Thursday, April 19, 2012

ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆண் குழந்தை

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் ஆறு கால்களுடன் குழந்தையொன்று பிறந்து உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேவேளை எந்த விதமான நலகுறைபாடுகளும் இன்றி ஆரோக்கியமாகவும் உள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரிலேயே இம்ரான் ஷேய்க் என்ற பெயருடைய ஆண் குழந்தையே இவ்வாறு பிறந்துள்ளது. எனினும் அக்குழந்தையின் ஏனைய 4 கால்களையும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கைகளுக்காக கராச்சியிலுள்ள சிறுவர் சுகாதார பாதுகாப்பு தேசிய நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பால்வினை நோய்க்கு இளம் வயதினர்: அதிர்ச்சி ரிப்போர்ட்

பள்ளி செல்லும் மாணவர்கள் கூட செக்ஸ் பற்றி பேசும் காலம் வந்து விட்டது. பள்ளி மாணவிகள் கழிவறையில் குழந்தை பெற்று மறைத்து வைத்து அதிரவைக்கிறார்கள். அமெரிக்காவில் அல்ல இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில்தான். இவ்வாறு இளம் வயதில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதினால் எஸ்.டி.டி ( STD) sexually transmitted diseases எனப்படும் பால்வினை நோய்க்கு பதின் பருவத்தினர் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சிகரமான ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 40 சதவிகித பதின் பருவத்தினர் கர்ப்பமடைகின்றனர் என்று தெரியவந்துள்ளது. இணையம், தொலைக்காட்சிகளின் புண்ணியத்தில் இந்தியாவிலும் இந்தநிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் இள வயதினர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான இளவயதினர் கர்ப்பம் ஏற்படுவதை தவிர்க்க முறையற்ற வழிகளை கையாளுகின்றனர் இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கிறது.

கல்வித்துறைக்காக தமிழக அரசின் புதிய டிவி சேனல்!

சென்னை: கல்வித்துறைக்காக தமிழக அரசு புதிய டிவி சேனலை தொடங்கவுள்ளது.

இத் தகவலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி சட்டமன்றத்தில் தெரிவித்தார். அவர் கூறுகையில்,

பள்ளி நேரம் முடிந்த பின்னரும் பாடங்களை மாணவர்களுக்கு அவர்களது வீட்டுக்கே கொண்டு செல்ல இந்த டிவி சேனல் உதவும். பயிற்சிகள், செமினார்கள், கலந்துரையாடல்கள் உள்பட கல்வித்திறனை அதிகரிக்க உதவும் அனைத்து அம்சங்களையும் இந்த சேனல் வழங்கும் என்றார்.

2 புதிய பொறியியல் கல்லூரிகள்-ஜெ அறிவிப்பு:

மன்னாரை சொந்த மாவட்டமாக கொண்ட எந்த சமூகமும் வெளிமாவட்டங்களில் அகதிகள் எனும் நாமத்துடன் தொடர்ந்தும் அழைக்கப்படுவதை நான் விரும்பவில்லை


மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல்
[18-04-2012]
மன்னார் மாவட்டத்தில் நேற்று 17ம் திகதி (17.04.2012) ஆரம்பிக்கப்பட்டிருக்கும் மீள் குடியேற்ற தரவுகள் சேகரிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் தகவல் தரக்கூடிய ஒரு நபரை குறித்த திகதிகளில் குறித்த இடங்களுக்கு வருகை தந்து ஒத்துழைப்பு வழங்குமாறு மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

மன்னாரை சொந்த மாவட்டமாக கொண்ட எந்த சமூகமும் வெளிமாவட்டங்களில் அகதிகள்எனும் நாமத்துடன் தொடர்ந்தும் அழைக்கப்படுவதை தாம் விரும்பவில்லை என்றும்ஆதனால் பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்றம் தொடர்பானதரவுகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தில் ஒவ்வொருவரும் இதய சுத்தியுடனும்எமது மாவட்டம் என்ற பற்றுடனும் உண்மையான தகவல்களை வழங்கி ஒத்துழைக்க வேண்டும் எனவும் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல்மக்களிடம் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

அதேவேளை குறித்த தினங்களில் சமூகமளித்து ஒத்துழைப்பு வழங்காதவர்கள் மன்னாரில்
மீளக்குடியேற விரும்பாதவர்களின் பட்டியலில் இணைக்கப்படுவார்கள் என்பதனையும்
வேதனையுடன் பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
Source: MannarWin.com

வீடொன்றை அமைக்க இந்தியா வழங்கியது 6 1/2 இலட்சம் ரூபா ஒப்பந்தக்காரர்கள் கட்டியது 1 1/2 இலட்சம் ரூபாவில் அமைச்சர் டக்ளஸ் , ஆளுநர் சந்திர சிறி குற்றச்சாட்டு

யாழ் நகர் நிருபர்

இந்திய அரசாங்கத்தினால் வீடுகள் அமைப்பதற்கு வழங்கப்பட்ட பணத்தில் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளே பொது மக்களுக்காக ஒப்பந்தக்காரர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும்  எஞ்சிய பணம் வீடமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த நிறுவனங்களிடையே பங்கிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஆளுநர் சந்திர சிறியும் இணைந்து குற்றஞ் சாட்டியுள்ளனர். இந்திய வீடமைப்புத் திட்டமானது இலங்கை அரசாங்கத்தினால் அன்றி இந்திய  அரசாங்கத்தினாலே தொடர்ச்சியாக தாமதப்படுத்தப்படுவதாகவும் அவர்கள் இருவரும் இணைந்து குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யாழ். முஸ்லீம்களுக்கும் இந்திய வீடுகள் தேவை: அஸ்வர் எம்.பி. வலியுறுத்தல்

இந்திய உதவியுடன் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் வீடுகள் யாழ். குடாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எச்.எம். அஸ்வர்  இந்திய நாடாளுமன்றக் குழுவினரிடமும் வலியுறுத்தினார்.

நேற்று முன்தினம் நாடாளுமன்றத்துக்கு பயணம் செய்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினருடனான சந்திப்பு நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியின் குழு அறையில் இடம்பெற்றது.

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து இந்தியக் குழுவினரிடம் மகஜர் கையளிப்பு

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சம்மேளனத்தினால் இந்தியக் குழுவினருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.


இன்று காலை யாழ்.ஞானம்ஸ் ஹோட்டலில் வைத்து இதனை சம்மேளனத் தலைவர் சி.தவரட்ணம் இந்திய குழுவின் தலைவர் திருமதி சுஷ்மா சுவராஜிடம் இதனைக் கையளித்தார்.


இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு எழுதப்பட்ட இக்கோரிக்கை கடித்தின் பிரதிகள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கச்சேரி - சென்னை

சீனாவில் உள்ள உலகில் பெரிய அணை உடையும் அபாயம்: 1 லட்சம் பேர் வெளியேற்றம்

உலகிலேயே பெரிய அணை சீனாவில் உள்ள யாங்சி ஆற்றில் 2006-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து 22 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணை கட்டுமான பணி 1994-ம் ஆண்டு தொடங்கி 2006-ல் முடிவடைந்தது.

இந்த அணையை கட்டி முடிக்க ரூ.2லட்சம் கோடி செலவிடப்பட்டது. அப்போது அணை பகுதியில் இருந்த 14 பெரிய நகரங்கள், 133 சிறு நகரங்கள், 1350 கிராமங்கள் காலி செய்யப்பட்டு 14 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அணை கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து அடிக்கடி அணை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதுவரை 96 தடவை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இனியும் 5386 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கண்டறிந்து உள்ளனர்.

சூடான் தென் சூடானுக்கு எதிராக யுத்தப் பிரகடனம்

சூடானின் திபர் ஒமர் அல் பஷீர் வியாழக்கிழமை தென் சூடானுக்கு எதிராகத் தனது யுத்தப் பிரகடனத்தை விடுவித்துள்ளார். தென் சூடான் அரச தலைவர்களை பூச்சிகள் என வர்ணித்துள்ள அவர் விரைவில் அவர்களுக்கு எதிராக பாடம் கற்பிக்க போவதாகவும் கூறியுள்ளார்.

தென் சூடான் அரசாங்கத்தைக் களைப்பதற்கான ஒரு முயற்சியாகவே இந்த யுத்தப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். மிக நீண்ட உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் தென் சூடான் மிகச் சமீபத்திலேயே அதாவது ஜூலை 9 2011 இல் விடுதலை பெற்று தனி நாடானாது. தற்போது எண்ணெய் வளம் மிக்க தென் சூடானின் எல்லைப் பகுதிகளை கைப் பற்றுவதற்காக சூடான் அவ்வப்போது தாக்குதல்களை மேற்கொண்டு வந்தது.

இமயமலையின் ஒரு பகுதியில் இறுகி வரும் பனிக்கட்டிகள்

புவி வெப்பமடைவதால் பனி மலைகள் உருகி வருகின்றன. ஆனால் இமயமலையின் மேற்கு பகுதியான காரகோரம் மலையில் பனி இறுகி, கெட்டியாகி வருவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
இந்த மலைத்தொடரில் பனியின் அளவு அதிகரித்து வருவதை பிரெஞ்சு விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. புவி வெப்பமடைவதால் இமய மலையின் மற்ற பகுதிகளில் உள்ள பனி மலைகள் உருகி வரும் நிலையில், இந்த மலை மட்டும் இறுகி வருவதன் காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை.

சுஷ்மா அம்மையாரைப் புகழ்ந்து தள்ளுகிறது இலங்கை அரசு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவின் தலைவரான இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த முன்மாதிரியானவர் என பதில் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பாராட்டுத் தெரிவித்தார்.தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு பாராட்டினார். அவர் தொடர்ந்து கூறுகையில்.
இங்கு வந்துள்ள அவர் அவருடைய நாட்டின் கொள்கைகளை விமர்சிக்கவில்லை. அவர்களுடைய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாதவிவாதங்கள் பற்றி வீணாக கதைக்கவில்லை.
வடக்கு கிழக்கு நிலைகளை அறியவும் இலங்கை தொடர்பான நல் அபிப்பிராயத்தை ஏற்படுத்தவும் இந்திய பாராளுமன்ற குழுவினரின் இலங்கை விஜயம் நல்லதொரு சந்தர்ப்பமாக அமைகிறது.

புலம்பெயர் தமிழர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு உறவினர்கள் UNHCR இடம் கோரிக்கை

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நாட்டை விட்டு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு அவர்களின் உறவினர்கள் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பல தமிழர்கள் நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் புலம்பெயர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறிய பலர் பற்றிய எவ்வித தரவுகளும் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலர் மோசமான சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பல்களிடம் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருணாநிதியின் கோரிக்கைக்கு சம்பிக்க ரணவக்க பதில்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதியின் கோரிக்கைக்கு, இலங்கையின் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க பதிலளித்துள்ளார்.
 
தமிழ்ஸ்தான் மற்றும் காஸ்மீர் ஆகியவற்றுக்கு முதலில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இலங்கையில் தனித் தமிழீழம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக, காஸ்மீர் மற்றும தமிழ்ஸ்தான் ஆகியவற்றுக்காக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஈழத்து எம்.ஜி.ஆர். டக்ளஸ் தேவானந்தா : காங். எம்.பி. எழுப்பிய சர்ச்சை

இந்தியா தேடப்படும் ஒரு கொலைக்குற்றவாளியை ஈழத்து எம்.ஜி.ஆர்.  என புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய எம்.பி. சுதர்சன நாச்ச்சியப்பன்.

இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர் நேற்று மாலை 5 மணியளவில் யாழ். மத்திய கல்லூரிக்கு வந்தனர்.
இவர்களை இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் வரவேற்றார். அவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவும் கலந்து கொண்டார்.

லண்டன் சோமரத்ன தேரரால் வல்லுறவுக்கு ஆளான பெண் 35 வருடங்களின் பின் சாட்சியளித்துள்ளார்

லண்டனில் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கையரான, லண்டன் செல்ஸ்டன் விகாரை விகாராதிபதி சங்கைக்குரிய பஹலக சோமரத்ன தேரருக்கு எதிராக மேலும் ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு ஐலெவோர்த் க்ரவுன் நீதிமன்றில் நேற்று (18) புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது 1970ம் ஆண்டு காலப்பகுதியில் 09 மற்றும் 10 வயது இருக்கும்போது தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை பெண் ஒருவர் நீதிமன்றில் விபரித்துள்ளார்.

யாழ். பல்கலை உணவகத்தில் தரமற்ற வகையில் உணவுகள்; சீர்செய்ய ஒரு வார கால அவகாசம் விதித்தது சுகாதாரப் பிரிவு


யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள உணவகத்தில் சுகாதாரச் சீர்கேடான உணவு வகைகள் விற்பனை செய்யப்படுவதாக மாணவர்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்களிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

 
இந்த முறைப்பாட்டை அடுத்து அங்கு சென்ற பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அங்குள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைச் சீர்செய்யுமாறு ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளனர்.
 

வடக்கு, கிழக்கு செல்வதுபோல் மலையகத்திற்கும் வாருங்கள் - இந்திய குழுவுக்கு அழைப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய அரசியல் பிரதிநிதிகள் மலையகத்திற்கு விஜயம் செய்து இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கை தரத்தினையும் பார்வையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை ஒன்றினை தயாரித்து இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளித்துள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் தெரிவித்துள்ளார்.

இது விடயம் குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,

சிறிலங்கா விரித்த ராஜதந்திர வலையில் மறுபடியும் விழுந்திருக்கிறது இந்திய அரசு - தினமணி தலையங்கம்

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கை அரசு வரவேற்றதன் காரணமே, ஐ.நா. சபையின் குழு எதுவும் இலங்கையைப் பார்வையிட வந்துவிடாமல் தடுப்பதற்காகத்தான். மனித உரிமைக் கழகத்தில் எங்களுக்கு எதிராக வாக்களித்த இந்தியாவே தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பி எங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டது என்று சொல்லிக் கொள்வதற்காகத்தான். அதிபர் ராஜபட்ச விரித்த ராஜதந்திர வலையில் மறுபடியும் விழுந்திருக்கிறது இந்திய அரசு என்பதுதான் உண்மை.

இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளிதழ் தனது ஆசிரியர் கருத்தில் தெரிவித்துள்ளது. அதன் முழுவிபரமாவது,

சிறிலங்கா - இந்தியாவின் எதிர்கால அரசியல் உறவு எவ்வாறு அமையும்?

“இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளிலும் வாழும் மக்களின் ஒருபகுதியினர் தமிழ் மொழியைப் பேசுவதுடன், தமிழர்களாக உள்ளனர். இவ்வாறான இன அடையாளம் மூலம் கிடைக்கும் ஒற்றுமையை சீனாவால் சிறிலங்காவில் ஒருபோதும் ஈடுசெய்து கொள்ள முடியாது. “

இவ்வாறு globalpost ஊடகத்தில் ஜே.எஸ்.திசநாயகம் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுரையை ‘புதினப்பலகை‘க்காக தமிழாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.
ஜெனீவாவில், கடந்த மார்ச் 22ம் நாள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. எவ்வாறிருப்பினும், அமெரிக்காவின் இத்தீர்மானம் தொடர்பில் அரசியல் அவதானிகள் ஆச்சரியமடையவில்லை.

ஆனால், தென்னாசியாவில் உள்ள இந்தியா தனது அயல்நாடான சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

தடுமாற்றமில்லா தாம்பத்யம் வாழ்க்கைக்கு அவசியம்!

மனிதர்களின் வாழ்க்கையில் திருமணம் என்பது அவசியமானது. அது மனிதர்களை முழுமையாக்குகிறது. காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவாக இருந்தாலும் தம்பதியர் சில வருடங்கள் மட்டுமே மகிழ்ச்சியாக காலம் கழிக்கின்றனர். அப்புறம் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அது மணமுறிவில் போய் நிற்கிறது. உலக அளவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தம்பதியர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுகின்றனர். ஆயிரக்கணக்கானோர் தாங்களாகவே பிரிந்து விடுகின்றனர்.

தம்பதியர் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பணப்பிரச்சினை, பொறுப்பற்ற தன்மை, குடி, போதை, சூதாட்டம், தம்பாத்ய பிரச்சினை, சுயநலத்தன்மை, ஒரு சில மேனரிசங்கள் போன்றவை தம்பதியரிடையே பிடிக்காமல் போய் பிரிவு ஏற்படுகிறது. எனவே இவற்றினை தவிர்த்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள். இல்லற வாழ்க்கையில் இனிமையும், கிளர்ச்சியும் ஏற்பட உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

நேர்மறை எண்ணங்களால் மனதை நிரப்புங்கள்!

மனதிற்குள் தேவையற்ற சத்தங்கள் கேட்டு மனதை பாதித்தால் மெடிடேசன் செய்வதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்தலாம் என்று உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நன்றாக இருக்கும் ஒரு நபர் தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விடுவார். இதற்கு காரணம் தலைக்குள் யாரோ உட்கார்ந்து கொண்டு பேசுவது போல இருப்பதுதான். ஒருசிலரின் மனதுக்குள் மணியடிக்கும், காதுக்குள் யாரோ பேசுவது போல இருக்கும். உலக அளவில் பெரும்பாலான இளைய தலைமுறையினர் இந்த சிக்கலை சந்தித்து கொண்டிருக்கின்றனர். மனதுக்குள் பேசும் இந்த பேச்சை நிறுத்த முடியும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

மின்னல் தாக்கி நால்வர் பலி _

  மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி நான்கு பேர் பலியான சம்பவங்கள் மாத்தளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளன.

மாத்தளை இறத்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்வத்தைப் பகுதியில் மின்னல் தாக்கத்துக்குள்ளாகி ஒருவர் பரிதாபகரமாக நேற்று முன்தினம் பலியாகியுள்ள அதேவேளை, மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ மற்றும் பிட்டபெத்தர ஆகிய பகுதிகளில் மேலும் மூவர் மின்னல் தாக்கத்துக்கு பலியாகியிருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண கூறுகையில், இறத்தோட்டைப் பகுதியில் குறித்த நபர் தனது வீட்டிற்குப் பின்னால் உள்ள மரத்தடியில் நின்று கொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகியதாகத் தெரியவந்துள்ளது. பலியானவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வடக்கின் அபிவிருத்தி, நலன்புரித் திட்டங்கள் தொடர்பில் இந்தியக் குழு அரசுக்கு நன்றி தெரிவிப்பு _

  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பாராளுமன்றக் குழு வடக்கு அபிவிருத்தி மற்றும் நலன்புரித் திட்டங்களை அவதானித்ததன் பின்னர் அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்திருப்பதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

வடக்கில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களைப் பார்வையிடுவதற்கும் அதே நேரம் இந்திய நிவாரணங்களை பகிர்ந்தளிப்பதற்குமான இந்தியப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இலங்கை வந்துள்ள குழு நேற்று புதன்கிழமை வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டதன் பின்னரே இவ்வாறு நன்றி தெரிவித்திருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கைப் பொருளாதாரம் இன்னும் உறுதியாகவே உள்ளது! ஆசி.அபி.வங்கி

இலங்கைப் பொருளாதாரம் இன்னும் உறுதியாகவே உள்ளது! ஆசி.அபி.வங்கி news
இலங்கைப் பொருளாதாரம் மிதமான நிலையில் ஆனால், இன்னும் உறுதியாகவே உள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.  கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஆசிய அபிருத்திக்கான கண்ணோட்டம் என்ற அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இலங்கை கடந்த ஆண்டில், எட்டுப் புள்ளி மூன்று சதவீதம் என்ற உயர் பொருளாதார வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. இது, இந்த ஆண்டில் ஏழு சதவீதம் என வீழ்ச்சி காணும். எனினும், வருகின்ற ஆண்டுகளில் எட்டு சதவீதம் என்ற அளவிற்கு முன்னேற வாய்ப்புள்ளது. குறிப்பாக, உலக பொருளாதாரம் ஒரு நல்ல நிலையினை அடைகின்ற போது, இலங்கையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புக்கள் அதிகரித்து, பொருளாதார வளர்ச்சி உயர்வடையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 

ஜனாதிபதியின் தீர்க்கதரிசனத்தால் நாடு துரித அபிவிருத்தி கண்டு வருகிறதாம்; றிசாத் பதியுதீன் புகழ்மாலை


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தீர்க்கதரிசனமான செயற்பாட்டால் நாடு துரித அபிவிருத்தி கண்டுவருவதாக கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது ஆனால் இலங்கையில் இடம்பெற்ற கொடிய பயங்கரவாதத்தினால் 30 ஆண்டுகள் எங்களால் சுதந்திரத்தை  அனுபவிக்க முடியாது போனது எனினும் ஜனாதிபதியின் தூரநோக்கு சிந்தனையால் இன்று பயங்கரவாதம் முற்று முழுதாக இலங்கையிலிருந்து இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திக்கு ரூ.82.51 மில்லியன் நிக்கொட் ஒதுக்கீடு


 இந்த நிதியின் மூலம் வவுனியா மாவட்டத்திலுள்ள வவுனியா, வவுனியா தெற்கு, செட்டிகுளம், வவுனியா வடக்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருவதாக வவுனியா மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரும் "நிக்கொட்' திட்டப் பிரதிப் பணிப்பாளருமான எம்.கிருபாசுதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திக்கென "நிக்கொட்'டினால் இந்த வருடம் 82.51 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் வவுனியா மாவட்டத்திலுள்ள வவுனியா, வவுனியா தெற்கு, செட்டிகுளம், வவுனியா வடக்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் மருத்துவ வசதிகள் கல்வி அபிவிருத்தி, வீதிப் புனரமைப்பு, ஆசிரியர் விடுதிகள், பொது நோக்கு மண்டபங்கள், பலநோக்கு கூட்டுறவு கட்டடங்கள் என்பனவற்றின் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருவதாக வவுனியா மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளரும் "நிக்கொட்' திட்டப் பிரதிப் பணிப்பாளருமான எம்.கிருபாசுதன் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர் மீது கொண்ட அக்கறையினாலேயே ஜெனிவாத் தீர்மானத்தை ஆதரித்தது இந்தியா யாழ்ப்பாணத்தில் சுஷ்மா சுவராஜ் தெரிவிப்பு


இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்தும் அதற்கு அரசியல் தீர்வுகாணப்பட வேண்டும் என்ற அக்கறையினாலுமே ஜெனிவாத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது என்று தெரிவித்தார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுஷ்மா சுவராஜ்.

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்கள், உள்ளூர் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள், முக்கிய ஆலயங்களது பாதிரிமார்கள், இந்துக் குருமார்கள் உட்பட சிவில் சமூகத்தினர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர். 
 
யாழ்ப்பாணத்தில் அளவுக்கு மீறிக் காணப்படும் இராணுவப் பிரசன்னம், விகாரைகளின் ஆக்கிரமிப்புச் சட்டம் ஒழுங்கு நிலைமை என்பன குறித்து சிவில் சமூகப் பிரதிநிதிகள் இந்தியக் குழுவினருக்கு விளக்கினர்.

Wednesday, April 18, 2012

ஆப்கான் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த தாலிபான்கள்: 150 மாணவிகள் உயிர் ஊசல்

காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வியை எதிர்க்கும் தாலிபான் தீவிரவாதிகள் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த குடிநீரில் விஷம் கலந்தனர். அந்த தண்ணீரைக் குடித்த 150 மாணவிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் தக்கார் மாகாணத்தில் ரஸ்டாக் நகரில் உள்ளது நஸ்வான் மார்காசி பெண்கள் உயர் நிலைப்பள்ளி. பெண் கல்விக்கு எதிராக உள்ள தாலிபான் தீவிரவாதிகள் அந்த பள்ளியில் உள்ள குடிநீரில் விஷத்தைக் கலந்தனர். இதையறியாது அந்த தண்ணீரைக் குடித்த 150 மாணவிகளுக்கு தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

மீனவர்களுக்கு வயர்லெஸ் கருவிகள் வழங்க தமிழகஅரசு முடிவு

ராமநாதபுரம் ஏப்19 கடலில் மீன்பிடிக்க செல்லும்போது ஏற்படும் இயற்கை சீற்றங்கள் குறித்து கரையில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு ரூ 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கம்பியில்லா தகவல்தொடர்பு சாதனங்கள் வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என்றும், அதற்கு சம்மந்தப்பட்ட மீன்துறை உதவி இயபக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பித்து பயனடையும்படியும் மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : கடலுக்குள் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும்

பார்வைகளின் நான்கு பிரிவுகள்

பார்வைகளின் நான்கு பிரிவுகள்
பார்வைகள் என்றால் கண்பார்வைகள் அல்ல. வாழ்க்கைப் பார்வைகள் முதல் பார்வை பின்னோக்கிப் பார்த்தல்.
ஒரு மனிதனுக்குத் தான் கடந்து வந்த பாதைமீது பார்வை எப்போதும் இருக்க வேண்டும். வந்த வழி தெரியாவிட்டாால் போகிற பாதை புரியாது என்பார்கள். பழையதை நினைத்துப் பார்க்காவிட்டால் வாழ்வில் நிதானம் என்பதே பிடிபடாது. கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்கள் கடந்து வந்த பாதையை எண்ணிப் பார்க்காவிட்டால் ஆட்டம் போட்டு அடங்கிப் போக வேண்டியதுதான். நல்ல வளர்ச்சியிலும் வளர்வதற்குக் காரணமாக இருந்த நான்கு பேர்கள் முதல் பத்துப் பேர்கள் வரை அவ்வப்போது நினைவுக்கு வரவேண்டும். நன்றியின் வெளிப்பாடு மட்டுமல்ல. நம்மால் பிறருக்கு இப்படி உதவ முடியுமா என்கிற உந்து சக்தியாகவும் இருக்கும்.

செல்போனுக்கு சார்ஜ் செய்த வாலிபர் பலி

சித்தூர் மாவட்டம் சதும் மண்டலத்தைச் சேர்ந்தவர் சுதாகர்ரெட்டி (32), விவசாயி. இவர் நேற்று பிற்பகல் தனது வீட்டில் செல்போனுக்கு சார்ஜ் செய்வதற்காக சார்ஜரை சுவிட்ச்போர் டில் பொருத்தினார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதாக தெரிகிறது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவரது தலை சுவற்றில் மோதியது. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சதும் அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Source: http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=74278

குஞ்சை ஈன்ற கோழி – சிறிலங்காவில் அதிசயம்

 கோழியில் முட்டை போடுவது தான் வழக்கம். ஆனால், கோழியே குஞ்சு ஒன்றை ஈன்ற அதிசயம் சிறிலங்காவில் இடம்பெற்றுள்ளது.

வெலிமட, கெந்திரிமுல்ல, நெடுங்கமுவ என்ற இடத்தில், ஈ.எம்.ரஞ்சித் என்பவர் வளர்த்து வந்த ஆறு கோழிகளில் ஒன்றே குஞ்சு ஒன்றை ஈன்று விட்டு இறந்து போயுள்ளது.

இந்தக் கோழி இதுவரை முட்டையிடாமல் இருந்து வந்ததாகவும், நேற்று குஞ்சு ஒன்றை ஈன்ற பின்னர் இறந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்க்கோழி இறந்த போதும், அது ஈன்ற குஞ்சு நலமாக உள்ளது.

இத்தகையதொரு நிகழ்வை தாம் கேள்விப்பட்டதில்லை என்று கூறியுள்ள வெலிமட பிரதேச தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி பி.ஆர்.யாப்பா, கோழியே குஞ்சை ஈன்றதை உறுதி செய்துள்ளார்.

கோழியின் உடலை பரிசோதனை செய்ததாகவும், அந்தக் கோழியின் உடலுக்குள் முட்டை அடைகாக்கப்பட்டு, குஞ்சு பொரித்த நிலையில் அது வெளிவந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்
Source: http://www.puthinappalakai.com/view.php?20120419106024

கர்ப்பிணிகள் போல் பாசாங்கு செய்து கொக்கெயின் கடத்திய தாய்லாந்து யுவதிகள் _

  கர்ப்பிணிகள் போன்று பாசாங்கு செய்து கொக்கெயின் போதைப் பொருளினை இலங்கைக்கு கடத்தி வந்த இரு தாய்லாந்து நாட்டு யுவதிகளை கைது செய்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் அந்த யுவதிகளிடமிருந்து 2 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களினை மீட்டுள்ளனர்.

குறித்த யுவதிகளிருவரும் 162 கொக்கெயின் போதைப்பொருள் வில்லைகளை விழுங்கியே கடத்தி வந்துள்ளனர். இவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்து வைத்தியர்களின் உதவியுடன் மிகவும் பாதுகாப்பாக அந்த போதைப்பொருள் வில்லைகளை வெளியில் எடுத்துள்ளனர்.

ஒரு யுவதியின் வயிற்றில் 88 கொக்கெயின் வில்லைகளும் மற்றைய பெண்ணிடம் 74 கொக்கெயின் வில்லைகளும் இருந்ததாக பொலிஸார் அறிவிக்கின்றனர்.
___

'பளிச்' முகத்திற்கு முத்தான சில யோசனைகள்!

வெயில் காலங்களில் சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். இந்த கருப்பு முகத்தை களையாக மாற்ற வீட்டிலேயே இருக்கு கண்கண்ட அழகு சாதன பொருட்கள். அவற்றை உபயோகித்துப் பாருங்களேன் கருப்பு மறைந்து முகம் களையாக மாறும்.

அழகு தரும் தேங்காய்

அன்றாட சமையலில் முக்கிய இடம்பெறுவது தேங்காய், இதில் உள்ள எண்ணெய் சத்து நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்­ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.

ஜெனீவாவில் இந்தியாவின் நடவடிக்கையும் இலங்கை அரசாங்கத்தின் எதிர் நடவடிக்கையும்

கலாநிதி ஜெகான் பெரேரா
கலாநிதி ஜெகான் பெரேரா
இவ்வருடம் மார்ச் மாத இறுதிப் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் தான் அடைந்த தோல்விகளுக்கு மிக சிறிய இடைவெளியிலான ஆதரவு பற்றாக்குறை மட்டுமே காரணம் என்ற கருத்தை முதன்மைப்படுத்தி எடுத்துக் கூறுவதில் மும்முரமாயிருந்தது. பேரவையின் 47 அங்கத்துவ நாடுகளில் 15 நாடுகள்
இலங்கைக்கு ஆதரவாயிருந்து ஐக்கிய அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தன. இன்னும் 8 நாடுகள் பிரேரணைக்கு வாக்களிப்பதனை தவிர்த்துக் கொண்டிருந்தன.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் 28 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது மேலும் 28 கையடக்கத் தொலைபேசிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்தார். நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதிகள் கைத் தொலைபேசிகளைப் பயன்படுத்திக் கொண்டு பல்வேறுபட்ட நாசகார வேலைகளில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை பாதுகாப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே இக் கைத்தொலைபேசிகளைக் கைப்பற்ற முடிந்ததாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.
கைப்பற்றப்பட்டுள்ள கைத்தொலைபேசிகளில் சிறைச்சாலை அதிகாரிகளுக்குச் சொந்தமான பல தொலைபேசிகள் இருந்ததாகவும் இது எவ்வாறு இவர்களுக்குக் கிடைத்தது என்பது தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவ்அதிகாரி ஏற்கனவே சுமார் மூன்று வாரத்திற்கு முன்னராக இது போன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது 46 கைத்தொலைபேசிகளை கைப்பற்ற முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.
http://www.neruppu.com/

சமுர்த்தி பயனாளிகளுக்கான உதவித் திட்டம் இம் மாதம் முதல் அதிகரித்துள்ளது


Add caption
யாழ். மாவட்ட சமுர்த்தித் திட்ட பயனாளிகளுக்கு வழங்கவென இம்முறை 47 மில்லியன் ரூபா அரசினால் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் இ. சிவசிறி தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் எற்கனவே வழங்கப்பட்டு வருகின்ற முத்திரையின் பெறுமதியினை இம் மாதம் அமூலுக்கு வந்த புதிய திட்டத்தின் ஊடாக இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தற்போது யாழ். மாவட்டத்தில் தற்போது 52 ஆயிரத்து 819 சமுர்த்திப் பயனாளிகள் உள்ளனர்.
இதுவரை காலமும் இவர்களுக்கு 250, 350, 375, 415, 525, 615, 900,1500 ரூபாவாக இருந்த முத்திரையின் பெறுமதிகளாக இருந்தன ஆனால் தற்போது அதன் பெறுமதி அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய அருங்காட்சியகத்தில் 7 பேர் பணி நீக்கம்

கொழும்பு அருங்காட்சியக திருட்டுச் சம்பவத்தை அடுத்து அங்கு கடமையாற்றி வந்த ஏழு பேர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.


இதன்படி அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுபவர்கள் மற்றும் காரியலய உத்தியோகத்தர்கள் ஆகியோர் இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.



இங்கு 40 இலட்சம் பெறுமதியுடைய மிகவும் தொன்மையான கண்டி இராசதானிக்குரிய வாள், தங்கக் காசுகள் உள்ளிட்ட பல பெறுமதி மிக்க பொக்கிஷங்கள் களவாடப்பட்டிருந்தன.


இவற்றில் சில பொருட்கள் பெட்டகத்தில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தது ஆனால் அது அதற்குரிய சாவியினைப் பயன்படுத்தி களவாடப்பட்டாதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.


அத்துடன் இச் சம்பவத்திற்கு ஒரு அரசியல்வாதியும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.


பொருட்கள் களவாடப்பட்டதனைத் தொடர்ந்து அருங்காட்சியகம் மக்கள் பார்வைக்கு முற்று முழுதாக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உடலுக்கு மட்டுமல்ல உறவு, ஆரோக்கியத்திற்கும்தான்!

உண்ணும் உணவே தினசரி ஒரே மாதிரி இருந்தால் போரடித்து விடும். அதேபோலதான் தாம்பத்யத்திலும் புதிதாக புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உற்சாகமும், புத்துணர்ச்சியும் கிடைக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். உங்கள் செக்ஸ் வாழ்க்கையை நித்தம் நித்தம் புதுப்பிக்க அவர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.

மனதிற்கான உற்சாகம்

தாம்பத்ய உறவு என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல மனதோடும் தொடர்புடையது. பெரும்பாலான தம்பதியர் உடல் தேவைக்காக மட்டுமே இணைவதே அவர்கள் செய்யும் தவறாகும். அதேபோல் செக்ஸ் என்பது மன ஆரோக்கியத்தோடும், உடல் ஆரோக்கியத்தோடும் தொடர்புடையது என்கின்றனர் நிபுணர்கள்.

வவுனியா மனிக்பார்மில் இந்திய நாடாளுமன்றக் குழு

இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர் இன்று காலை வவுனியா மனிக்பார்ம் இடைத்தங்கல் முகாமுக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
முன்னதாக இரண்டு உலங்கு வானூர்திகளில் வந்திறங்கிய இக்குழுவினரை வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ் வரவேற்று அழைத்துச் சென்று இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமைகள், மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கை நிலைமைகள் என்பன குறித்து விளக்கமளித்தார்.
இறுதி யுத்தத்தையடுத்து, மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்ட 3 லட்சம் மக்களில் 6000 பேர் மாத்திரமே இன்னும் இங்கு மிஞ்சியுள்ளதாகவும், ஏனையோர் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இந்தியக் குழுவினரிடம் கூறினார்.

பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அட்டூழியங்களைக் கூறும் ஆவணங்கள்

பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அட்டூழியங்களைக் கூறும் ஆவணங்கள்

பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் இறுதி ஆண்டுகளில் சித்ரவதைகளும் கொலைகளும் நடந்தமை குறித்து பிரித்தானிய அமைச்சர்களுக்கு தெரிந்திருந்தது என்பதைக் கூறும் அரசாங்க ஆவணங்கள் பொதுமக்களின் பார்வைக்கு புதனன்று திறந்துவிடப்படும்.


பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகள் சுதந்திரமடைந்த போது, இது குறித்த கோப்புகள் ரகசியமாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

எச்சரிக்கை! புதுவிதமான 'கடனட்டை' (Credit Card)மோசடி

"விசா காட்”, “மாஸ்ரர் காட்வைத்திருக்கும் வாடிக்கையாளர்களே! புதுவிதமான கடன் அட்டை மோசடியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் ஏமார்ந்து விடாது எச்சரி க்கையாக இருங் கள் என றோயல் வங்கி அறிவித்துள்ளது.
உங்களது கடன் அட்டைகளில் உள்ள விபரங்கள் அனைத்தையும் எப்படியோ தெரிந்து வைத்துக் கொண்டுள்ள மோசடிக்காரார்கள் அதன் பின்புறத்திலுள்ள இலக்கங்களில் இறுதி 3 எண்களா ன பாதுகாப்பு இலக்கங்களையும் அறிந்து கொண்டால் தான் உங்கள் கடன் அட்டை மூலம் அவ ர்கள் பணமோசடி செய்ய முடியும். தொலை பேசி மூலம் உங் கள் பெயர் விபரங்களையும், உங்க ள் கடன் அட்டையின் பின்புறத்திலுள்ள இந்த இலக்கங் களையும் சந்தைப் படுத்தும் கொம்பனிகளிடம் வழங்குவதன் மூலம் அவர்கள் பொருட்க ளை கொள்வனவு செய்ய முடியும்.

மகாத்மா காந்தியின் ரத்தம் படிந்த புல் ரூ.8.2 லட்சத்துக்கு ஏலம்!

மகாத்மா காந்தியின் ரத்தம் படிந்த புல் ரூ.8.2 லட்சத்துக்கு ஏலம் போனது. லண்டனை சேர்ந்த முல்லாக் ஏல நிறுவனம் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை நேற்று ஏலம் விட்டது. காந்தியின் ரத்த துளி படிந்த புல் மற்றும் சிறிது மண், ரூ.8.2 லட்சத்துக்கு ஏலம் போனது.
இவை 1948,ம் ஆண்டு ஜனவரி 30,ம் தேதி காந்தி கொல்லப்பட்டபோது, அங்கிருந்த கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பி.பி.நம்பியார் என்பவரால் சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நம்பியார் எழுதிய கடிதமும் வைக்கப்பட்டிருந்தது. இதுபோல காந்தியின் கண்ணாடி, அவர் பயன்படுத்திய ராட்டை, எழுதிய கடிதங்கள், அரிய புகைப்படங்கள், படித்த புத்தகம் போன்றவையும் ஏலம் விடப்பட்டன.
கண்ணாடி ரூ.27 லட்சம், ராட்டை ரூ.22 லட்சம், அவர் படித்த புத்தகம் ரூ.8.61 லட்சத்துக்கு ஏலம் போனது. மொத்தமாக காந்தி சம்பந்தப்பட்ட பொருட்கள், ரூ.82 லட்சத்துக்கு ஏலம் போனதாக முல்லாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏலம் எடுத்தவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
http://www.seithy.co...&language=tamil

Diversity Visa results will be available after May 1, 2012

DV 2013 Program: Beginning on May 1, 2012, all entrants may check the status of their entry.
Entrant Status Check will be the ONLY means of informing you if your entry was selected or not. All entrants, including those NOT selected, may check the status of their entries through the Entrant Status Check on the E-DV website www.dvlottery.state.gov. Entrants will need to use the information from their confirmation pages saved at the time of entry.


IMPORTANT NOTICE: If you have lost your confirmation information, you will not be able to check your DV entry status. We will not be able to resend the confirmation page information to you.
Source: http://travel.state.gov/visa/immigrants/types/types_1322.html#status

அழகு.. ஆண்மை.. வெண்டைக்காய்…

வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
ஆப்பிரிக்கர்கள் `கம்போ’ என்று ஒருவகை சூப் தயாரித்தனர். இந்த சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும், நீளமாகவும், நுனி கூர்மையாகவும் இருப்பதால், ஆங்கிலத்தில் இதை `லேடீஸ் பிங்கர்’ என்று அழைக்கின்றனர்.

இலங்கையில் பொருத்தப்பட்ட கடல்கோள் எச்சரிக்கை கோபுரங்கள் 10 இயங்கவில்லை கடந்த வார பூமி நடுக்கத்தில் தெரிந்தது

இந்தோனேஷியாவை அண்மித்த பகுதியில் கடந்த 11 ஆம் திகதி ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து இலங்கையில் பொருத்தப்பட்டுள்ள கடல்கோள் எச்சரிக்கை கோபுரங்களில் 10 கோபுரங்கள் செயற்படாதிருந்தமை  கண்டறியப்பட்டுள்ளது. சில இடங்களில் அன்றைய தினம் கடல்கோள் எச்சரிக்கைக் கோபுரங்கள் செயற்படவில்லை என கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளையடுத்து குறித்த 10 கோபுரங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இடர்  முகாமைத்துவ நிலையம்  தெரிவித்துள்ளது.
இருப்பினும், நாட்டின் கரையோரங்களில் பொருத்தப்பட்டுள்ள 74 கடல்கோள் எச்சரிக்கை கோபுரங்களில் 64 கோபுரங்கள் உரிய முறையில் செயற்பட்டதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசின் பணிகள் பூரண திருப்தி- சபாநாயகரின் விருந்தில் இந்திய குழு

சிறிலங்கா அரசின் பணிகளில் தாம் பூரண திருப்தி அடைவதாக இலங்கைக்கு சென்றிருக்கும் இந்திய நாடாளுமன்ற குழு இன்று நண்பகல் சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராசபக்ச வழங்கிய விருந்தில் கலந்து கொண்டு தெரிவித்தனர். இன்று நண்பகல் சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு சென்ற இக்குழுவினருக்கு சபாநாயகர் சமல் ராசபக்ச விருந்து வழங்கினார். தமக்கு வழங்கிய விருந்திற்கு நன்றி தெரிவித்த இக்குழுவின் தலைவி சுஸ்மா சிறிலங்கா அரசின் பணிகளில் தாம் பூரண திருப்தி அடைவதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக இக்குழுவினர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடினர். ‘இலங்கையில் அகதிகள் பிரச்சினை 30 வருடகாலமாக இருந்துவரும் ஒன்றாகும்.

தற்கொலைக் கூடங்களாகும் கல்விக்கூடங்கள்-வாரம் ஒரு தற்கொலை

சென்னை: தமிழகக் கல்விக் கூடங்கள் தற்கொலைக் கூடங்களாக மாறி வருகின்றன. இந்த ஆண்டில் வாரம் ஒரு மாணவர் தற்கொலை செய்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைக்கு ஆரம்பள்ளி மாணவர்கள் தொடங்கி ஐ.ஐ.டியில் எம்.டெக் படிக்கும் மாணவர்கள் வரை சரமாரியாக தற்கொலை முடிவை நாடத் தொடங்கியுள்ளனர். இதற்கு காரணம் மாணவர்களுக்கு எதார்த்தமான சூழ்நிலையை பழக்காததே. காதல் தோல்வியோ, தேர்வில் தோல்வியோ எதையும் தாங்கிக்கொள்ள இயலாமல் மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மரணத்தைதான்.

பணத்தை வாங்கிக் கொண்டு மார்க் வாங்குவது குறித்து கற்றுக்கொடுக்கும் கல்விக்கூடங்களில் தோல்வியை தைரியமாக எதிர்கொள்வது குறித்த வாழ்க்கையில் எதார்த்தத்தை கற்றுக்கொடுக்காமல் விடுவதே இதற்கு காரணம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

சீனாவை அழிக்க கூடிய அக்னி ஏ ஏவுகணையை இந்தியா இன்று சோதித்துள்ளது!

5ஆயிரம் கிலோ மீற்றர் வரை சென்று கண்டம் விட்டு கண்டம் தாவும் வல்லமை கொண்ட அக்னி ஏ ஏவுகணை ஒரிசாவின் வீலர் தீவில் இன்று சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணையால் சீனா முழுவதையும் இந்த ஏவுகணையின் தாக்குதல் வளையத்தின் கீழ் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்னி ஏ ஏவுகணை 3 அடுக்குகளைக் கொண்டது, அதன் உயரம் 17 மீட்டர் ஆகும். 5ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்க கூடியது. அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடிய திறன் கொண்டதாக அக்னி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே வைத்துள்ளன.
அக்னி ஏ ஏவுகணையின் மூலம் சீனா உட்பட ஐரோப்பாவின் பல நாடுகளையும் கூட தாக்க முடியும் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய சோதனையைத் தொடர்ந்து அடுத்த ஓராண்டில் இதுபோன்ற மேலும் சில சோதனைகளை செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 3,500 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் அக்னி 4 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Source: http://www.thinakkathir.com/?p=34771

கற்பிட்டி கடற்பரப்பில் அச்சம்! அதிசயம்!! நூற்றுக்கு மேற்பட்ட திமிங்கலங்கள்

இலங்கையின் வடக்கு கற்பிட்டி கடற்பரப்பில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண் திமிங்கலங்கள் கடந்த சனிக்கிழமை காணப்பட்டதாக  இலங்கையின் கரையோர பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கரையிலிருந்து சற்று தூரத்தில்  இந்த திமிங்கலங்கள் காணப்பட்டது முன்னொரு போதும் நடக்காத காரியம் என அந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்.
கடலில் நீர்மட்டத்திற்கு கீழ் உள்ள பாறைகளிலிருந்து இவை மேல் கிளம்பி வந்திருக்கலாம் என்றும், கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம், மற்றும் மன்னார் பகுதி கடலில் மேற்கொள்ளப்படும் எண்ணெய் ஆராய்ச்சி ஆகியவற்றால் இவை கரையை நோக்கி வந்திருக்கலாம் என கரையோர பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலை வாகனம் விற்பனைக்கு

gatorbike.jpg
முதலைகளின் மோசமானது அலிகேட்டர். இறந்துபோன அலிகேட்டர் ஒன்றின் தோல் மற்றும் உடல் பாகங்களை மண்ணில் புதைத்து ஒன்றுக்கும் உதவாமல் போகச்செய்வதை விட இரண்டு சக்கர வாகனத்தில் பொருத்தினால் என்ன? இப்படி யோசித்த ஜிம் ஜாப்லன் (45) கேட்டர் பைக் என்றழைக்கப்படும் இந்த இரண்டுசக்கர வாகனத்தை டிசைன் செய்தார்.
ப்ளோரிடாவில் விலங்குகள் காப்பகம் ஒன்றை நடத்தி வரும் இவர், விலங்குகள் நல அமைப்பு ஒன்றுக்கு நன்கொடை வசூலித்துத் தரும் நோக்கத்தில் இந்த வித்தியாசமான வாகனத்தை
விற்பனைக்கு ம் விட்டிருக்கிறார். இந்த வாகனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.36 லட்சம் தான் என்றாலும் நன்கொடை மூலம் ரூ.54 லட்சம் வரை திரட்ட திட்டம். அதற்காக இவர் இந்த வாகனத்தில் ஜம்மென்று ஏறிக்கொண்டு, தான் காப்பாற்றிய பர்மா மலைப்பாம்பையும் தோளில் சுற்றிக்கொண்டு வலம் வருகிறார். ரூ.5400 வீதம் 1000 சீட்டுகளை, பார்ப்பவரிடம் எல்லாம் வேகமாக விற்று வருகிறார் ஜாப்லன்.
gatorbike1.jpg
10 அடி நீளமுள்ள இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள முதலையின் உடல் பாகங்களில் தலையைத்  தவிர மற்றவற்றை கழட்டி எடுக்கமுடியும். தலையின் பின்பக்கத்தில்  வேகம் காட்டும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. நடைபெறவிருக்கும் குலுக்கலில் யாரோ ஒருவருக்கு சொந்தமாகப் போகிறது இந்த வித்தியாசமான மோட்டார் பைக்.
Source: http://www.tamilvanan.com/content/category/american-news/

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator