Saturday, April 28, 2012

இலங்கையைத் தொழிலாளர்களுக்கு கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா


இலங்கையைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவாக கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, சுவிஸர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக அந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக பணியகத்தின் தலைவர் அமல் சேனாலங்காதீர தெரிவித்துள்ளார்.
தாதியர்கள், பொறியலாளர்கள், விடுதி, விமான நிலையம், வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றவும் இலங்கையர்கள் இந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இதற்கு தேவையான பயற்சிகளை வழங்க பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
.

இறைச்சிக் கடைகளுக்கு மாடுகளை விற்ற பலர் பணத்திற்காக அலைச்சல் பல இலட்சம் ரூபா மோசடி

மன்னார் நிருபர்

மன்னார் நகரில் இறைச்சிக்கடைக்  காரர்களுக்கு மாடுகளை விற்ற பெரும் பாலானோருக்கு அந்த இறைச்சிக் கடைக்காரர்கள்  பல இலட்சம் ரூபா பாக்கியை வழங்காது ஏமாற்றியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் நகரிலும் ஏனைய புற நகரப் பகுதிகளிலும்  பத்திற்கும் அதிகமான இறைச்சிக் கடைகள் இயங்கிவரும் நிலையில்   இந்தக் கடைகளின் இறைச்சித் தேவைக்கான மாடுகள் முன்பு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாந்தை மேற்கு,  மடு, கிளிநொச்சி, கரைச்சி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள கிராமங்களில்  வதியும் கால்நடை வளர்ப்போர்களிடமும், விவசாயிகளிடமுமே  கொள்வனவு செய்யப்படுவது வழமை.

பாலியல் புகார்- பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி மனோன்மணியம் பல்கலை. மாணவர்கள் போராட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் வேதியியல் துறை தலைவரான பேராசிரியர் செல்லமணி மீது பாலியல் புகார் கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முதுகலை முதலாமாண்டு மாணவி ஒருவருக்கு பேராசிரியர் செல்லமமணி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேராசிரியர் செல்லமணி மீது பதிவாளர் மாணிக்கத்திடம் மாணவர்கள் புகார் செய்திருந்தனர். ஆனாலும் செல்லமணி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே செல்லமணி இத்தகைய பாலியல் சீண்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

பறக்க ஆசைப்படும் மனமும் சாத்தியப்படுத்தாத சுமைகளும்








எனக்குள் ஒரு கனவு இருக்கிறது, அதை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறேன், அது ஒரு நாள் என் கைவசப்படும் சர்வ நிச்சயமாய்’ இப்படி ஒரு பெண் தன் மனதிற்குள் பதின்ம வயதில் உருவேற்றிக் கொண்டாள். ஆனால் அதற்கு ஏற்பட்ட தடைகளையெல்லாம் களைந்தெறியவே அவளின் முழு நேரமும் பொழுதும் சரியாக இருந்தது.

மன்னாரில் கடந்த 3 வாரத்தில் 20 கிலோ கஞ்சா பிடிபட்டது

மன்னார் நிருபர்

மன்னாரில் கடந்த 3 வார காலங்களுக்குள் 20 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பல சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவங்களில் பேசாலை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்த மட்டும் 10 கிலோ நிறையுடைய கஞ்சா கைப்பற்றப்பட்ட நிலையில் வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகத் தெரவிக்கப்படுகிறது.
தென்னிந்தியாவிலிருந்து படகு மூலம் மன்னாருக்கு ஹெரோயின் மற்றும் கஞ்சா ஆகியன அதிகளவில் எடுத்து வரப்படும் நிலையில் கடற்படையினர் இக்கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் பகுதியில் கடந்த மூன்று வாரங்களுக்குள் கைப்பற்றப்பட்ட 20 கிலோ கஞஅசா தொடர்பில் மன்னார் பொலிஸார் பல்வேறு காணங்களில் விசாரணைகளை மேற்கொண்டவருகின்றனர்.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/13724---3--20---.html

உணவில் உப்பு குறைக்கிறீர்களா? இதயம் கவனம்!

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதேபோல உப்போ, சர்க்கரையோ, தேவையான அளவு இல்லாவிட்டாலும் அது ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள். உணவுப்பொருட்களில் உப்பு அதிகம் சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம் வரும் என்று பயமுறுத்துகின்றனர். இதை தவிர்க்க உப்பை குறைத்தாலும் இதயநோய் வரும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரியவந்துள்ளது.

எந்த நேரத்தில் யாருக்கு வரும் என்று கூறாமல் வருகிறது மாரடைப்புநோய். இதற்கு உயர்ரத்த அழுத்தமும், கொழுப்பு பொருட்களை கேட்பதும்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். எனவேதான் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவைக் குறைக்க மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.

மதுரைக்கு வந்த சோதனை : Nithyananda to Head World's Oldest Hindu Organization

தொன்மைவாய்ந்த சைவ மடாலயங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 293 ஆவது மடாதிபதியாக அண்மையில் பாலியல் சர்ச்சையில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நித்தியானந்தா (34 வயது) நியமிக்கப்பட்டிருக்கும் விவகாரம் இந்தியா, இலங்கை உட்பட சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் விசனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

யாழ் முஸ்லீம்கள் அரசுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் எதிராகப் போராட்டம்

இலங்கைப் பேரினவாத அரசின் ஆதரவோடு தம்புள்ள பகுதியில் பௌத்த பிக்குகளால் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதன் எதிரொலியாக இன்று பிற்பகல் 1.00 மணியளவில் யாழ்.முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருக்கின்றனர்.
பாரிய அளவில் மேற்கொள்ள படவிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தை படையினரும், பெருமளவு ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர்.
மானிப்பாய் வீதியிலுள்ள குறித்த பள்ளிவாசலில் இன்று மதிய நேர தொழுகையின் பின்னர் யாழ்.முஸ்லிம்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்கும் எதிரான பதாகைகளும் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

தம்புள்ள மஸ்ஜிதுல் கஹயிரா பள்ளிவாசல் மீது மேற்கொண்ட தாக்குதல்களினால் ஏற்பட்ட தாக்கங்களும் மற்றும் கிளைவிட்ட பிரச்சினைகளும்

      சுரேந்திர அஜித் ரூபசிங்க இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) செயலாளர்
dambulla demo2012 ஏப்ரல் 20,வெள்ளியன்று, பௌத்த பிக்குகள் தலைமையில் சுமார் 2,000 பேர் வரையிலான ஒரு கும்பல் மஸ்ஜிதுல் கஹயிரா பள்ளிவாசலை ஆக்கிரமித்து அதனை சூறையாடியதுடன், அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் தடங்கல்களை ஏற்படுத்தியது.
காவல்துறையினர், மற்றும் சிறப்பு பணிப் படையினர் ஆகியோர்களால்கூட அந்தக் குழப்பத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. அந்த பள்ளிவாசல் பௌத்த புனிதப் பிரதேசமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ள ஓரிடத்தில் கட்டப்பட்டுள்ளது என்கிற காரணத்தை அடிப்படையாகக் கொண்டே அந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
அதற்கு முன்தினம் ஒரு பெற்றோல் வெடிகுண்டு அங்கு வெடிக்க வைக்கப்பட்டது ஆயினும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் அனுராதபுரத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலின்மீது மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து இடம் பெற்ற தாக்குதலாகும் ,கடந்த செப்ரம்பர் மாதம் பௌத்த பிக்குகள் தலைமையிலான கும்பல் ஒன்று இந்த தாக்குதலை நடத்தியது, மற்றும் நாட்டின் பலபாகங்களிலுமுள்ள கிறீஸ்தவ, இந்து, மற்றும் இஸ்லாமிய மத நிறுவனங்கள்மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன - இவை அனைத்தும் தண்டனையிலிருந்து விதிவிலக்கு பெற்றுள்ளன.

போலி ஆவணத்துடன் வெளிநாடு செல்ல முயன்ற 21 வயது யுவதி கைது: உதவிய நபருக்கு சிறை

பிரிதொரு நபருடைய வெளிநாட்டு அனுமதிச் சீட்டை சமர்பித்து வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற இளம் யுவதியும் அவருக்கு உதவி புரிந்த நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று 23ம் திகதி அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு மத்திய நிலைய அதிகாரிகளும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரும் இணைந்து குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

மறக்கமுடியாத அந்த முதல் சந்திப்பின் போது….

காதலர்களின் முதல் சந்திப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அப்பொழுது நடந்து கொள்ளும் முறையும், பேசும் பேச்சுக்களும்தான் காதலை தொடர்வதா? இல்லை ஒரே நாளோடு முடித்திக்கொள்வதா என்பதை தீர்மானிக்கும். எனவே முதல் சந்திப்பின் போது காதலர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று ஆலோசனை தருகின்றனர் நிபுணர்கள்.

கேட்கக் கூடாதவை

கருணாநிதி தலைமையில் மீண்டும் உருவாகிறது ரெசோ – வரும் 30ம் நாள் முதல் கூட்டம்

தமிழீழத்தை உருவாக்குவதற்காக, தமிழ்நாட்டில் ரெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர் இயக்கத்தை மீண்டும் வரும் திங்கட்கிழமை உருவாக்கப் போவதாக திமுக தலைவர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார்.

வரும் 30ம் நாள் திங்கட்கிழமை திமுக தலைமையகமான அறிவாலயத்தில் இந்த அமைப்பின் முதலாவது கூட்டம் இடம்பெறவுள்ளது.

ரெசோவுக்கு தலைமையேற்கவுள்ள, மு.கருணாநிதி தலைமையிலேயே இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

கலைஞர் அய்யா... தயவு செய்து பேச வேண்டாம்!

'தமிழ் ஈழம் அடையும் வரை ஓய மாட்டேன்’ என்றும் 'தமிழ் ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி திடீர் என அறிவித்து இருப்பது தமிழ் உணர்வாளர்களையும் அதிர வைத்துள்ளது.


'ஆட்சியில் இருந்த காலத்தில் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கருணாநிதி பேசுவது நாடகம்’ என்று சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம் பேசினோம். இவ்வாறு ஜூனியர் விகடன் இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

''ஆற்ற முடியாத காயங்​களோடும் வலியோடும் பெரும் சோகத்தோடும் இருந்த எம் மக்கள் இப்போதுதான் மெள்ள விடுபட்டு வருகின்றனர். துக்கமான காட்சியை அடுத்து, ஒரு நகைச்சுவைக் காட்சியைப் போல, கலைஞர் அய்யா திடீ​ரென ஈழத்தைப் பற்றி பேசி இருக்கிறார். அவரு​டைய திடீர் 'தமிழீழ’ ஆர்​வத்தைப் பார்த்து ஒவ்வொரு தமிழனும் வாய்விட்டுச் சிரிக்கிறான். அவரால் எப்படி இதுபோல அறிக்கை வெளியிட முடிகிறதோ?

ஹிலாரி கிளின்டன் திடீர் இந்திய பயணம்

வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், மே மாதம் 5ம் தேதி இந்திய பயணம் மேற்கொள்ள உள்ளார்.
வரும் ஜூன் 13ம் தேதி இந்திய - அமெரிக்க உறவு குறித்த பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. அதில் ஹிலாரி பங்கேற்க உள்ளார். இதற்கிடையில் மே 3-4ம் தேதி அமெரிக்கா - சீனா இடையே பொருளாதாரம் மற்றும் ராணுவம் தொடர்பான 4வது சுற்று பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதில் பங்கேற்க ஹிலாரி திட்டமிட்டிருந்தார். சீனா வந்தாலும், இந்திய சுற்றுப் பயணம் குறித்து எதுவும் திட்டமிடப்படவில்லை. இந்நிலையில், திடீரென தனது பயண திட்டத்தை ஹிலாரி மாற்றி உள்ளார்.

மன்னார் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் பெண்கள் இரவு நேரத்தில் வீடு திரும்புவதில் சிக்கல்

தலைமன்னார் நிருபர்

மன்னார் பஸார் பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களில் கடமையாற்றும் பெண்களை வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் இரவு 7 மணிக்குப் பின்பே வீடு செல்ல அனுமதிப்பதால் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்  கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட   பெண்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் பஸார் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் பல பெண்கள் கடமையாற்றி வருகின்றனர். இவர்கள் காலை 8 மணிக்கு வந்தால் இரவு 7 மணிக்கே வீடு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்.

Friday, April 27, 2012

எம்.ஜி.ஆர் எனும் மாபெரும் விருட்சம் -- யமுனா ராஜேந்திரன்


எம்.ஜி.ஆர் எனும் மாபெரும் விருட்சம் யமுனா ராஜேந்திரன்
தமிழ் சினிமா வரலாறு எழுதுதலில் இருவிதமான சிந்தனைப் பள்ளிகள் இருக்கின்றன. முதல் சிந்தனைப்பள்ளி தியோடர் பாஸ்கரனுடையது. தியோடர் பாஸ்கரன் தமிழ் சினிமா வரலாறு எழுதுதலில் முன்னோடி ஆளுமை. அவரது பார்வை தமிழ்ச் சினிமா காட்சிரூப ஊடகமாக வளராமல் போனதற்கான தமிழ் சமூகக் கலை வரலாற்றுக் காரணங்களையும், அரசியல் காரணங்களையும் விரித்துச் சொல்வதாகவே இருக்கிறது. வரலாற்றுரீதியில் தமிழ் சினிமாவில் பேச்சு, இசை போன்றவை பெரும் இடம், அதனோடு வேறு வேறு காலங்களில் தமிழ் சினிமா மொழியில் நேர்ந்து வந்திருக்கும் வடிவ மாற்றங்களையும் நுட்பங்களையும் அவர் அவதானித்துப் பதிவு செய்கிறார்.

தியோடர் பாஸ்கரன் முன்வைக்கிற காட்சிரூப சினிமாவை உருவாக்குவது எனும் தேடல் தமிழ் மொழியில் பிரச்சாரம் தவிர்ந்த யதார்த்த மொழி கொண்ட ஐரோப்பிய பாணி சினிமாவை, சமூக விமர்சன சினிமாவை, தமிழ் சூழலுக்கு ஏற்ற நவ யதார்த்த சினிமாவை உருவாக்குவது எனும் தேடலுடன் தொடர்பு பட்டது. வங்கத்திலும் கேரளத்திலும் எழுந்த சத்யஜித்ரே, அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் முன்வைத்த புதிய சினிமாவை தமிழிலும் விளைவது தொடர்பான தேடல் இது.

பாகிஸ்தான் விமானத்தை கடத்துவதாக மிரட்டல்: அவசரமாக தரையிறக்கம்

பாகிஸ்தானின் முன்னோடி விமான நிறுவனமான பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்சின் விமானம் கராச்சி விமான நிலையத்திலிருந்து பகவல்பூர் வரை செல்வதற்காக புறப்பட்டது.
 
இதில் பயணித்த ஒருவர் விமானத்தை கடத்தப்போவதாக கூறியதை தொடர்ந்து விமானப் பணிப்பெண் பைலட்டிடம் தகவல் கூறினார். இதனை தொடர்ந்து விமானம் அவசரமாக கராச்சி விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டது.

பிலிப்ஸின் இரு தசாப்தங்களுக்கு ஒளிரக்கூடிய மின்குமிழ் _

மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்ககூடியதும், சுமார் 20 வருடங்கள் வரை ஒளிதரக்கூடிய எல்.இ.டி மின்குமிழ் தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

அதாவது சுமார் 100,000 மணித்தியாலங்கள் இவற்றால் ஒளிரமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இம் மின்குமிழானது நெதர்லாந்து நாட்டு நிறுவனமான 'பிலிப்ஸ்' இனால் உற்பத்தி செய்யப்படுகின்றது.

நினைத்ததை நடத்தியே முடிக்க ஆசையா?! சில முயற்சிகள், சிறப்புப் பயிற்சிகள்

'உங்களின் வெற்றி ரகசியம் என்ன?' என்று உலகப் புகழ் பெற்ற செய்தியாளர் டயானே

சாயரிடம் ஒரு மாணவர் கேட்டபோது அவர் தந்த பதில், 'எதிலும் முழுமையான கவனம் செலுத்தினால் வெற்றி பெற முடியும். அதுவே நான் கற்ற பாடம்!'

நண்பர்களே உலகில் இரண்டே வகையான மனிதர்கள்தான் இருக்கிறார்கள். ஒரு வகையினர்-கழுத்தை நெரிக்கும் டெட்லைனில் முழுக் கவனம் செலுத்திக் காரியத்தை முடிப்பவர்கள். இன்னொரு வகையினர்- இந்தச் செயலுக்கு இந்த அளவு கவனம் போதும் என்று நிதானமாகச் செய்து முடிப்பவர்கள். சினிமா, செல்போன், டி.வி, இன்டர்நெட், கேர்ள்/பாய் ஃப்ரெண்ட் என உங்கள் கவனம் கலைக்க இன்று காரணங்கள் ஆயிரம். இந்த வெளிப்புறக் காரணிகள் போக... மன சஞ்சலம், பயம், தயக்கம், தாழ்வு மனப்பான்மை என உள்ளே இருந்து உருட்டி மிரட்டும் சாத்தான்கள் வேறு! இவற்றைத் தாண்டி எந்த ஒரு காரியத்திலும் முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்தினால்தான் வெற்றி வசமாகும். இந்த நிலையில் 'மன ஒருமைப்பாட்டை' வளர்த்துக்கொள்வது எப்படி?

மேற்கு சிட்னிப் பல்கலைக்கழகத்தின் சிறந்த பெண் சேவை விருது 2012 முதல் முறையாக தமிழ்ப் பெண்ணுக்குக் கிடைத்துள்ளது

மேற்கு சிட்னிப் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வழங்கும் மேற்கு சிட்னியின் சிறந்த பெண்களுக்கான விருது முதல் முறையாக தமிழ்ப் பெண்ணுக்குக் கிடைத்துள்ளது.
வழக்கறிஞர் டாக்டர் சந்திகா சுப்ரமண்யன் இந்த ஆண்டுக்கான சிறந்த சட்ட சேவைக்காக இவ் விருதைப் பெற்றிருக்கிறார்.

இவ் விருது சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு பல துறைகளைச் சேர்ந்த பெண்களுக்கு மேற்கு சிட்னியில் அவர்களின் சிறந்த சேவையைப் பாராட்டும் முகமாக மேற்கு சிட்னிப் பல்கலைக் கழகத்தினால் வழங்கப்படுகிறது.

போபர்ஸ்: குவாத்ராச்சிக்கு லஞ்சம் தரப்பட்டது ஏன்?; சோனியா விசாரணை நடத்தியிருக்க வேண்டும்- சித்ரா

டெல்லி: போபர்ஸ் நிறுவனம் குவாத்ராச்சிக்கு ஏன் ரூ. 64 கோடி லஞ்சம் தர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது என்ற விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். அது தொடர்பாக சோனியா காந்தியையும் விசாரித்திருக்க வேண்டும் என்று இந்த ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த முன்னாள் இந்து பத்திரிக்கையாளர் சித்ரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

போபர்ஸ் ஊழலை வெளியே கொண்டு வர சித்ரா சுப்பிரமணியத்துக்கு உதவியாக இருந்த ஸ்வீடன் நாட்டு காவல் துறையின் முன்னாள் தலைவர் ஸ்டென் லின்ட்ஸ்ட்ராம் 25 ஆண்டுகளுக்கு முன் முதன் முறையாக வாய் திறந்துள்ளார்.

தம்புள்ளை சம்பவம்! முஸ்லிம் அரசியல் தலைமைகள் நெருக்கடியில்!

தம்புள்ளை பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாக்குல் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முஸ்லிம்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில், அரசாங்கம் பல தரப்பினரைப் பயன்படுத்தி மதங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்தமைக்கும் இதன்போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி தென்கொரியாவிலிருந்து நாடு திரும்பியதும், இந்தப் பிரச்சினை குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தும்வரை வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டாம் என அகில இலங்கை ஜம்யத் உலமா சம்மேளனமும், அரசாங்கத்திலுள்ள சில முஸ்லிம் அரசியல்வாதிகளும், வேண்டுகோள் விடுத்திருந்தனர். எனினும், இதற்கு பாரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கொழும்பில் முஸ்லிம்கள் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்

காகிதக் கப்பல் விடுவதற்காய் எமை அழைக்கும் கலைஞர் கருணாநிதி: கதிரோட்டம்

நன்றாகப் பேசவும் எழுதவும் தெரிந்த ஒரு அறிஞர் என்று உலகத் தமிழினமே நம்பியிருந்த கலைஞர் கருணாநிதி, உலகத் தமிழர்களுக்கே வஞ்சனை செய்த வடுக்களோடு கடந்த தமிழ்நாட்டுத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். அப்போது தான் தெரிந்தது அவர் பொருளோடு பேசும் ஆற்றல் கொண்டவர் மட்டுமல்ல, நன்கு பொருள் சேர்க்கத் தெரிந்த ஒரு "வியாபாரி" என்பது. தமிழ் நாட்டு அரசியல் பதவி மூலம் தமிழுக்கும் தமிழர்களுக்கு சேவை செய்வதை மறந்து தனக்கும் தனது குடும்பத்திற்கும் சொத்துச் சேர்ப்பதில் செல்வாக்கை பலப்படுத்துவதிலும், துரிதமான செயற்பட்ட ஒரு "செயல் வீரன்" கருணாநிதி என்பதை அனைவருமே நன்கு உணர்ந்து கொண்டார்கள்.

கந்துவட்டி கொடுமை: ரூ. 2 லட்சத்திற்கு குழந்தையை விற்ற பெண்!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பெருகி வரும் கந்துவட்டி கொடுமையால் அப்பாவி மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். கடன் தொல்லை தீர ரூ.2 லட்சத்திற்கு ஒரு பெண் தனது குழந்தையை விற்றுள்ள பரிதாபம் அங்கு நடந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறைவு. மாவட்டத்தின் பிரதான தொழிலான விவசாயத்திலும் உரிய லாபம் கிடைக்காததால் பலர் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கார்த்தி சிதம்பரத்துக்கும் தொடர்பு - சிதம்பரம் பதவிக்கு ஆபத்து

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் மகன் சில டெலிகம் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சியினர் இன்று லோக்சபாவில் கடும் அமளியில் ஈடுபட்டன . இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். இந்த பேட்டியின் போது ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடந்தபோது மத்திய நிதி துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். இந்நேரத்தில் இந்த பதவியை பயன்படுத்தி இவரது மகன் கார்த்தி சிதம்பரம் சில ஆதாயங்களை பெற்று கொடுத்ததாகவும், சில குறிப்பிட்ட நிறுவனங்களில் கார்த்தி பணத்தை முதலீடு செய்திருப்பதாகவும், மேலும் அன்னிய முதலீட்டு தொகை கிளியரன்ஸ் கொடுக்க நிதி அமைச்சகம் உதவி செய்தது என்றும் கூறியிருந்தார்.

இன்னும் 50 ஆண்டுகளில் ஆண் மலடு அதிகமாகும்: எச்சரிக்கை ரிப்போர்ட்

இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.

மதுரை ஆதீனமாக முடிசூட்டப்பட்டார் நித்தியானந்தா!!!

பெங்களூர்: தமிழகத்தின் மிகப் பெரிய ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் நித்தியானந்தாவுக்கு முடி சூட்டப்பட்டுள்ளது.

மதுரைக்கு சமீபத்தில் நித்தியானந்தா வந்தார். அங்கு மதுரை ஆதீனகர்த்தரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவரிடம் 6 அடி உயரம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், நித்தியானந்தாவை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களின் மீள் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2012ம் ஆண்டுக்கான முதல் காலாண்டுப் பகுதியில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கொழும்பிற்கும் - தூத்துக்குடிக்குமான கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டமையும் புகலிடக் கோரிக்கையாளர் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கக் கூடுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாத காலப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் 408 பேர் நாடு திரும்பியுள்ளதாகவும், கடந்த ஆண்டில் குறித்த காலப்பகுதியில் 597 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

எச்சரிக்கை! இணையத்தளம், கணினியைத் தாக்கும் புதிய வைரஸ்!

இணையத்தளங்கள் மற்றும் கணினிகளை ஒரு வகை வைரஸ் மோசமாகத் தாக்கி வருவதாக இலங்கையின் கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் கணினிப் பாவனையாளர்கள் கவனமாகச் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வைரஸ் கணினிக்குள் நுழையுமானால் கணினியில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு ஒரு சில ஆபாச இணையத்தளங்களின் பக்கம் கொண்டு செல்வதாக கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்
http://www.dcwg.org/detect/ என்ற இந்த இணையத்தில் செல்வதன் மூலம் வைரஸ் தாக்கத்திலிருந்து கணினியைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது

Source:http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37791

சிறிலங்காவில் வெளிநாட்டார் தலையீட்டை எப்படி தடுப்பது? - கொழும்பு ஊடகம்

இந்தத் தீவில் காலாதி காலமாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு அவர்களது உரிமைகளை சிறிலங்கா அரசாங்கமோ அல்லது சிங்கள மக்களோ 'வழங்க' வேண்டிய தேவையில்லை. சிங்கள மக்களைப் போலவே தமிழ் மக்களும் சிறிலங்காத் தீவின் குடிமக்கள். ஆகவே சிங்களவர்கள் தமது உரிமைகளை அனுபவிப்பது போன்று சிறிலங்காத் தமிழ் மக்களும் தமது உரிமைகளை அனுபவிப்பதற்கு சட்டம் இடங்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் The Sunday Leader ஆங்கில வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரையின் முக்கியத்துவம் கருதி புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

ஜிம்பாப்வேயில் மூன்று முட்டையின் விலை 100 பில்லியன் டொலர்

ஆப்ரிக்காவில் உள்ள ஜிம்பாப்வேயில் பண வீக்கத்தை தொடர்ந்து சில்லரை தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. அப்போது அந்நாட்டின் டொலர் மதிப்பு அமெரிக்க டொலருக்கு நிகராக இருந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பஞ்சம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது அந்த நாட்டின் பணவீக்கம் 231 மில்லியன் சதவீதமாக உள்ளது.
ஜிம்பாப்வேயின் ஒரு 500 மில்லியன் டொலர், இரண்டு அமெரிக்க டொலருக்கு சமமானது. பணத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அந்நாடு 100 மில்லியன், 250 மில்லியன் மற்றும் 500 மில்லியன் டொலர்களை அறிமுகப்படுத்தியது.
ஜிம்பாப்வேயில் ஒரு பனியன் விலை, மூன்று பில்லியன் டொலர்கள். விமான நிலையத்தில் காரை நிறுத்துவதற்கு 400 பில்லியன் டொலர் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இதன் சர்வதேச மதிப்பு, ஒரு அமெரிக்க டொலர் தான்.

Thursday, April 26, 2012

வன்னிப்பிராந்தியத்தின் கல்விநிலை குறித்து கவலை தரும் ஓர் ஆய்வு

"இந்த மாணவர்கள் இடம்பெயர்ந்ததால் 2008 மற்றும் 2009 காலப்பகுதியில் அவர்கள் தமக்கான கல்வியைப் சரிவரப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. தற்போது எங்களால் இதன் தொடர்பாதிப்பை உணரமுடிகின்றது. இடப்பெயர்வின் பின் விளைவானது மாணவர்கள் மத்தியில் அச்சத்தை உண்டுபண்ணியுள்ளது"

இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் The Sunday Leader ஆங்கில வார ஏட்டில் அதன் செய்தியாளர் Maryam Azwer எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரையின் முக்கியத்துவம் கருதி புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அச்செய்திக்கட்டுரையின் முழுவிபரமாவது,

அமெரிக்காவை தோற்கடிக்கும் அளவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்கள் உள்ளன! - வடகொரிய ராணுவ அதிகாரி மிரட்டல்


போர் ஏற்பட்டால் அமெரிக்காவை தோற்கடிக்கும் அளவுக்கு எங்களிடம் சக்திவாய்ந்த ஆயுதங்கள் உள்ளன என்று வடகொரிய ராணுவ உயரதிகாரி மிரட்டல் விடுத்துள்ளார். வடகொரியா ஏவுகணை, அணுஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
சமீபத்தில் வடகொரியா நடத்திய ராக்கெட் சோதனை தோல்வி அடைந்தது. இதற்கிடையில், வடகொரியாவை நிறுவிய கிம் சங்கின் 100,வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை தரக்குறைவாக தென் கொரியா விமர்சித்ததாக புகார் எழுந்தது. இதனால் ஆவேசம் அடைந்த வடகொரிய ராணுவ அதிகாரிகள், தென் கொரியா மீது குண்டு வீசி 3 நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில் அமெரிக்காவை தோற்கடிப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

முரண்பட்டுச் செல்வது தான் பொருத்தமென்றால் முரண்படுவதற்கும் தயங்க மாட்டோம்-றிசாத் பதியுதீன்!

தம்புள்ள ரங்கிரிய ஹைரியா பள்ளிவாசல் மீது தொடுக்கப்பட்ட மிலேச்சனத்தனமான தாக்குதல் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளையும் வெகுவாக பாதித்திருக்கின்றது.முஸ்லிம்கள் தமது உயிர்கள் மற்றும் உறவுகளை விடவும் தமது மார்க்கத்தை உயர்வாக மதிக்கின்றார்கள்.அவ்வாறான ஒர் சமூகத்தின் வணக்கஸ்தலத்தை இன்னுமொரு மதத்தின் பெயரால் தகர்க்க முற்படுவதானது பாராதூரமாக கண்டிக்கப்படக் கூடியது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தள்ளார்.

ஐ. நா. விசேட இராஜதந்திரிகளை உள்ளடக்கிய குழுவொன்று அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கை வருகின்றது

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விவகாரங்களைக் கையாளும் விசேட இராஜதந்திரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்று அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கை வருகின்றது என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து மிகவும் நம்பகரமாகத் தெரியவருகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய இலங்கை அரசு செயற்படவேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் நிலையிலேயே, ஐ.நா.மனித உரிமைகள் குழு அவசர விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரின் பணிப்புரைக்கமைய இலங்கை வரும் இந்த இராஜதந்திரிகள் குழு, இங்கு முக்கிய பல சந்திப்புகளை நடத்தவுள்ளது என்றும் இலங்கையின் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட முக்கிய பல அதிகாரிகளைச் சந்தித்து இந்த உயர்மட்டக்குழு கலந்துரையாடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மரியாதையாக பாஸ் போட்டு விடு! ஆசிரியர்களை உள்ளே வைத்துப் பூட்டி மாணவர்கள் போராட்டம்!

மேற்குவங்கத்தில் உள்ள பஸ்சிம் மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள கோபிவல்லபபுரம் என்ற ஊரில் உள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பில் 90 மாண்வர்களை 'ஃபெயில்' செய்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களை பள்ளிக்குள் வைத்து பூட்டி வைத்தனர்.

நயபாசன் ஜனகல்யாண் வித்யாபீடம் பள்ளி மாணவர்கள் இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளமையை மீட்டுத்தரும் திராட்சைப் பழம்

ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல முகம் பளிச் என்று இருக்க வேண்டுமா? திராட்சை சாப்பிடுங்கள் என்கின்றனர் என்று அறிவுறுத்துகின்றனர் அழகியல் நிபுணர்கள்.

திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் சிறந்த அழகு பொருளாக சருமத்திற்கு இளமை தரும் பொருளாக கருதப்படுகிறது. திராட்சை விதையில் உயர்தர பாலிஃபினால் உள்ளது. ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் காணப்படுகிறது. இது சருமத்தில் பாதிக்கப்பட்ட செல்களை உயிர்ப்பிக்கிறது. இதில் வைட்டமின் சி, இ, ஏ ( பீட்டா கரோட்டீன்) போன்றவை காணப்படுகின்றன. இது மூளையை சுறுசுறுப்பு ஆக்குவதோடு அனிச்சை செயலை உற்சாகப்படுத்துகிறது. கண், சருமம், மூளை ஆகியவற்றின் ஆரோக்கியத்தை தக்கவைக்கிறது. சருமம் விரைவில் முதுமை அடைவதை தடுக்கிறது.

பளிச் முகத்திற்கு

சிறந்த பெறுபேறுபெற்ற முதல் 56 பாடசாலைகளுள் கொழும்பு இந்துமகளிர், வேம்படி, யாழ். இந்து, ஹாட்லி

ந.ஜெயகாந்தன்

2011 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படியில் கொழும்பு தேவி பாலிகா கல்லூரி, கம்பஹா ரத்னாவெலி மகளிர் கல்லூரி மற்றும் மாத்தளை விஞ்ஞான கல்லூரி ஆகிய மூன்றும் உயர் அடைவுமட்டங்களை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளன.இதேவேளை, கொழும்பு இந்து மகளிர் கல்லூரி, யாழ் வேம்படி மகளிர் கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி ஆகியன உயர் அடைவு மட்டங்களை பெற்ற முதல் 56 பாடசாலைகளுக்குள் உள்ளடங்குகின்றன.

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு எனக்கூறி 2.8 மில்லியன் ரூபா மோசடி செய்தவர் கைது

வெளிநாட்டில் வேலை வாய்ப்பினை பெற்றுத் தருவதாகக் கூறி 2.8 மில்லியன் ரூபாவை மோசடி செய்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிங்கிரியவைச் சேர்ந்த மனோஜ் குமார என்பவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி நால்வரிடம் தலா 7 இலட்சம் ரூபாவைப் பெற்றுள்ளார். இவர் தம்மை ஏமாற்ற முயல்வதை உணர்ந்து கொண்ட நால்வராலும் செய்யப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு நீதிமன்றத்தில் பொலிஸாரால் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Source: http://www.thinakkural.com/news/all-news/local/13646----28-----.html

வடக்கில் சுகாதார ஊழியர் நியமனத்தில் பாரிய முறைகேடுகள் செல்வம் எம்.பி.முறைப்பாடு

மன்னார் நிருபர்
மன்னார் மற்றும் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கு ஊழியர்களை நியமிப்பது தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். சுகாதார அதிகாரி பணிமனை ஊழியர்களை நியமிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த போதும் நேர்முகத் தேர்வு எவையும் இடம்பெறாத நிலையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் முறைகேடான நியமனம் வழங்கப்பட்டமை குறித்தும் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திர சிறியின் கவனத்திற்குக் கொண்டு வந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசின் புதிய குடிவரவு சட்ட மாற்றங்கள் - கனடா வரும் அகதிகளின் கதி என்ன?

http://www.ekuruvi.com/newsimage/asyllum%20seekers%20L.jpgகனடிய குடிவரவு சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றங்களால் கனடாவிற்குள் வரும் அகதிகள் பலர் சிறையில் இருக்க வேண்டிய நிலைமை உண்டாகியுள்ளது. அரசின் புதிய சி-31 சட்டமூலத்தின் படி இனி ஆட்கடத்தல் மூலம் கனடாவிற்குள் வந்தவர்களாக சந்தேகிக்கப்படும் அகதிகளின் கோரிக்கைகள் எதுவும் பரிசீலிக்கப்படாது. உடனடியாக அவர்களை கனடிய சிறைகளில் போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கனடிய குடிவரவு அமைச்சர் ஜோசன் கென்னி அறிவித்துள்ளார்.

மன்னார் நகர சபையின் சந்தை தெற்கு வர்த்தகர்களால் ஆக்கிரமிப்பு

தலைமன்னார் நிருபர்

மன்னார் தினச்சந்தை வியாபார நிலையத்தொகுதிக்கு முன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஆகியோரது புகைப்படங்கள் கட்டவுட் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மன்னார் நகர சபையினைக் கைப்பற்றியது.
இந்த சந்தைத் தொகுதி மன்னார் நகர சபைக்குச் சொந்தமானது. இந்த சந்தைத் தொகுதியில் மன்னாரைச் சேர்ந்த 5 வியாபாரிகளுடைய கடைகள் மட்டுமே உள்ளது. ஏனைய கடைகள் அனைத்தும் தென்பகுதியைச் சேர்ந்தவர்களது வியாபார நிலையங்களே உள்ளன.

Wednesday, April 25, 2012

மன்னார் மாவட்டத்திலுள்ள மடு வனச் சரணாலயம் மணல் அகழ்ந்தெடுப்பது மற்றும் மரங்களை வெட்டி வீழ்த்துவது மூலம் முறையாக அழிக்கப்பட்டு வருகிறது.

மடு வனச் சரணாலயப் பிரதேசத்துக்குள் கனரக அகழ்வியந்திரங்கள் சினத்துடன் உறுமிக் கொண்டே நிலத்தை கிண்டி மரங்களை வேரோடு சாய்க்கின்றன, அதேவேளை காலை 11 மணியளவில், மேல்மட்ட விளிம்புவரை மண்  நிறைக்கப்பட்ட பாரஊர்திகள் இணைக்கப்பட்ட டிப்பர் லாரிகளை, பாதி மதுபான போதையில் திளைத்திருக்கும் சாரதிகள் சரணாலயத்தினூடே செல்லும் வீதியினூடாக ஓட்டப்போட்டி நடத்துவதுபோல அசுர வேகத்தில் ஓட்டிச் செல்கிறார்கள். குழிகள் நிறைந்த வீதியும் அதேபோல மண் அகழ்ந்தெடுக்கப்பட்ட களமும், சூழல் பாதுகாப்பு பிரதேசம் என 1968ல் அறிவிக்கப்பட்ட இந்த இயற்கை சுற்றாடலுக்கு இணைக்கப்பட்டுள்ள புதிய சேர்க்கைகள் ஆகும்.
வடபகுதியில் சுற்றாடல் பாதுகாப்பு பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட ஏனைய முக்கியமான பிரதேசங்களைப் போலவே 21,000 ஹெக்டேர் பரப்பளவுள்ள மடு வனச் சரணாலயப் பிரதேசமும், அரசாங்க அனுசரணையுடன் நடத்தப்படும் திட்டமிடாத அபிவிருத்தி செயற்பாடுகளால் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.
சில வாரங்களுக்கு முன்னால் மடு

ஆச்சரியப்பட வைக்கும் அதிசயச் சிறுவன்

சென்னை: கண் முன்னால் கிடக்கும் கலண்டரில் திகதி, நாள் பார்ப்பதில் கூட குழப்பம் ஏற்படும். சில விநாடி யோசனைக்கு பிறகுதான் சரியான முடிவுக்கு வர முடிகிறது. ஆனால், 2030 ஆம் ஆண்டில் ஒரு மாதத்தையும் திகதியையும் சொன்னால் கிழமையை துல்லியமாக சொல்கிறான் 10 வயது சிறுவன். அதெப்படி...’ என்று யோசிக்கிறீர்களா? அவனுடைய அற்புத ஆற்றலைப் பார்த்து எல்லோருமே அதிசயித்துப் போகிறார்கள்.
ஸ்ரீராம் பாலாஜி! இவன்தான் அந்த அதிசய சிறுவன். அடையாறு ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறான். படிப்பில் படுசுட்டி என்று சொல்ல முடியாதவர். வகுப்பில் அமைதியானவன், கடுமையான உழைப்பாளி. இதுதான் அவனைப் பற்றி ஆசிரியை லதா கூறும் தகவல்.

மன்னாரில் பெண்களுடன் தவறாக நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை பொலிஸார் எச்சரிக்கை

photo:http://www.the-nri.com
மன்னாரில் முச்சக்கர வண்டி சாரதிகள் சிலர் பெண்களுடன் அநாகரிகமான முறையில் நடந்துகொள்வதாக வெளியான தகவல்களினைத் தொடர்ந்து மன்னார் தனியார் பஸ் தரிப்பிடத்திற்கு முன் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கும் மன்னார் பொலிஸாருக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை மாலை அவசர கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்தப் பகுதியில் சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டி ஓட்டுநர்களில் சிலர் யுவதிகளுடன் தவறான முறையில் நடந்துகொள்வதாகவும் பெண்களுடன் முச்சக்கர வண்டியில் பாலியல் சேட்டைகளில் ஈடுபடுவதாகவும் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டு செல்லப்பட்டதோடு ஊடகங்கள் மூலமாகவும் இந்தப் பிரச்சினை வெளிக்கொண்டு வரப்பட்டது.

மன்னாரில் பல பகுதியிலும் சட்டவிரோத மண் அகழ்வு குறித்து முறைப்பாடுகள்

மன்னார், தலைமன்னார் நிருபர்கள்
Photo:http://3.bp.blogspot.com

மன்னார் மாவட்டத்திலுள்ள கடற்கரையோரப் பகுதிகளிலும் ஆற்றுப் பகுதிகளிலும் அதிகளவான மணல் சட்டவிரோதமான முறையில் அகழப்படுவதாக பொதுமக்களும் பொது அமைப்புகளும் தெரிவிக்கின்றன. மன்னார் மாவட்டம் தீவுப் பகுதியில் உள்ள கடற்கரையோரங்கள், பனைக்காடுகள், பொது இடங்கள் போன்வற்றிலு ம் பெருநிலப்பரப்பிலுள்ள அருவி ஆறு, பாலியாற்றுப் பகுதிகளிலும் அதிகளவான மண் அகழ்வு இடம்பெறுகின்றது.
இதன் மூலம் ஆற்று வெள்ளம், கடல் நீர் கிராமத்திற்குள் புகும் அபாயம் தோன்றியுள்ளதாக பொது அமைப்புகள் அரச அதிகாரிகளிடம் கடிதம் மூலமாக தெரியப்படுத்தியுள்ளதோடு இதனைக் கட்டுப்படுத்தவும் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

மதுரை - கொழும்பு விமான சேவை

மதுரையிலிருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க இந்திய மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. “ஸ்பைஸ் ஜெற்’ விமான நிறுவனத்தின் சர்வதேச விமானம் ஒன்று மதுரையிலிருந்து கொழும்புக்கு விமான சேவையை தொடக்கவுள்ளது.
இது குறித்து இந்திய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங், விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான மாணிக் தாகூரிடம் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த  அமைச்சர் அஜித் சிங் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/13604-2012-04-25-19-51-53.html

கிண்ணியாவில் மின்னலால் வீடொன்று சேதம்

கிண்ணியா நிருபர்

கிண்ணியா பைசல் நகரில் புதன்கிழமை மாலை இடி மின்னல் தாக்கியதினால்  வீடொன்று சேதமடைந்துள்ளது.
புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கடும் இடி மின்னலினால் வீட்டு மின்மானி நீர்த்தாங்கி  என்பவற்றோடு வீட்டின் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளது.
எனினும் வீட்டிலிருந்தோர் எவருக்கும் பாரிய தாக்கம் எதுவும் ஏற்படவில்லை. முதியோர்  இருவர் அதிர்ச்சியினால் மயங்கியதாகவும் பின்னர் இயல்பு  நிலைக்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/13576-2012-04-25-18-57-49.html

இந்தியாவின் பொருளாதாரம் குறித்த எதிர்பார்ப்பு நிலையை ஸ்ரான்டட் அன்ட் புவர்ஸ் குறைத்தது

ஸ்ரான்டட் அன்ட் புவர்ஸ் நிறுவனம் (Standard & Poor's), இந்தியாவின் பொருளாதாரம் குறித்த எதிர்பார்ப்பு நிலையைக் குறைத்து அறிவிப்பொன்றை விடுத்தது.

இதுவரை BBB என்ற நிலையில் இருந்த பொருளாதாரம் குறித்த எதிர்பார்ப்பு, BBB negative என்ற நிலைக்குக் குறைக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, இந்திய அரசு, சந்தையில் கடனைப் பெறுவதற்கு செலுத்தவேண்டிய பணத்தின் அளவு அதிகரித்தது. இந்திய ரூபாவின் பெறுமதி குறைந்தது. பங்குகளினது பெறுமதியும் குறைந்தது.

கடந்த நிதியாண்டில், வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 4.6 சதவீதமாக மட்டுப்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்தபோதிலும், அது 5.9 சதவீதமாக அதிகரித்தது.

இலங்கையில் பனடோல் உற்பத்தி தொழிற்சாலை திறந்து வைப்பு



கிளாசோஸ்மித்கிளைன் (ஜிஎஸ்கே) நிறுவனத்தின் மூலம் 217 மில்லியன் ரூபா முதலீட்டில் இலங்கையில் முதலாவது பனடோல் வில்லைகள் உற்பத்தி தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதி நவீன வசதிகள் கொண்டமைந்த இந்த தொழிற்சாலையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர். இரத்மலானை பகுதியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையின் மூலம் பனடோல் வில்லைகள் உற்பத்தி செய்யப்படவுள்ளதுடன், இதர வில்லைகளை உற்பத்தி செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலையானது இதுவரையில் இலங்கையின் மருந்தாக்கல் துறையில் ஆகக்கூடிய முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள திட்டங்களில் ஒன்றாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதிவாசிகளின் விளையாட்டுப் போட்டிகள்...


(எம்.எப்.எம்.தாஹிர்)

ரதுகல ஆதிவாசிகளின் புதுவருட விளையாட்டு விழா முதன் முறையாக நேற்று செவ்வாய்க்கிழமை ரதுகல வன பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு விசேட விருந்தினராக பிரதி கல்வி அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் ஆதிவாசிகளின் பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்றதோடு ஆதிவாசிகளின் சிறுமிகள் அழகுராணி போட்டியிலும் பங்கு கொண்டனர்.

இலங்கையின் சனத்தொகை 2 கோடியை கடந்துள்ளது; புள்ளிவிபரவியல் திணைக்களம்


இங்கையின் சனத்தொகை தற்போது 2 கோடியை கடந்துள்ளதாக, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என  சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வேகம் குறைவடைந்து வருகின்றமையை அவதானிக்க முடிவதாக, சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் கடந்த 1981ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன்.கண்ணதாசன் கூறும் உண்மைகள்

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.

கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்என்று கேட்டார்.

Test Taking Tips will help improve your test taking & study skills.

Test Taking Tips will help improve your test taking & study skills.

Whether you're a high school or college student, tests are unavoidable. If you take a multiple-choice exam your strategy will be different than if you were to take an essay test. Learning proper note taking, studying and test taking strategies are a vital part of improving your grade on exams as well as your academic success.
Read more.....http://www.testtakingtips.com/

பரீட்சைகளின் போது உதவும் மனப்பயம்

கடந்த கால புதிய ஆய்வுகளிலிருந்து மனப்பயமானது மூலையின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
 
அதாவது, பரீட்சைகளின் போது இறுதி நேரம் கற்கும் விடயங்கள் ஞாபகத்தில் இருப்பது கண்டறியப்பட்டள்ளது.
மன வழுத்தம் ஏற்படும் போது ஹார்மோன்கள் அதிகளவில் எமது மூளையில் உற்பத்தி செய்யப்படுகின்றது.
இதனால் மூலையின் ஞாபக சக்தியின் அளவு அதிகரிக்கப்படுகின்றது.
 
பேராசிரியர்களின் கருத்துப் படி மனவழுத்தம் ஏற்படும் போது மாணவர்கள் கல்வி கற்கும் போது அந்த விடயங்கள் மனதில் இலகுவாக பதிந்து விடுகின்றது.
அந்த நேரத்தில் சுரக்கும் ஹோமோன்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கின்றன என கூறப்படுகிறது.
உதாரணமாக, எமது வாழ் நாளில் தினமும் பல விதமான சம்பவங்கள் நடைபெறுகின்றன.
 
சந்தோஷமான நிகழ்வுகளும் நடைபெறும், கவலையான சம்பவங்களும் இடம்பெறும். அவ்வாறான சம்பவங்களில் எமது மனதை அதிகளவில் பாதித்த அல்லது காயத்தை ஏற்படுத்திய சம்பவங்களே எமக்கு எப்போதும் ஞாபகத்தில் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் மனவழுத்தமாகும்.
 
பரீட்சை கால இறுதி நேரங்களில் கற்கும் விடயங்கள் எமக்கு எப்போதும் ஞாபகம் இருக்கும்.
இதற்கு காரணம் பரீட்சை நெருங்கி விட்டது சிறந்த பெறுபேறு பெற வேண்டும் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என மனம் எண்ணும்.அப்போது எங்கள் முழு கவனமும் பாடங்களிலேயே பதிந்திருக்கும்.
மனவழுத்தம் பயன் தரும் என கருதினாலும், அதிகளவிலான மனவழுத்தம் உடல் நலத்திற்கு கேடு என்பதை நாம் ஞாபகம் வைத்திருக்க வேண்டும்.
Source: http://184.107.230.170/~onlineut/Education/index.php?view=education_essay_more&id=6

இலங்கையில் முதற்தடவையாக பாரிய சரக்குக் கப்பல் நிர்மாணம்

இலங்கை கப்பல் கட்டும் வரலாற்றில் பாரிய சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் ஒன்றை நிர்மாணித்து வருகிறது. இதில் 400 பயணிகளும், 250 தொன் கொள்கலன்களையும் ஏற்றிச் செல்லும் வல்லமையுடன் இந்த பாரிய கப்பல் இந்தியாவில் இயங்கும் ஐக்கிய லக்க்ஷத்திவீப் வலயநிர்வாகத்தால் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

 
குறித்த கப்பல் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும் கொச்சின் மற்றும் லக்க்ஷத்திவீப் தீவுகளுக்கு இடையிலான கடல் வழிப் போக்குவரத்துச் சேவைகள் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தக் கப்பல் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட இரண்டு யான்மார் இயந்திரங்களால் வலுவூட்டப்படவுள்ளது. இது தவிர, சுவீடன் தயாரிப்பான கட்டுப்பாட்டு அமைப்புகளும் அதில் பொருத்தப்படவுள்ளன.
 
அவற்றுக்கு மேலாகப் பயணிகளுக்குத் தேவையான அலுவலக அறை, தனியான ஓய்வறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் 10 உயர்தர சொகுசு வகுப்புகளும், 450 சொகுசு வகுப்புகளும், 350 சாதாரண சொகுசு அறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.                         
Source: http://184.107.230.170/~onlineut/News_More.php?id=427801006725558220

SL to have blood pressure meters in public places

Sri Lanka will install meters in Colombo's public places to measure blood pressure of people, in a country where at least 350 die every day due to heart attacks, hypertension and respiratory diseases.

W.M.D. Wanninayake, media secretary of the ministry of health, said five blood pressure apparatus will be fixed in the capital in the first phase of the project, Xinhua reported.

He said Sri Lanka has been able to control the number of cases of communicable diseases, but there has been a significant increase in non-communicable diseases, especially caused by high blood pressure.

According to the health ministry's Non-Communicable Disease Unit, around 350 Sri Lankans die daily due to heart attacks, diabetes, hypertension, kidney and respiratory diseases.

The official said the five machines to check blood pressure will be set up from April 30. More will be put in other places.

A study by the ministry found that the rise in non-communicable diseases was mainly due to changes in lifestyle, unhealthy food patterns, tobacco use and alcohol consumption as well as physical inactivity.

The World Bank last year announced that during the past 50 years, deaths due to heart disease in Sri Lanka have risen from three per cent to 24 per cent, while the percentage of deaths due to infectious disease dropped from 24 per cent to 12 per cent. (IANS)
Source: http://www.dailymirror.lk/news/18197-sl-to-have-blood-pressure-meters-in-public-places.html

இலங்கை மீனவர்கள் நாடு திரும்புகின்றனர்!

சோமாலிய கடற் கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்டு தற்போது தன்சானியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் அறுவரும் நாளை வியாழக்கிழமை நாடு திரும்புகின்றனர். இலங்கை மீனவர்களான செபஸ்டியன் பெர்னாண்டோ, வீரசேன சில்வா, நிஷாந்த பெர்னாண்டோ, சுசந்த பெர் னாண்டோ, லியோல் ரொட்ரிகோ, பெருமாள் செல்வராஜா ஆகிய அறுவரும் நாளை காலை 8.45 மணியளவில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைவரென மீன்பிடி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரான லால் டி சில்வா தினகரனுக்குத் தெரிவித்தார்.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் கடந்த 20 ஆம் திகதியன்று மீட்கப் பட்டனர். தன்சானியா கடல் எல்லையிலிருந்து 50 மைல் தொலைவில் இருந்தே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தன்சானிய கப்பலொன்றின் உதவியுடன் இம்மீனவர்கள் அந்நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததுடன் அவர்களுக்குத் தேவையான உணவு, நீர் மற்றும் மருத்துவ பரிசோதனைகளும் வழங்கப் பட்டன.

அக்னி ஏவுகணையை விடவும் இலங்கையில் பொருட்களின் விலையேற்றம் ஆபத்தானது – ரணில்


இந்தியாவின் அக்னி ஏவுகணையை விடவும் இலங்கையில் பொருட்களின் விலையேற்றம் ஆபத்தானது என எதிர்க்கட்சித் தலைவர்  ரணில்  விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
நாட்டில் வாழ்க்கைச் செலவு வானளவு உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தியாவின் அக்னி ஏவுகணை சீனா உள்ளிட்ட பிராந்தியத்தின் அண்டை நாடுகளுக்கு ஆபத்து என பலர் கருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
எரிபொருள், மின்சாரம், உணவுப் பொருட்கள் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் பாரியளவு விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தம்புள்ள நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது

தம்புள்ள பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆரியரத்ன எதுகல விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தம்புள்ளயில் புண்ணிய பூமியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசம், விரிவாக்கல் திட்டத்தின் கீழ் மிக குறுகிய காலத்தில் மேம்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், தம்புள்ள பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பாக ஜனாதிபதி உள்ளிட்ட அரச தரப்பினரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பு போன்றே அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்றவகையில், நீண்டகாலமாக நாட்டில் நிலவிவரும் சம்பிரதாயங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்

இணையதள முகவரி : http://www.neok12.com
இத்தளத்திற்கு சென்று குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை எளிதாக பார்க்கலாம். Physical videos, Life Sciences , Human body , Earth & Space , Geography , Social Studies , English , Math , History , Games , Activities போன்ற பல்வேறு துறைகளில் எந்தத்துறை சார்ந்த வீடியோக்கள் பார்க்க வேண்டுமோ அதை சொடுக்கி அதிகப்படியான் வீடியோக்களை பார்க்கலாம்

மாண்டு போன தாய், தந்தையும் சிறையில்: கேள்விக்குறியில் மெக்சிகோ குழந்தையின் நிலை

மதுரை: மதுரை அருகே கொல்லப்பட்ட மெக்சிகோ நாட்டு பெண் டெனிஸின் மகள் அடிலாவை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து மெக்சிகோ தூதரக அதிகாரி மதுரை எஸ்.பி. அஸ்ரா கார்க்கிடம் ஆலோசனை நடத்தினார்.

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த மார்ட்டின் மான்ரிக் (40) ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் ஆராய்ச்சி மாணவராக இருந்தார். அவரது 2வது மனைவி டெனிஸ் அகோஸ்டா (35) கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கலா மண்டலம் பல்கலைக்கழகத்தில் நடனம் கற்று வந்தார்.

அவர்களது மகள் அடிலா (5) தந்தையுடன் தங்கி இருந்து பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 4ம் தேதி டெனிஸ் தனது கணவர், மகளை பார்க்க ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார். அப்போது அடிலாவை தன்னுடன் அனுப்புமாறு அவர் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த மான்ரிக் மனைவியைக் கொன்று உடலை சூட்கேசுக்குள் அடைத்து, அதில் இடம் போதாதால் கையை தனியே வெட்டி அதில் திணித்தது தெரிய வந்தது.

தம்புள்ள புனித பிரதேசமே அல்ல! பள்ளிவாசலை அகற்றினால் விளைவுகள் பாரதூரமாகும்!அரசை எச்சரிக்கிறார் அமைச்சர் ஹக்கீம்


தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்படக்கூடாது என்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறது. பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றினால் அரசு சர்வதேச ரீதியாகவும், உள்நாட்டிலும் பெரும் விளைவுகளை, பாரதூரமான பிரச் சினைகளைச் சந்திக்க வேண்டிவரும். தம்புள்ளை புனிதப் பிரதேசத்திற்குள் பள்ளிவாசல் இருக்கிறது எனக் கூறப்படுவதை நான் முற்றுமுழுதாக நிராகரிக்கிறேன். அப்படி எந்த இடத்திலும் எழுதப்படவில்லை; வரையறுக்கப்படவுமில்லை. தம்புள்ளவில் இவர்கள் கூறும் இடம் புனிதப் பிரதேசமே அல்ல''
 இவ்வாறு நேற்று "உதய'னிடம் காட்டமாகக் கருத்து வெளியிட்டு அரசுக்கு முன்னெச்சரிக்கை விடுத்தார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப்ஹக்கீம். தம்புள்ளை பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்படவேண்டுமென எழுந்திருக்கும் சர்ச்சை குறித்து கருத்துவெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 
அவர் மேலும் கூறியவை வருமாறு:

இந்திய நகரங்களை குறிவைத்து தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை பாக்., சோதனை


இந்தியாவில் உள்ள நகரங்களை குறிவைத்துதாக்கும் திறன் கொண்ட ஷாகின் 1ஏ ஏவுகணையைபாகிஸ்தான் சோதனை செய்துள்ளது. இந்தியா அக்னி 5 ஏவுகணையை சோதனை செய்த 6வது நாளில் பாகிஸ்தான் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

 இந்த ஏவுகணை அணுஆயுதங்களை தாக்கி செல்லும் வல்லமை கொண்டது என பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.ஷாகின் 1ன் மேம்படுத்தப்பட்ட ஏவுகணையான ஷாகின் 1 ஏ-வை சோதனை செய்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. இந்த ஏவுகணை சுமார் 750 கி.மீ., தூரம் செல்லும் திறன் உடையதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த ஷாகின் 1 ஏவுகணை எவ்வளவு தூரம் செல்லும் என்பதை கூற பாகிஸ்தான் ராணுவம் மறுத்து விட்டது.

 இந்த ஏவுகணை இந்திய பெருங்கடலை வரை சென்று தாக்கும் திறன் கொண்டது என தகவல்கள் கூறுகின்றன. இந்த ஏவுகணை சோதனை செய்வதை தொடர்ந்துஇந்தியாவுக்கு முன்னரே தகவல் தெரிவித்தது, மேலும் ஏவுகணை பகுதியில் விமான சேவைகளைகுறித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளது. ஏவுகணை சோதனை வெற்றிக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யுசூப் ரசா கிலானி விஞ்ஞானிகளுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Source:  http://tamil.yahoo.c...-085300912.html

ஜேர்மனியில் மாணவர்களுக்கு கடுமையான சட்ட திட்டங்கள் விதிப்பு


ஜேர்மனியில் சட்டங்கள் மிக கடுமையாக இருப்பதனால், 80 சதவிகித மாணவர்கள் படித்து முடித்ததும் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
புலம்பெயர்வு மற்றும் ஒருங்கிணைப்பு குறித்த ஜேர்மன் அறக்கட்டளைகளின் நிபுணர் குழு ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இத்தாலி நாடுகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களைப் பற்றி ஆய்வு செய்தனர்.

இவர்கள் திறமையான வெளிநாட்டு மாணவர்களை தமது நாட்டுக்குக் கொண்டுவரும் பல்வேறு நாடுகளின் வழிமுறைகளை கண்டறிந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

இதன் இயக்குநரான குனில்லா ஃபிங்க்கே கூறுகையில், படித்து முடித்த பின்பு ஜேர்மனியில் தங்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான சட்டம் தெரியவில்லை.

மனித உரிமைகளை பாதுகாக்கும் அக்கறையுடன் அமெரிக்கா இலங்கைக்கெதிரான பிரேரணையை கொண்டுவரவில்லை - மஹிந்த சமரசிங்க

மனித உரிமைகளை பாதுகாக்கும் அக்கறையுடன் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான பிரேரணையை மனித உரிமைப் பேரவையில் கொண்டுவந்ததாக கருதக்கூடாது. இந்த விடயத்தில் முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சி நிரல் இயக்கப்பட்டது. அதே நிகழ்ச்சிநிரலை மீண்டும் ஜெனிவாவில் கொண்டு நடத்த முயற்சிக்கலாம். மார்ச் மாதம் அல்லது ஜூன் மாதம் அல்லது ஒக்டோபர் மாதங்களில் இவ்வாறு முயற்சிக்கலாம் என்று சிறீலங்காவின் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் குறித்த ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எமது அனுமதியின்றி உள்நாட்டு செயற்பாட்டுக்கு மனித உரிமைப் பேரவை தொழில்நுட்ப உதவிகளை வழங்க முடியாது. எனினும் விரைவில் அவர்கள் எமக்கு உதவி வழங்குவது குறித்து யோசனை முன்வைக்கும் சாத்தியம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator