ற
அறிவிப்புக்கு பிறகு இலங்கை செல்ல இதுவரை யாருமே முன்பதிவு செய்யவில்லை.

சாமான்யர்களையும் சாதிக்க வைக்கும் காதல்!

காதல் என்பது என்ன என்று தெரியாமலேயே இன்றைக்கு பலரும் காதல் வயப்படுகிறார்கள். ஆண், பெண் இடையே நிகழும் ரசாயன மாற்றம்தான் காதல் என்கின்றனர் சிலர். காதலை புதிர் என்றும் அது ஒரு மாயம் என்பதும் ஒருசிலரின் கூற்று. காதல் ஒரு மகிழ்ச்சியான அனுபவம், அது விவரிக்க முடியாத அனுபவம் என்பது பலரது வாதம். உற்சாகம் தருவது காதல், சொல்லித் தெரிவதில்லை காதல் என்றும் சிலர் காதலை வர்ணிக்கின்றனர்.

ஆனால் “காதல் ஒருவரை தொடும்போது அவர் கவிஞராகிறார்” என்கிறார் தத்துவஞானி பிளாட்டோ. “இயற்கை உருவாக்கிய அழகிய ஓவியம்தான் காதல். அதில், கற்பனையும் சேரும்போது அழகான காவியமாகிறது” என்கிறார் வால்டேர். நம்முடைய கவிஞர் வைரமுத்துவோ “காதல் வந்தால் கையெழுத்து அழகாகும்” என்கிறார். எது எப்படியோ காதல் வயப்பட்டவர்கள் தங்களின் காதலில் வெற்றி பெற நிபுணர்கள் ஆலோசனைகள் கூறியுள்ளனர். காதலிப்பவர்கள் அதை படித்துப் பாருங்களேன்.

இந்தியாவைப் போல அதிகாரப்பகிர்வு அவசியம் – இந்தியக் குழுவிடம் கூட்டமைப்பு வலியுறுத்தியது


[ புதன்கிழமை, 18 ஏப்ரல் 2012, 01:17 GMT ] [ தா.அருணாசலம் ]
 அதிகாரங்கள் இல்லாத அதிகாரப்பகிர்வினால் எந்தப் பயனும் இல்லை என்றும், இந்திய முறைமையில் மாநிலங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது போன்று மாகாணசபைகளுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்காவுக்கு ஆறு நாள் பயணமாக வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று தாஜ் சமுத்ரா விடுதியில் சந்தித்தனர்.

மன்னார் வீதிப் போக்குவரத்து பொலிஸார் விசித்திரிரமான முறையில் இலஞ்சம் அறவீடு

மன்னாரில் கடமையாற்றுகின்ற வீதி போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் சிலர் தற்போது மக்களிடம் விசித்திரமான முறையில் இலஞ்சம் பெற்றுக்கொள்ளுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக பணமாகவும், மதுபான வகைகளாகவும் இலஞ்சத்தை பெற்றுள்ளனர். ஆனால் தற்போது வித்தியசமான முறையில் தமது இலஞ்சத்தை பெற்றுக்கொள்ளுகின்றனர்.
துவிச்சகரகர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் சிறு தவறுகள் இழைக்கும் பட்சத்தில் அவர்களை மறித்து, நீதிமன்றம் கொண்டு செல்லப் போவதாகவும் அதற்கு கூடுதலாக தண்டப்பணம் அறிவிடப்படும் எனவும் கூறுகின்றனர்.

கொழும்பில் நடமாடும் கண்காணிப்புக் கெமரா முறை

  கொழும்பு நகரில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி கொழும்பை பாதுகாப்புமிக்க நகராக்குவதற்கான வேலைத் திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக நடமாடும் பாதுகாப்பு கண்காணிப்பு கெமரா முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்தார்.

நடமாடும் பாதுகாப்பு கண்காணிப்பு கெமரா பொருத்தப்பட்ட வேன் நேற்று மாலை பொலிஸ் தலைமையக வளாகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அதன்போதே பொலிஸ் மா அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு நகரில் பல்வேறு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 2010 டிசம்பர் 29 ஆம் திகதி பாதுகாப்புக் கெமராக்கள் 110 கொழும்பு நகரில் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
_
source: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37643

அவசர நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்ட "வேர்ஜின்' விமானம் _

  பிரித்தானிய கட்விக் விமான நிலையத்தில் திங்கட்கிழமை விமானமொன்று விமான அறைக்குள் புகை மூட்டம் ஏற்பட்டதையடுத்து அவசர நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்டதையடுத்து அந்த விமான நிலையத்திலான விமான சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டன.

மேற்கு சஸகஸ் விமான நிலையத்திலிருந்து அமெரிக்க ஒர்லான்டோவை நோக்கிச் சென்ற 'ஏ 330' வேர்ஜின் விமான சேவையின் விமானமே அவசர நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்டுள்ளது.

மேற்படி விமான அறைக்குள் புகை மூட்டம் ஏற்பட்டதையடுத்தே அந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

தலைமன்னாரின் பல பகுதிகளிலும் சட்டவிரோதமாக பனைமரம் தறிப்பு


தலைமன்னார் கிராமம் மற்றும் தலைமன்னார் பியர் கிராமங்களில் பல ஏக்கர் கணக்காண காணிகளில் உள்ள பனை மரங்கள் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சட்டவிரோதமான முறையில் வெட்டப்படுவதாக பனை மர காணிகளின் உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தலைமன்னார் கிராமம் மற்றும் தலைமன்னார் பியர் கிராமங்களில் தனியாருக்குச் சொந்தமான பல ஏக்கர் கணக்கில் காணிகள் உள்ளன. இந்தக் காணிகளில் பல ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. இந்தப் பனை மரத்தின் மூலம் அம்மக்கள் தமது வருமானத்தை தேடிக்கொள்ளுகின்றனர்.
இந்த நிலையில் இந்தக் காணிகளுக்குள் செல்லுவோர் பொலிஸாரின் உதவியுடன் பனை மரங்களை வெட்டிச் செல்லுகின்றனர்.
திருடப்படும் பனை மரங்களை சீவி அதிகூடிய விலைக்கு விற்கின்றனர். இந்தச் செயல்களில் ஈடுபடுவோர் பொலிஸாருக்கு இலஞ்சப்பணத்தை வழங்கி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்தியக் குழுவின் கேள்விகளால் நிலைதடுமாறிய இலங்கை அரசு; நாடாளுமன்றில் நேற்று நடந்த சந்திப்பில் கூட்டமைப்பு, ஐ.தே.க. இணைந்து தாக்குதல்


 கொழும்பு வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இலங்கைத் தமிழர் பிரச்சினைத் தீர்வு, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை நடைமுறைப்படுத்தல் விவகாரம் தொடர்பில் இலங்கைத் தரப்பிடம் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்ததால், உரிய முறையில் பதிலளிக்க முடியாமல் திக்குமுக்காடி வாயடைத்து  சங்கடத்துக்குள்ளாகியது இலங்கைத் தரப்பு.
 
ஐ.தே.க., தமிழ்க் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி குற்றச்சாட்டுக்களை அடுக்கியதுடன் இலங்கை அரசின் காலத்தை இழுத்தடிக்கும் கபடத்தையும் அக்குவேறு ஆணி வேராகப் புட்டுப்புட்டு வைத்தன. இதனால் அரச தரப்பு பெரும் சங்கடத்துக்குள்ளானது.
 
உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழு நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இலங்கை அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தியது. இதன்போதே மேற்கண்ட சங்கடத்தை அரசு சந்திக்க நேரிட்டது.

ஜனாதிபதி மகிந்தவிற்கு அபசகுனத்துடன் ஆரம்பமான சித்திரைப் புத்தாண்டு

Posted Image
மலர்ந்த இந்த சித்திரைப் புத்தாண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்கு அபசகுணமாக அமைந்ததாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை சித்திரைப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஜனாதிபதியின் தங்காலை கால்டன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதி பாரியார் ஷிரந்தி ராஜபக்‌ஷ ”விருந்தோம்பல்” நேரத்தில் ஜனாதிபதிக்கு ஊண்டிய பாற்சோற்றில் ஒரு பகுதி கீழே விழுந்துள்ளது. இந்த சகுணம் அபசகுணமானது என சிரேஷ்ட ஜோதிடர்கள் சிலர் கூறியுள்ளனர்.
இந்தத் தருணத்தில் மன ரீதியாக குழப்பமடைந்த ஜனாதிபதி மகிந்த அவ்விடத்தைவிட்டு வெளியேறி, நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்த ரூபவாஹினி தொலைக்காட்சியின் ஒளிபரப்பையும் உடடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் இதுகுறித்து கேட்டபோது தெரிவித்தார்.

நடு வீதியில் கடத்தப்பட்டு இலங்கை பெண் பாலியல் வல்லுறவு! – சைப்பிரஸில் அசம்பாவிதம்

இலங்கைப் பெண் ஒருவர் சைப்பிரஸின் தலைநகர் நிக்கோசியாவில் வைத்து பலாத்காரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நிக்கோசியாவின் சப்ரப் அக்லன்ஜா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வேளையில் காரில் வந்த ஒருவர் காருக்குள் ஏறுமாறு தன்னை வற்புறுத்தியதாக இலங்கைப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் இருந்து தான் தப்பிக்க முயன்ற வேளை, காரில் வந்த நபர் தன்னை பலாத்காரப்படுத்தி காருக்குள் ஏற்றியதாக கூறியுள்ளார்.

Tuesday, April 17, 2012

ஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்


ஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

 
திரைப்படம் என்பது அவர்தம் நினைவுப் பிரபஞ்சத்தின் பகுதியாக ஆகின எல்லாச் சமூகங்களிலும், அந்தந்தத் தலைமுறை யுவதிகளுக்கும் இளைஞர்களுக்கும் தமது ஆதர்ஷ திரைப்பட கதாநாயகியும் நாயகனும் இருக்கவே செய்கிறார்கள். அமெரிக்கா, இந்தியா, தமிழ்நாடு என கறுப்பு வெள்ளைத் திரைப்பட யுகம் என்பது பசுமையான நினைவுகளை, ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பிறந்த தலைமுறையின் நினைவு வெளியில் துயரங்களாகவும் சந்தோஷங்களாகவும் கண்ணீராகவும் மோகமாகவும் விட்டுச் சென்றிருக்கின்றன.  
ஸ்ரீவித்யா எழுபதுகளில் பதின்ம வயதைக் கடந்த இளைஞர்களுக்கு மோகத்தையும் தாபத்தையும் வழிபாட்டுணர்வையும் அளித்த பெயர். எனது வாசிப்பு மேசைக்கு மேல் இரண்டு பெண்களின் கண்களை மட்டும் போஸ்டர் வடிவில் ஒட்டி வைத்திருந்தேன். அந்தக் கண்களுக்கு உரிய ஒருவர் தமது பிரசவத்தின் போது அகால மரணமுற்ற இந்திய மாற்றுச் சினிமாவின் அபூர்வ நடிகையான ஸ்மிதா பாடீல். பிறிதொருவர் ஸ்ரீவித்யா.  
சமூக மாற்றம் தொடர்பான புரட்சிகர உணர்வென்பதும், தார்மீகக் கோபம் என்பதும் அந்த வயதில் மனோரதியமானதும் கனவு மயமானதும்தான். மோகமும் துயருமாக இந்த இரு பெண்களதும் கண்கள் எனக்குள் ஏற்படுத்திய கனவுமயமான, மங்கலான மனோரதிய உணர்வைத்தான், எனக்குக் கறுப்பு வெள்ளை வடிவத்தில் வந்த, பிடரிமயிர் சிலிர்த்தபடியிலான சே குவேராவின் தொப்பியில் ஜொலித்த நட்சத்திர பிம்பமும் உருவாக்கியது.

இலங்கையில் இணையத்தள குற்றங்கள் தொடர்பாக 800இற்கும் அதிகமான முறைப்பாடுகள் _

  பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலையமைப்புகள் மற்றும் இணையத்தளக் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 15ஆம் திகதி வரையிலான மூன்றரை மாதக் காலப்பகுதியில் 800இற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் கீழ் இயங்கும் கணினி அவசர பொறுப்புக் கூறலுக்கான தயார்நிலைக் குழு அறிவித்துள்ளது.

இணையத்தளங்களினூடான பாலியல் குற்றங்கள் மற்றும் பலாத்காரமாக பணம் பறித்தல் தொடர்பான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாகவும் அவற்றில் பேஸ்புக் தொடர்பான குற்றச் செயல்களே அதிகமாக இடம்பெற்று வருவதாகவும் அக்குழுவின் செயற்றிட்ட முகாமையாளர் லக்ஷான் சொய்சா வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

"அதிகாரம் இல்லாத அதிகாரப் பரவலாக்கம் பயன் தராது"



இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் எவ்விதமான அச்சுறுத்தலுமின்றி, நீடித்திருக்கக் கூடிய ஓர் அரசியல் தீர்வின் மூலம் கண்ணியமாக வாழ இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

இந்திய நாடாளுமன்ற மக்களவையின் எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில், இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை சந்தித்து உரையாடிய போதே கூட்டமைப்பினர் இதை வலியிறுத்தியுள்ளனர்.

முறைப்பெண்ணுடன் கல்யாணம் நடந்தது போல் போஸ்டர் ஒட்டிய வாலிபர் கைது

தூத்துக்குடி: முறைப் பெண்ணை திருமணம் செய்து தர மறுத்ததால் அந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது போல் போஸ்டர் அடித்து ஒட்டியவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தொட்டிக்காரன் விளையைச் சேர்ந்தவர் மந்திரம் மகன் குமார். அவர் மதுரையில் உள்ள தனியார் அழைப்பிதழ் விற்பனை கடையில் வேலை பார்த்து வந்தார். அவரது உறவினர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதி உதயநேரியைச் சேர்ந்த பழனிகுமார் என்பவர் குடும்பத்துடன் மதுரையில் தங்கியிருந்து தொழில் செய்து வருகிறார்.

இணைய போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவும் சீனாவும்

track_1.5வாஷிங்டன்:  மேற்குலக அரசாங்கங்கள் மற்றும் பாரிய வர்த்தகங்கங்கள் மீதான சீனாவின் திட்டமிட்ட இணையத் தாக்குதல்கள் குறித்த எதிர்ப்புகள் வாஷிங்டனில் வலுவடைந்திருக்கும் நிலையில் சீனாவும் அமெரிக்காவும் ஜாக்கிரதையான யுத்தப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இராஜாங்கத் திணைக்கள மற்றும் பென்டகன் அதிகாரிகள் தமக்கு சமமான பதவிகளிலுள்ள சீன அதிகாரிகளுடன் கடந்தவருடம் இரண்டு யுத்த பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். இரு தரப்பினரிடையேயுமான இராணுவ ஆக்கிரமிப்புகள் உணரப்பட்டாலோ அல்லது இருதரப்பும் இலக்கு வைக்கப்பட்டாலோ எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது அல்லது தடுப்பது போன்ற முறைமைகளை இப்பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதன் அடுத்த அமர்வானது மேயில் நடைபெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

"13+' உறுதியளித்து 3 வருடங்கள்



பொருளாதார அபிவிருத்தி போன்றே வட மாகாண சபைத் தேர்தல் உட்பட அரசியல் ரீதியான மேம்பாடும் மிகவும் அவசியமானதென சுட்டிக்காட்டியுள்ள இந்தியத் தூதுக் குழுவினர் இலங்கை அரசு பெற்றெடுத்த குழந்தையான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கொழும்பு முழுமையாக அமுல்படுத்துமென எதிர்பார்ப்பதாக தெரிவித்திருக்கின்றனர். அதேவேளை இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வாக 13+ வழங்கத் தயாரென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்து 3 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அது தொடர்பான முன்நகர்வு எதனையும் பார்க்க முடியவில்லையே என்று இந்திய எம்.பி.க்கள் குழுவுக்கு தலைமை தாங்கிய இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

10 மில்லியன் ரூபாவில் யாழ்.நூலகம் அபிவிருத்தி

யாழ். நூலகத்திற்கு ஆளுநரால் வழங்கப்பட்ட 10 மில்லியன் ரூபாவினைக்கொண்டு யாழ்.நூலகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இன்றைய தினம் யாழ்.நூலகர் குழுவுக்கும் மாநகர சபை முதல்வர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலிலே இம் முடிவு எடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் நூலகத்தினை மேலும் அழகுபடுத்தல், கணனிமயமாக்கல், பாதுகாப்பு கமராக்களை நூலகப் பகுதிக்குள் பொருத்துதல், மாநாட்டு மண்டபத்தை தெரிவு செய்தல், லிவ்ற் வசதி என்பவற்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காப்பகம், மற்றும் சுவடிக்கூடம் என்பவற்றை புதிய பிரிவுகளாக அமைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

ஜெனிவாவுக்கும் கூடங்குளத்துக்கும் தொடர்பில்லையாம் - இந்தியாவின் குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா

ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததற்கு பதிலடியாகவே, கூடங்குளம் அணுஉலைக்கு சிறிலங்கா எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக சிறிலங்காவின் அணுசக்தி அதிகாரசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“மின்சார தேவைக்காக அணுஉலை அமைப்பதற்கு இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா ஒருபோதும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

ஒபாமா தலைக்கு விலை அறிவித்த இங்கிலாந்து கோடீஸ்வரர்!

மும்பையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதியான ஹபிஸ் சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசு தொகையை அறிவித்தது. இதற்கு போட்டியாக இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியான அகமது என்பவர் ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஆகியோரை பிடித்து கொடுத்தால் ரூ.80 கோடி (10 மில்லியன் பவுண்ட்) பரிசு தொகை வழங்குவேன் என அறிவித்தார்.
Source: http://www.seithy.com/breifNews.php?newsID=58772&category=WorldNews&language=tamil

நோர்வேயில் 77 பேரைக் கொன்ற கொலையாளி குற்றச்சாட்டை மறுக்கிறார்!

நோர்வேயில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 77 பொதுமக்களை கொன்ற சம்பவத்தில் குற்றஞ்சாட்ட நபர், தன்மீது சுமத்தப்பட்டுள்ள 'பயங்கரவாத நடவடிக்கை மற்றும் கூட்டுக் கொலைகளுக்கான' குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார். ஆனால் ஆந்தூஸ் பேரிங் பிரேய்விக் குண்டுத்தாக்குதல் மற்றும் அதன்பின்னர் கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
பல கலாச்சாரங்களிலிருந்தும் இஸ்லாத்திலிருந்தும் நோர்வேயை பாதுகாப்பதற்காக தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் நேற்று நீதிமன்ற விசாரணையின் போது தெரிவித்தார். குறித்த தாக்குதல் சம்பவத்தின் போது எல்லோரும் எப்படி கொல்லப்பட்டார்கள், மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரச தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விளக்கமளித்தபோது, அதுகுறித்து பிரேய்விக் எவ்வித உணர்வையும் அங்கு வெளிப்படுத்த வில்லை.
இதேவேளை, தன்னை ஒரு புத்திசுயாதீனம் உள்ளவராகக் காட்டிக்கொள்ளவே பிரேய்விக் விரும்புவதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
http://www.seithy.co...&language=tamil

கட்டிப் பிடித்தால் கோக் குடிக்கலாம்

Coke
pic

யாழ்.பல்கலைக்கழக மாணவியின் சடலம் வவுனியாவில் மீட்பு!

வவுனியா- வேப்பங்குளம் பகுதியில் வீடொன்றின் கிணற்றிலிருந்து, யாழ். பல்கலை கழக 3ம் வருட மாணவியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணியளவில், வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பின்பக்கமுள்ள கிணற்றிலிருந்தே குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மரணமடைந்தவர் 25 வயதுடைய மரியதாஸ் மரியஜெனற் பௌசியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் வவுனியாவிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த வேளை, நேற்று மாலை தொடக்கம் காணாமல் போயிருந்தார்.
இவரை தேடும் பணியில் ஈடுபட்ட உறவினர்கள்,  இன்று வீட்டுக்கு பின்பக்கம் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வவுனியா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Source: http://www.saritham.com/?p=57329

சர்தாரியை மறுத்துப் பேசியதால் பதவியை இழக்கும் பாக். வெளியுறவு அமைச்சர் ஹினா?

டெல்லி: பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவுத் துறை அமைச்சரான ஹினா ரப்பானி கர் தனது பதவியை இழக்கக்கூடும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் யூசப் ராஸா கிலானி கடந்த ஞாயிற்றுக்கிழமை லாகூரில் உள்ள தனது வீட்டில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது காஷ்மீர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த புதிய குழு அமைக்கப்படும் என்றார். புதிய குழு பற்றி அவர் எந்த விவரமும் கொடுக்கவில்லை.

இந்தியக்குழு அழுத்தம் தரவில்லை, 13வது திருத்தம் குறித்தும் பேசவில்லை – ஜி.எல்.பீரிஸ் தகவல்

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர், தேசியப் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியுள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும், சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்தியக் குழுவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது தொடர்பாக எந்தக் கருத்தும் முன்வைக்கப்படவில்லை.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்,

“நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் அதற்கு சிறிலங்கா அரசு கொடுக்கும் முன்னுரிமை பற்றி அவர்களுக்கு விளக்கினோம்.
இந்த நடைமுறைப்படுத்தலுடன் தொடர்புடைய அமைப்புகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

அமெரிக்காவிடம் தனி ஈழ வாக்கெடுப்பு கோரிக்கை! முந்திக்கொண்டு கலைஞர் ஆதரவு

தனி ஈழம் கிடைக்க இந்திய அரசு தேவையான ஆதரவும் அழுத்தமும் தர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில்,

´தனி ஈழம்´ வழங்குவதற்கு தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கது.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில் இதைப் போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒருசில நாடுகள் தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

மனித நேயமிக்க காவலர்களால் மீட்கப்பட்ட முதியவர் (படங்கள்)



 திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரயிலடி அருகே உள்ள மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பையில் ஒரு முதியவர் பல நாட்களாக பட்டினியாக கிடக்கும் தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்திற்க்கு சொன்னார்கள் சில மனிதாபிமானிகள்.
அந்த முதியவரால் எழுந்து நடக்க முடியவில்லை. அவரது முனகல் சத்தம் தான் குப்பைக்குள் மனிதன் இருப்பதாக சொன்னது. இந்த தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலிசார் முதல், வருவாய் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என்று பலருக்கும் தகவல் சொல்லிவிட்டு நகர்ந்தனர
மனித நேயமிக்க காவலர்களால் மீட்கப்பட்ட முதியவர் (படங்கள்)

 திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரயிலடி அருகே உள்ள மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பையில் ஒரு முதியவர் பல நாட்களாக பட்டினியாக கிடக்கும் தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்திற்க்கு சொன்னார்கள் சில மனிதாபிமானிகள்.

 அந்த முதியவரால் எழுந்து நடக்க முடியவில்லை. அவரது முனகல் சத்தம் தான் குப்பைக்குள் மனிதன் இருப்பதாக சொன்னது. இந்த தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலிசார் முதல், வருவாய் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என்று பலருக்கும் தகவல் சொல்லிவிட்டு நகர்ந்தனர்.


இந்த தகவல் கிடைத்த முத்துப்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் தெட்சிணாமூர்த்தி, செல்வராஸ் ஆகியோரை அனுப்பி அந்த முதியவரை மீட்டுவர சொன்னதன் பேரில் குப்பையில் கிடந்த அந்த முதியவர் மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட அந்த முதியவருக்கு முதலில் குடிக்க தண்ணீரும், உண்ண உணவும் கொடுக்கப்பட்டது. குளிக்க வைத்து திருத்துறைப்பூண்டி மருத்துவமணைக்கு அனுப் பிவைக்கப்பட்டார்.

 மருத்துவமணைக்கு செல்லும் முன்பு தனது பெயர் மூசா. தூன் இந்துவாக பக்கிரிசாமியாக இருந்து முஸ்லிமாக மதம் மாறியவன்.

என்னை என் பிள்ளைகள் விரட்டிவிட்டார்கள்.  அதனால் தான் இப்படி குப்பையில் கிடந்தேன் என்றார் மூச்சு வாங்கியவாறு.

 இந்த மனித நேய சேவை செய்த சிறப்பு சப் இன்ஸ்அபக்டர்களை பொதுமக்கள் பாராட்டித்தான் சென்றார்கள்.
 Source:http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=74231


பாகிஸ்தானிலிருந்து ஒசாமா குடும்பம் நாளை நாடு கடத்தப்படுகிறது

இஸ்லாமாபாத்: அல் குவைதா இயக்கத் தலைவராக இருந்த பின்லேடனின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் பாகிஸ்தானில் இருந்து நாளை நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல் குவைதா இயக்கத் தலைவர் பின்லேடனை 11 மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிரடிப்படை சுட்டுக் கொன்றது. அதன் பிறகு ஒசாமாவின் 3 மனைவிகளும் அவர்களது குழந்தைகளும் பாகிஸ்தான் அரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

தென்சீனக் கடல் உரிமை தொடர்பாக சீனா- பிலிப்பைன்ஸ் இடையே பதற்றம்

மணிலா: தென்சீனக் கடல் உரிமை தொடர்பாக கடல்சார் பிரச்சனைகளுக்கான சர்வதேச தீர்ப்பாயத்திடம் முறையிட பிலிப்பைன்ஸ் நாடு முடிவு செய்துள்ளது.

அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்சீனக் கடலின் ஸ்கார்பரோ தீவுப் பகுதியில் சீனா உரிமை கோருவதை எதிர்த்து சர்வதேச தீர்ப்பாயத்திடம் முறையிடப் போவதாகவும் சீனா தமது தரப்பு வாதத்தை தீர்ப்பாயத்திடம் எடுத்துச் சொல்லுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா-பிலிப்பைன்ஸ் மோதல்

புள்ளயைப் பார்த்து கொன்னுடுவேன்னு சொல்லாதீங்க, ப்ளீஸ்!

எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கும் போது நல்லவர்களாகத்தான் பிறக்கின்றனர். சமுதாயத்தில் அவர்கள் சிறந்தவர்களாக மாறுவது பெற்றோர்களின் கையில்தான் இருக்கிறது. குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பெற்றோர்களுக்கு பங்குண்டு ஏனெனில் அவர்கள் கற்றுக்கொள்வதே பெற்றோர்களைப் பார்த்துதான். எனவே குழந்தைகளுக்கு ரோல்மாடலாக திகழவேண்டிய பெற்றோர்கள் குழந்தைகள் முன்னிலையில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள்.

தேவையற்ற விமர்சனம்

நம்முடைய நண்பர்களுக்கு நாம் செல்லப்பெயர் வைத்திருக்கலாம். அந்தப்பெயரை குழந்தைகள் முன்னிலையில் சொல்லி விமர்சிப்பது தவறான பழக்கம். ‘முட்டைக்கண்ணன்’ என்று பெயர் வைத்திருந்தால் அதை கேட்டு நினைவில் வைத்துக்கொள்ளும் குழந்தைகள், அடுத்தநாள் நண்பர் வரும்போது முட்டைக்கண்ணன் அங்கிள் வந்திட்டார் என்று கூற வாய்ப்புள்ளது எனவே எச்சரிக்கை.

இலங்கையில் 30 வருடமாகவே தமிழர்கள் அகதிகளாகத்தான் உள்ளனர்-பசில்

கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் அகதிகளாக இருப்பது 30 வருடமாக இருக்கும் ஒன்றுதான். இருப்பினும் இடம் பெயர்ந்தவர்களில் 95 சதவீதம் பேரை மறுகுடியமர்த்தி விட்டோம் என்று இந்திய எம்.பிக்கள் குழுவிடம் ராஜபக்சேவின் தம்பியான பசில் ராஜபக்சே கூறியுள்ளார்.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பிக்கள் இலங்கை போயுள்ளது. அங்கு இன்று தங்களது முதல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முதலில் பசில் ராஜபக்சேவை அவர்கள் சந்தித்துப் பேசினர். காபி, டீ, பிஸ்கட் உள்ளிட்டவற்றைக் கொடுத்து இந்திய எம்.பிக்களை உபசரித்தார் பசில். பின்னர் அவர் இந்தியக் குழுவினரிடம் பேசுகையில்,

வடக்கு கிழக்கில் இதுவரை 49,507 வீடுகள் நிர்மாணம்; உலக வங்கியின் உதவியுடன்

news
 வடக்கு, கிழக்கு வீடமைப்பு மீள் நிர்மாணத்திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்போது 49 ஆயிரத்து 507 வீடுகளின் நிர்மாண வேலைகள் முடிவடைந்து அவை பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்று திட்டப் பதில் பணிப்பாளர் க.தெய்வேந்திரம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
உலக வங்கி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஊடாக இந்தத்திட்டத்துக்கு நிதியை வழங்கியிருந் தது. தலா 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபா இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டு அவர்களுடைய பங்களிப்பையும் இணைத்து இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு மாகாணங்களுக்குமான வீடமைப்பு ஒதுக்கீடு 50 ஆயிரத்து 91 ஆகும். எனினும் 572 பயனாளிகளுக்கான வீடமைப்பு உதவிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
மீளக்குடியமராமை, இந்தியா வுக்குப்புலம் பெயர்ந்தமை, பகுதி வீட்டுடன் காணி விற்கப்பட்டமை, உள்ளூர் இடப்பெயர்வு, காணிப் பிணக்கு, பயனாளிகளின் இறப்பு, கட்டிய வீடுகள் போரினால் அழி வுற்றமை, மிகவும் நலிவடைந்தமை ஆகிய 8 காணரங்களுக்காகவே இவை இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி முஸ்லிம் இனத்தவருக்கே வழங்கவேண்டுமாம்;முஸ்லீம் காங்கிரஸ்

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் துணைச் செயலாளர் நிசாம் காரியப்பர் வலியுறுத்தியுள்ளார்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்ய வேண்டும். இதுவே தற்போதைய காலத்தின் தேவையாக அமைந்துள்ளது.

Monday, April 16, 2012

நாட்டில் டெங்கு பரவும் அபாயம் -சுகாதார அமைச்சு எச்சரிக்கை

news
இலங்கையில், இவ்வருடம் ஆரம்பித்து,  மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் டெங்கு நோய் தாக்கத்திற்கு 9657 பேர் உள்ளாகியதுடன்,  43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 
 
இந்த நோயாளர்களில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களெனவும்,ஜனவரி மாதத்தில் நாட்டில் அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு . தெரிவித்துள்ளது.
 
தற்போது, நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதால் டெங்கு நுளம்பு பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக ஏற்பட்டுள்ளது.எனவே சுற்றுப்புற சூழலை பாதுகாக்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

இன்று சார்லி சாப்ளின்(ஏப்ரல் 16) பிறந்த நாள்

இன்று சார்லி சாப்ளின்(ஏப்ரல் 16) பிறந்த நாள் அதை முன்னிட்டு....
ரு காட்சி…
பொருளாதார பெருமந்தம் சர்வதேசத்தையே முடக்கிப் போட்டிருந்த 1930கள்… பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தொழிற்சாலைகளில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பு. அப்படியே கிடைத்தாலும் சம்பளம் வாங்குவதற்குள் உன்னைப் பிடி என்னைப்பிடி என்றாகிவிடும். ரொட்டி என்பது மிகக் காஸ்ட்லியான உணவு ஏழை மக்களுக்கு.
அந்த சூழலில், எவ்வளவு வேலைச்சுமையாக இருந்தாலும் அதை செய்தே தீர வேண்டிய கட்டாயம் தொழிலாளர்களுக்கு.
இன்னொரு பக்கம் வேலைப்பகுப்பு முறையின் கொடுமை. வேலைப் பகுப்பு முறை என்பது, “ஒருவருக்கு எந்த வேலை சரியாகச் செய்ய வருகிறதோ அதை மட்டுமே தொடர்ந்து செய்வது..” உதாரணம், திருகாணியின் மரையைத் திருகுவதுதான் ஒருவருக்கு சரியாக வரும் என்றால், தொடர்ந்து அதே வேலையைச் செய்வது..

அவசரமா 'சாப்பிட' இதென்ன 'பாஸ்ட் புட்டா'? ரசிச்சு அனுபவிங்க!

இல்லற வாழ்க்கையில் தாம்பத்யம் என்பது புனிதமானது; அதனைத் தவிர்த்து மனித வாழ்க்கை அமைவதில்லை. பாலுறவு என்பதே இனவிருத்திக்கும், மனிதன் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்குமான ஒரு புனிதமான உறவு என்பது அனைவருக்கும் தெரியும். எனவே உறவின் போது இருவருமே ஒரே மனநிலையில் இருத்தல் அவசியம். உறவானது மன அழுத்தத்தை போக்கும் மருந்து எனவே உறவின் போது மன அழுத்தம் கொள்ளத் தேவையில்லை என்கின்றனர் உளவியலாளர்கள்.

நெட்டில் 'செக்ஸைத்' தேடியவர்களில் பாக். நம்பர் 1-இந்தியாவுக்கு 2வது இடம்!

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல்கள் தொடர்பான ஆய்வுகளின்படி,கூகுள் இணையத்தளத்தின் மூலம் செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களைக் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது.

இணையத்தளத்தில் ‘செக்ஸ்’ குறித்து அதிகம் தேடுதலை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன. வியட்நாம் மூன்றாமிடத்திலும் எகிப்து நான்காமிடத்திலும் இந்தோனேஷியா ஐந்தாமிடத்திலும் உள்ளதாக ‘கூகுள் ட்ரென்ட்ஸ்’ ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த பட்டியலில் அல்ஜீரியா, மொராக்கோ, மலேசியா, போலந்து, துருக்கி ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

மன்னார்க் கடலில் டைனமைட் வெடித்ததில் படகு மூழ்கியது மீனவர் தப்பினர்

மன்னார் சௌத்பார் கடற்பரப்பில் ஞாயிறு மாலை நிகழ்ந்த வெடி விபத்தொன்றில் மீன்பிடிப்படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவதினம்  மாலை சுமார் 4 மணியளவில் மன்னார் நகரைச் சேர்ந்த 5 மீனவர்கள் சௌத்பார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

துறவி இராச்சியமாகும் இலங்கை

துறவி இராச்சியமாகும் இலங்கை essay மஹிந்த ராஜபக்ஷ பழிவாங்கும் குணமும், சர்வதிகாரப் போக்கும், கொண்ட காடைத்தனமான செயல்களில் ஈடுபடுகின்ற ஒருவராக மாற்றம் பெற்று விளங்குகின்றார்.
 மார்ச் 2013இல் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றி அது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசிடம் 19 ஆவது கூட்டத் தொடரில் கேட்டுக் கொண்டது.
 

சுனாமி எச்சரிக்கை அன்ரனாவை திருடிய மீனவர்கள் கரைக்கு வந்த போது கைது

இந்து சமுத்திரத்தில் மிதக்கவிடப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை அன்டனாவைத் திருடியது தொடர்பாக தேடப்பட்டு வந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரிடம் சிக்காமல் இருப்பதற்காக கடல் பகுதியிலேயே சுற்றித் திரிந்த இவர்கள் கடந்த 11 ஆம் திகதி சுமத்திரா தீவு பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையைடுத்து தென்பகுதி கரைக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சந்தேக நபர்கள் 5 பேரும் தெவிநுவர துறைமுகத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா: உள்நாட்டு பாதுகாப்பு தற்போதும் பாரிய சவாலாகவே உள்ளது!

உள்நாட்டு பாதுகாப்பு தற்போதும் பாரிய சவால் மிக்க ஒன்றாக உள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்விகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர்கள் சிலரின் கோரிக்கையின் பிரகாரம் சர்ச்சைக்குரிய தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பாக அடுத்த மாதம் 05ஆம் திகதி கலந்துரையாடவுள்ளதாகவும் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

'பலஸ்தீன தனி நாடு அமைவதற்கு இலங்கை தொடர்ந்து ஆதரவளிக்கும்'

பலஸ்தீன தனி நாடு அமைவதற்கு இலங்கை தொடர்ந்து ஆதரவளிக்கும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் பலஸ்தீன் தனி நாடு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பலஸ்தீன ஜனாதிபதி முஹமட் அபாஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை வந்தடைந்தார்.

பலஸ்தீன ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ரெயிட் என்.ஏ.மலிக் உள்ளிட்ட குழுவினரும் இலங்கை வந்திருந்தனர்.

Northern paddy lands produce record harvest

A record harvest has been reaped from paddy lands in the North during the Maha season, for the first time since the end to the war.
Around 110,000 acres had been cultivated in the North with a harvest of 80,000 metric tonnes of paddy expected.
“The farmers have commenced gathering their harvest and the government is planning to purchase 10,000 metric tonnes of paddy from the North.

ஆபீசில் பிஸியாக இருப்பது போல் காட்டி கொள்வது எப்படி?

1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (கோட்)
திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள்.
பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.


2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக்
கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல்
பாவ்லா காட்டவும்.

முஸ்லிம்களுக்கு எதிரான கோரத்தாண்டவங்கள்

......   சர்வதேச சமூகமும்இ மேகத்திய ஊடகங்களும் விடுதலைப் புலிகளின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இந்த அக்கிரமங்களை இதுவரை கண்டுகொள்வில்லை. முஸ்லிம் சமூகமும் புலிகள் மேற்கொண்ட அந்த அராஜக நிகழ்வுகளை உலகிற்கு உரியவகையில் எடுத்துக்கூற தவறியுள்ளது.
இந்நிலையில்தான் இன்று புதன்கிழமை பிரிட்டனில் இருந்து செயற்படும் சனல் 4 தொலைக்காட்சி இலங்கை அரசாங்கப் படைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர்க்குற்றம் புரிந்ததாககூறி சில ஆவணப்படங்களை காண்பிக்கவுள்ளது.

தொழில் வாய்ப்பு, சமூக வவூட்டல், நிலையான அபிவிருத்தி – பெரெண்டினாவினால் நடைமுறைபடுத்தப்படும் மாற்றங்கள் _

60,000 நுண் நிதி கடன் திட்டங்கள். 18,000 பேருக்கு தொழில்சார் பயிற்சிகள் 10,000 பேருக்கு தனியார் நிறுவனங்களில் தொழில் வாய்ப்பு வசதிகள் 6,000 பேருக்கு தொழில் பயிற்சிகளுக்கான புலமை பரிசில்கள்.

முழுமையான சமூக அபிவிருத்திக்கு தேவையான நிதியுதவி திறமை அபிவிருத்தி தொடர்பு வலையமைப்பு, வாழ்வாதாரம் உயர்ச்சி, வாழ்க்கைச் சக்கர அபிவிருத்தி மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியனவற்றின் ஒருங்கிணைவு பொதுவான நிலையான அபிவிருத்தியின் பண்புகளாகக் கருதப்படுகின்றன. இவை தனிநபரையும், சமூகங்களையும் வலுப்படுத்த உதவியாக உள்ளன. மேலும் கிராமிய சமூகங்களை பொருளாதார

போலி கௌரவப்பட்டங்களை வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை _

  ஜனாதிபதியால் கௌரவப் பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டோரின் பெயர் விபரப் பட்டியலை விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருமளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் போலியாக கௌரவப் பட்டங்களை வழங்குவதை தடுக்கவும் அவ்வாறு கௌரவப்பட்டங்களை பெற்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சீனா போட்ட முத்துமாலையும் அமெரிக்கா போடும் பாதுகாப்பு வளையமும் - விவேகன்

சீனா தனது இந்து சமுத்திரப் பிராந்திய நடவடிக்கைகளுக்காக மிக நீண்டகாலத் திட்டமிடலுடன் மேற்கொண்ட குறிப்பாக இந்தியாவைச் சுற்றி போட்டுவைத்த முத்துமாலைத் திட்டத்தைப் சிதறடிக்கும் வகையில், அந்த முத்துமாலையைச் சுற்றி அமெரிக்கா பாரிய வளையம் ஒன்றை அமைத்துவருவது தற்போது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது.

மலாக்கா ஜலசந்தி ஊடாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நுழையும் தமது கப்பல்களுக்கு பாதுகாப்பாக சீனா சில நாடுகளில் துறை முகங்ளை அமைத்துவந்தது. இது String of pearls (முத்துமாலை) திட்டம் என பரவலாக அறியப்பட்டது.

குழந்தைக்கு நிமோனியா காய்ச்சலா? உடனே கவனிங்க!

கடுமையான காய்ச்சல், மூச்சுவிட சிரமம் என குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துவது நிமோனியா. நுரையீரல்களில் ஏற்படும் இந்த நோய்க்கு நவீன மருத்துவ சிகிக்சையோடு இயற்கை முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

நிமோனியா அறிகுறிகள்

நெஞ்சில் குத்துவது போல் வலி, தலைவலி, கடுமையான காய்ச்சல், ஜலதோஷம், தலை - தொண்டை ஜில்லென்று இருத்தல் ஆகியவை நிமோனியா காய்ச்சலில் அறிகுறி. இந்நோய் இருந்தால் சளி பழுப்பு அல்லது துருப்பிடித்த இரும்பு போன்ற நிறத்தில் இருக்கும். மூச்சுவிடச் சிரமமாக இருக்கும்.

இலங்கை விவகாரத்தை கையிலெடுத்து அரசியல் ஆட்டம் ஆடுகிறார் ஜெயலலிதா; தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றச்சாட்டு

news
 இலங்கை விவகாரத்தைக்களமாகப் பயன்படுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆட்டம் ஆடுகின்றார் எனக் குற்றஞ்சாட்டியுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலங்கைப் பயணம் பயனுள்ளதாக அமையவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

 
இலங்கை இந்திய உறவைப் புதுப்பிக்கும் முனைப்புடனேயே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கொழும்பு வருகின்றது. மாறாகத் தமிழர்கள் மீதுள்ள பாசம் காரணமாக அல்ல என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சென்னையில் சிக்கிய போலி பெண் ஐபிஎஸ் அதிகாரி-கைவரிசை குறித்து 'ஷாக்' தகவல்கள்

சென்னை: சென்னையில் பிடிபட்டுள்ள போலி பெண் ஐ.பி.எஸ். பற்றி ஒவ்வொருநாளும் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி வந்து கொண்டே இருக்கின்றன.

சென்னையில் சிக்கிய போலி பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி விஜயாபானு தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே புழல் சிறையில் விஜயபானு காட்டிய ஆட்டம்தான் சுவாரசியமானது.

இலங்கை பற்றி மீண்டும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் விவாதம்

கொழும்பு: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நவம்பர் மாதம் இலங்கையின் செயல்பாடுகள் குறித்து விவாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசாங்கம் நியமித்திருந்த மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துமாறு ஜெனிவா மாநாட்டில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Sunday, April 15, 2012

கூந்தலை பாதுகாக்கும் தேங்காய் பால்

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் கூந்தலை பராமரிக்கவும், பாதுகாக்கவும் தேங்காய் எண்ணெயை உபயோகிக்கின்றனர். தேங்காயில் இருந்து கிடைக்கும் எண்ணெயைப் போல தேங்காய் பால் கூந்தலை பாதுகாக்க உதவுகிறது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். கூந்தலுக்கு ஊட்டமளிப்பதோடு உதிராமல் தடுத்து கூந்தலின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தேங்காய் பாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. வைட்டமின்கள், தாது உப்புகள், பொட்டாசியம், போலேட் போன்றவை காணப்படுகின்றன.

தேங்காய் பால் ஊட்டச்சத்து

ஆனையிறவில் அடுத்த வருட இறுதிக்குள் உப்பு உற்பத்தி _

  ஆனையிறவு உப்பளங்களில் உப்பு உற்பத்தி நடவடிக்கைகளை 2013 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்பு ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சம்பிரதாய தொழிற்துறை மற்றும் சிறிய தொழில் முயற்சி ஊக்குவிப்பு அமைச்சின் திட்டப் பணிப்பாளர் அஜித் ஏகநாயக தெரிவித்துள்ளார்.

இதனை மீண்டும் ஆரம்பிப்பதால் 2500க்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திட்டப் பணிப்பாளர் அஜித்ஏகநாயக மேலும் தெரிவித்துள்ளதாவது, முப்பது வருட கால யுத்தம் காரணமாக ஆனையிறவில் உப்பு உற்பத்திகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

இன்று யுத்தமற்ற சூழ்நிலையில் மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். யுத்தத்திற்கு முன்பு இங்கு வருடமொன்றிற்கு 70000 மெற்றிக் தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. இதனை ஆரம்பிப்பதன் மூலம் அந்த இலக்கை அடைவதே எமது நோக்கமாகுமென்றும் திட்டப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

Source: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37612 

மொராக்கோ நாட்டு மனைவியின் தாக்குதலால் நினைவாற்றலை இழந்துள்ள இலங்கையர் ரியாத்தில் சம்பவம்

சவூதி அரேபியாவில் ரியாத்தில் வசித்து வரும் இலங்கை ஆண் ஒருவர் தனது மொராக்கோ நாட்டு மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகியதால் நினைவாற்றலை இழந்துள்ளதாக ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. ரியாத்தில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வரும் 54 வயதுடைய பியல் ரத்னபால என்ற இலங்கையர் 29 வயதுடைய சயிம் என்ற மொராக்கோ நாட்டு பெண்ணைத் திருமணம் முடித்து கடந்த 5 வருடங்களாக ரியாத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

அதிவேக வீதியில் ஒரு நாளில் 8 விபத்துக்கள்


southern_expressway_1சீரற்ற காலநிலையால் தெற்கு அதிவேக வீதியில் இடம்பெறும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் தெற்கு அதிவேக வீதியில் 8 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.மழையுடன் கூடிய காலநிலை மற்றும் பணி மூட்டம் காணப்படும் சந்தர்ப்பங்களில் அதிவேக வீதியைப் பயன்படுத்தும் போது வேகத்தைக் கட்டுப்படுத்தி போக்குவரத்தில் ஈடுபடுமாறு பொலிஸார் சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வடக்கில் பாதிப்புற்ற மக்களை எம்.எஸ்.எப். கைவிடவில்லை



news
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் சேவையை கைவிடவில்லை என எம்.எஸ்.எப். என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள நல ஆலோசனையை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வந்த எம்.எஸ்.எப் தொண்டு நிறுவனம், கடந்த 5 ஆம் திகதி வடக்குக்கான தனது சேவையை இடைநிறுத்திக் கொண்டது.

மரணத்தின் பின்னும் வாழலாம் - வாழ்கிறான் மாணவன் சஞ்சய்!

செத்தும் கொடுத்த சீதக்காதி கேள்விப் பட்டிருப்போம். அது மரணத்தின் பின்தான ஒரு வாழ்வைக் குறிக்கும்.

மரணத்தின் பின்னதான வாழ்வு குறித்து இந்தப் பதிவும் பேசுகிறது. ஒரு மாணவனின் மரணத்தின் பின்னும் அவனை வாழ வைத்திருக்கிறார்கள் அவனின் பெற்றோர்கள். விபரம் அறியத் தொடர்ந்து வாசியுங்கள்..

7பேருக்கு வாழ்வு தந்த 15வயது மாணவன் திருப்பூரில் நெஞ்சை உருக்கிய சம்பவம். மாணவன் சஞ்சயின் தாயார் நமது முகநூல் நண்பர் M Venkatesan MscMphil அவர்களது மாணவி ஆவார் .

வங்காலையில் வீடொன்றினுள் நிர்வாணக்கோலத்துடன் புகுந்த கடற்படையினன் மடக்கிப்பிடிப்பு.


மன்னார் வங்காலைப்பாடு மீனவ கிராமத்தினுள் உள்ள வீடு ஒன்றினுள் கடற்படையினன் ஒருவன் நிர்வாண கோலத்துடன் நுழைந்த சமயம் குறித்த கடற்படையினனை அப்பகுதி மக்களினால் துரத்தி பிடிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கடந்த 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது என மன்னாரில் இருந்து சங்கதியின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

இந்திய திரை இசைக்கு நிகராக காதலர் தினத்தில் வெளியாகிய நம்மவர் சூப்பர் ஹிட் பாடல்:

காலியில் இன வன்முறை! தமிழ் குடும்பங்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்!

காலி – எல்பிட்டி – திலிதுற தோட்டத்தில் வசிக்கும் தமிழ் குடும்பங்கள் மீது சிங்கள இளைஞர்கள் தாக்குதல் நடத்தி அவர்களது வீடுகளுக்கு தீயிட்டுள்ளதோடு பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நம்பகரமான, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள்படி நடந்தவை வருமாறு,

எல்பிட்டி – திலிதுற தோட்டத்தில் உள்ள இராணுவ சிப்பாய் விடுமுறையில் ஊருக்கு வரும்போது அங்குள்ள தமிழ் குடும்பங்களை சந்தித்து தன்னை ´சேர்´ அல்லது ´மாத்தயா´ என்றுதான் அழைக்க வேண்டும் என அச்சுறுத்தி வந்துள்ளார்.

சுத்தம் சுகாதாரம்... அவசியம்!

நண்பன் குடித்த பாட்டிலை வாங்கி, வாய் வைத்து தண்ணீர் குடிப்பது, ஒரே டம்ளரில் டீ குடிப்பது, ஒருவர் கர்சீப்பை இன்னொருவர் துடைத்துக் கொள்வது, தோழி சுவைத்த சாக்லெட்டை வாங்கி கடிப்பது... இது போன்ற விஷயங்களை நட்பின் நெருக்கத்தை வெளிக்காட்டுவதற்காக சிலர் செய்யலாம். ஆனால், அதனால் எந்த அளவுக்கு தொற்றுநோய் பிரச்னை ஏற்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது. சிறிய விஷயமானாலும், கவனமாக இருந்தால், ஆரோக்கியத்துக்கு குறைவிருக்காது. உங்களை பரிசோதிக்கும் டாக்டரை பாருங்கள்; அவர் பரிசோதித்த பின், டெட்டால் திரவத்தை கையில் தடவிக்கொள்வார்; சோப்பினால் கையை கழுவுவார்.

பாகிஸ்தானில் பயங்கரம்- சிறை மீது தாக்குதல் நடத்தி 400 கைதிகளை விடுவித்த தலிபான்கள்!

பன்னு: பாகிஸ்தானின் வடமேற்கு மாகாண நகரான பன்னுவில் சிறை மீது தாக்குதல் நடத்தி 400க்கும் மேற்பட்ட கைதிகளை தலிபான்கள் விடுவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள தலிபான்களின் செய்தித் தொடர்பாளர், சிறையில் இருந்த எமது பல நூறு தளபதிகளை நாங்கள் இன்றைய தாக்குதல் மூலம் விடுவித்துவிட்டோம். பலரும் எங்களது மறைவிடங்களுக்குத் திரும்பிவிட்டனர். இன்னும் பலர் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

தூக்கத்திற்கும், ஆண்களின் மன நிலைக்கும் நிறைய தொடர்பு உள்ளது

நல்ல செக்ஸ் உறவுக்குப் பின் அடித்துப் போட்டது போல தூக்கம் வரும். இது ரொம்ப நல்லதுதான் என்கிறார்கள் அமெரிக்க உளவியலாளர்கள்.

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் அல்பிரைட் கல்லூரி ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை நடத்தின. அதில், செக்ஸ் உறவுக்குப் பின்னர் வரும் தூக்கம் குறித்தும், அதுதொடர்பாகவும் கருத்துக் கேட்டு ஆய்வு நடத்தியுள்ளனர்.

இந்த ஆய்வின் மூலம் அவர்களுக்குத் தெரிய வந்தது என்னவென்றால் நல்ல உறவுக்குப் பின் வரும் தூக்கத்திற்கும், ஆண்களின் மன நிலைக்கும் நிறைய தொடர்பு உள்ளது என்பதே.

சூடான் : பிராந்திய மோதல் தீவிரமடைகிறது



சுடானுக்கும், தென் சுடானுக்கும் இடையே எலைப்பகுதியில் தொடரும் மோதல்கள் மேலும் அதிகரித்துள்ளன.

தமது பகுதியில் உள்ள ஒரு சந்தைப் பகுதியில் சுடானிய வான்படை குண்டு வீசி குறைந்தபட்சம் 5 பேரைக் கொன்றதாக தென் சுடான் குற்றஞ்சாட்டியுள்ளது.

தெற்கு சுடானிய நகரான பெட்டியுவில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.

தென்சுடானிய படைகளால் செவ்வாயன்று கைப்பற்றப்பட்ட பெட்ரோலிய வளம் மிக்க பிராந்தியமான ஹெக்லிக்கு அருகில் சுடானிய இராணுவம் நடத்திய தாக்குதலை தாம் முறியடித்த்தாக தென்சுடான் முன்னதாகக் கூறியிருந்தது.

சுடானிய அரசாங்கத்திடம் இருந்து இது குறித்து கருத்து எதுவும் வரவில்லை.
http://www.bbc.co.uk...nfighting.shtml

சிறிலங்காவுக்குப் பறக்கும் சீனர்களின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளில் இரட்டிப்பாகியது

Posted Image
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் சீனர்களின் எண்ணிக்கை, 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2009ம் ஆண்டில் சுமார் 8000 சீனர்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

ஆனால், கடந்த ஆண்டில் 16,000 சீனர்கள் சிறிலங்காவுக்குச் சென்றுள்ளனர்.

அண்மைக்காலத்தில் வர்த்தக மற்றும் ஏனைய உறவுகளை சிறிலங்காவும் சீனாவும் அதிகரித்து வருகின்றன.

இந்தநிலையில் சிறிலங்காவை நோக்கி சீனர்கள் அதிகளவில் படையெடுக்கத் தொடங்கியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinapp...?20120415106000

திமுகவும் தமது பிரதிநிதியை சுஸ்மா குழுவிலிருந்து விலக்கிக்கொள்ள உத்தேசம்! ஈழ மக்களின் உண்மையான நிலையை அறிந்து கொள்ள இந்தப் பயணம் உதவாது என்கிறார் கருணாநிதி.

Posted Image
இலங்கைக்கு ஆறு நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இருந்து திமுகவும் விலகலாம் என்று இந்தியாவில் இருந்து வெளியாகும் "ரைம்ஸ் ஒவ் இந்தியா" செய்தி வெளியிட்டுள்ளது. சுஸ்மா சுவராஜ் தலைமையில் இலங்கை வரும் 14 பேர் கொண்ட குழுவில், திமுக சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தப் பயணத்தினால் பெரிதாக ஒன்றையும் சாதிக்க முடியாது என்றும், போரினால் இடம்பெயர்ந்த மக்களின் உண்மையான நிலையை அறிந்து கொள்ள இந்தப் பயணம் உதவாது என்றும் திமுக தலைவர் கருணாநிதி கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், தமது கட்சியின் சார்பில் பாராளுமன்றக் குழுவுக்கு நியமித்த பிரதிநிதியான இளங்கோவனை பெரும்பாலும் விலக்கிக் கொள்ளும் மனநிலையில் திமுக தலைமை இருப்பதாகவும் -ரைம்ஸ் ஒவ் இந்தியா- தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, இந்தக் குழுவுக்கு பெயர் குறிக்கப்பட்ட அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் ரபி பெர்னாட்டை, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தார். இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் பயணத் திட்டம் முற்றிலும் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்தித்துப் பேச வாய்ப்புகள் இல்லை என்றும், இலங்கை அரசின் விருந்துகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
திமுக தலைவர் கருணாநிதியும் இதே கருத்தையே தமது கட்சியின் மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடும் போது வெளிப்படுத்தியுள்ளார். புனர்வாழ்வுக்காக இதுவரை முகாம்களில் காத்திருக்கும் தமிழ்மக்களின் சார்பில் பேசுவதற்கு அனுமதிக்காத இந்தப் பயணத்தினால் என்ன பயன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் -ரைம்ஸ் ஒவ் இந்தியா- மேலும் குறிப்பிட்டுள்ளது.
http://www.seithy.co...&language=tamil

எயார் பிரான்ஸ் விமான சேவையில் தமிழ் மொழி?

Air France விமான சேவை நிறுவனம், பயணிகளுக்கான தனது விரிவாக்க சேவையில், தமிழ் மொழிக்கு முக்கிய இடத்தினை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Air France விமான சேவையானது, பிரான்சின் Charles De Gaulle பிரதான விமான நிலையத்தில் தனது சேவையினை விரிவாக்கம் செய்யவுள்ளது.

புறக்கோட்டை சித்திரவதைக்கூடத்தில் மனிதஉரிமைகள் ஆணைக்குழு திடீர் தேடுதல்

யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமற்போன ஜேவிபி மாற்றுக் குழு உறுப்பினர்களான லலித்குமார், குகன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கருத்தப்பட்ட புறக்கோட்டை, சிறிலங்கா காவல்துறை புனர்வாழ்வுப் பிரிவு கட்டடத்தில் சிறிலங்கா மனிதஉரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் திடீர் தேடுதல் நடத்தியுள்ளனர்.

Saturday, April 14, 2012

காதலிப்பது எப்படி?

1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

புத்தாண்டு கால விபத்துக்களால் 223 பேர் தேசிய வைத்தியசாலையில்

தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதிக்குள் விபத்துகள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 223 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய பிரிவு நேற்று தகவல் வெளியிட்டுள்ளது.13 ஆம் திகதி அதிகாலை தொடக்கம் 24 மணி நேர காலப்பகுதிக்குள் 223 பேர் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வெளிமாவட்டங்களிலிருந்து 33 நோயாளர்கள் அவசர சிகிச்சை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

இலங்கையைக் கண்காணிக்கும் உரிமை இருப்பதாக இந்தியா நினைப்பது தவறு பாராளுமன்றக் குழு நாளை வருகை தரும் நிலையில் அமைச்சர் சம்பிக்க கருத்து


கண்காணிப்புகளை மேற்கொள்ளும் உரிமை தங்களுக்கு இருப்பதாக இந்தியா நினைப்பது தவறு என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்தியப் பாராளுமன்ற அனைத்துக்கட்சி குழுவொன்று இலங்கை நிலைமைகளை நேரில் பார்வையிட நாளை திங்கட்கிழமை கொழும்பு வரவுள்ள நிலைமையிலேயே அமைச்சர் ரணவக்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இந்திய எம்.பி.க்கள் குழுவின் இலங்கை விஜயம் பற்றி கருத்து வெளியிட்ட அவர்;

சிரிக்கலாமே…..

சிரிக்கலாமே…..
நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே உங்கள் மிகப் பெரிய எதிரி..
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்..
இப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா???… இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா???
**************
ஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
மாணவன் : இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு சும்மா புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது…
**************

அதோ! குப்பி விளக்கில் படித்த சிறுமி மரணமாகிறாள் இதோ! கடவுளர்களுக்காக கலவைகள் தயாராகின்றன

சுன்னாகத்தில் குப்பி விளக்கில் படித்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் அந்த விளக்கு தட்டுப்பட்டதில், அதில் எரிந்து பலியாகிப் போன சம்பவம் எங்களால் வெறும் செய்தியாகவே வாசிக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த செய்திக்குள் இரு க்கக் கூடிய சோகம், துன்பம் பற்றி சிந்திப்பதற்கு யாருமில்லை. படிப்பதற்கு அவாக்கொண்ட ஒரு பிள்ளைக்கு மின்சார வசதி கிடைக்கவில்லை. அந்தப் பிள்ளை படிப்பதற்கு மின்சார வசதி கிடைத்திருந்தால் அந்தப்பிள்ளை கல்வியில் சாதனை படைத்திருக்கும் என்பது மட்டுமல்ல, அதன் உயிரும் பாதுகாக்கப்பட்டிருக்கும். என்ன செய்வது! ஏழைகளின் வாழ்வியல் துன்பங்கள் வெளிவராதவையாகிப் போவது பெரும் சோகம்.

70 ஆயிரம் பிறந்த குழந்தைகளுக்கு எய்ட்ஸ் - நைஜீரியாவில் தான் இந்த கொடூரம்!

அபுஜா: ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் நோயுடன் பிறந்திருப்பதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குனர் கூறியுள்ளார்.

நைஜீரிய நாட்டில் உள்ள ஓகுன் மாநில அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அதிகாரி ஜாண்இடாகோ இது குறித்து வெளியிட்டு அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பெண் சாமியாரை கொலை செய்து உடல் எரித்துவிட்டு தப்பியது மர்ம கும்பல்!

தென்காசி அருகே உள்ள அனந்தபுரம் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (58), விவசாயி. இவரது மனைவி பொன்னுதாய் (48). இவர் தினசரி சாமியாடி குறிசொல்வார். இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமானோர் பெண் சாமியார் பொன்னுதாயை வணங்கி குறி கேட்பார்கள். இவரும் பல்வேறு அம்மன் படங்களை வைத்து வேப்பிலை அடித்து சாமியாடியபடி குறி சொல்வார்.

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator