இலங்கையைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவாக கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, சுவிஸர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக அந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக பணியகத்தின் தலைவர் அமல் சேனாலங்காதீர தெரிவித்துள்ளார்.
தாதியர்கள், பொறியலாளர்கள், விடுதி, விமான நிலையம், வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றவும் இலங்கையர்கள் இந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இதற்கு தேவையான பயற்சிகளை வழங்க பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





2012
ஏப்ரல் 20,வெள்ளியன்று, பௌத்த பிக்குகள் தலைமையில் சுமார் 2,000 பேர்
வரையிலான ஒரு கும்பல் மஸ்ஜிதுல் கஹயிரா பள்ளிவாசலை ஆக்கிரமித்து அதனை
சூறையாடியதுடன், அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் தடங்கல்களை
ஏற்படுத்தியது.







































