Wednesday, April 11, 2012

இலங்கை செல்லும் குழுவில் திருமா.வுக்கு ஏன் இடமில்லை?... பன்சாலின் பம்மாத்து விளக்கம்

டெல்லி: இலங்கை செல்லும் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுக்கு ஏன் இடம் தரவில்லை என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சாலிடம் கேட்டால் அவர் வினோதமான விளக்கத்தை அளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் பிரதிநிதித்துவ அடிப்படையில்தான் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் பன்சால். ஆனால் கடந்த முறை மட்டும் எப்படி திருமாவளவனை சேர்க்க முடிந்தது என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை. மேலும், கடந்த முறை அதிமுகவை ஏன்

3 படத்தை தெலுங்கில் வெளியிட்டு பெரும் நஷ்டம் அடைந்தேன் - தயாரிப்பாளர் புகார்

தனுஷ் நடிப்பில், ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான 3 படத்தை தெலுங்கில் பெரும் விலை கொடுத்து வாங்கி வெளியிட்ட தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் நட்டி குமார் புகார் தெரிவித்துள்ளார்.

தனுஷ்-ஸ்ருதி ஜோடியாக நடித்த 3 படம் ரிலீசாகி ஒடிக்கொண்டிருக்கிறது. தமிழில் பிரமாதமான ஓபனிங் இருந்தாலும், கலவையான விமர்சனங்கள் காரணமாக இரண்டாவது வாரம் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது.

நிலநடுக்கம் குறித்து ‘அலர்ட்’ செய்யும் மொபைல்போன் அப்ளிக்கேஷன்

நிலநடுக்கம் பற்றி அறிய புதியதோர் ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன். ஜியோநெட் என்ற இந்த அப்ளிக்கேஷன் மூலம் நிலநடுக்கம் பற்றிய தகவல்களை உடனுக்குன் தெரிந்து கொள்ள முடியும். எந்தெந்த இடங்களில் நிலநடுக்கும் வந்துள்ளது, எந்நெந்த பகுதிகள் பாதித்துள்ளது என்பது போன்ற தகவல்களை இருந்த இடத்தில் இருந்து எளிதாக பெற முடியும்.

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் வீடு திரும்பியதால் சென்னை போக்குவரத்து ஸ்தம்பிப்பு!

சென்னை: சுனாமி எச்சரிக்கையை அடுத்து சென்னையில் அரசு அலுவலகங்களில் இருந்தும், பள்ளிகளில் இருந்தும் அனைவரும் வெளியேறியதால் சென்னை நகரம் ஸ்தம்பித்துப் போனது.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கையை அடுத்து தமிழ்நாட்டிலும் கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. சென்னையில் அரசு, தனியார் அலுவலகங்களில் இருந்தும் பள்ளிகளில் இருந்து அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் நகர்முழுவதும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மீணடும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மீணடும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை மாலை 125.65 ரூபாவாக இருந்த ஒரு டொலரின் மதிப்பு நேற்று 128 ரூபாவாக அதிகரித்தது.

சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்து, இன்று முற்பகல் ஒரு அமெரிக்க டொலர் 130 ரூபாவாக விற்கப்பட்டது.

இந்தோனேசியாவை இன்னொரு பூமியதிர்ச்சியும் தாக்கியது – சிறிலங்காவுக்கு மீண்டும் சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் இன்று பிற்பகல் ஏற்பட்ட மிகப் பயங்கரமான பூமி அதிர்ச்சியை அடுத்து சிறிலங்கா, இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் கிழக்கு, தெற்கு மாகாணங்களை சேர்ந்த கரையோரப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் இன்று பிற்பகல் 2.40 மணியளவில் (சிறிலங்கா நேரம் 2.10 மணி) றிச்டர் அளவுகோலில் 8.9 அளவுக்குப் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது.

இலங்கையில் யுத்தம் முடிந்தாலும் கடத்தல் முடியாது!- ஐ.நா.பேச்சாளர்


பிரேம்குமார் குணரத்ணம், திமுது ஆட்டிக்கல ஆகியோர் கடத்தப்பட்டமை மற்றும் மீண்டும் விடுவிக்கப்பட்டமை என்பன இலங்கை அரசியல் தன்மையின் அடையாளத்தை வெளிப்படுத்துகின்றது.

சிறுநீரகக்கல் எனும் சிக்கல்

சிறுநீரகக்கல் எனும் சிக்கல்

தலைவலி, முதுகுவலி மாதிரி பரவலாக பலரையும் தாக்கக்கூடிய ஒரு பிரச்னையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது கிட்னி ஸ்டோன் எனப்படுகிற சிறுநீரகக்கல். யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய சிறுநீரகக் கல் பாதிப்பின் பின்னணி, அறிகுறிகள், சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்தன்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை - எல்எல்ஆர்சி அறிக்கையின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும்

Posted Image
இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அதுதொடர்பாக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இணக்கப்பாடு ஏற்பட வேண்டும் என்றும் இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை நேற்று செவ்வாய் கிழமையன்று ரணில் விக்ரமசிங்க சந்தித்து இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த பிறகு, இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது.

பாலித கொஹணவிற்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்துமாறு ஆஸி.பொலிஸாரிடம் முறையீடு!

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹணவிற்கு எதிராக போர் குற்ற விசாரணை நடத்தும்படி அவுஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.அவுஸ்திரேலியாவில் இரட்டை குடியுரிமை பெற்றுள்ள கலாநிதி பாலித கொஹண, போர் குற்றம் புரிந்தமைக்கான ஆதாரங்களை அவுஸ்திரேலிய தமிழ் அமைப்பு ஒன்று கூட்டாட்சி பொலிஸாரிடம் சமர்பித்துள்ளதாக, அண்மையில் விடுதலைப் புலி சார்பு இணையம் ஒன்றை மேற்கோள்காட்டி ஏஎப்பி செய்தி வெளியிட்டிருந்தது.

தென்சீனக்கடலில் சீன பிலிப்பைன் கடற்படைகள் முறுகல்நிலை

சீனா தன் கடற்பகுதி எனவும் பிலிபைன்ஸ் மீனவர்கள் நுழையக்குடாது எனவும் அச்சுறுத்துகிறது.

அமெரிக்கா பிலிபைன்சிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

சர்வதேச 120 மைல் கடல்வலயச் சட்டத்திற்கமையவே பிலிபைன்ஸ் உரிமை கோறுகிறது.

இரண்டு கடற்படைகளும் முறுகல் நிலையில் உள்ளன.

Tuesday, April 10, 2012

ஈழவிடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியில் சமூகப்பிளவுகளின் செல்வாக்கு

தமிழர்களின் இனவிடுதலைப்போராட்டம் ஏன் தோல்விகண்டது என்பதற்கான பதிலாக உலக நாடுகளின் எதிர்ப்பே காரணம் என்று எமது ஊடகங்களிலும் எங்களிக்கிடையேயும் சொல்லிக்கொள்கிறோம்.இதில் உண்மை இருக்கின்றது. ஆனால் இந்த உலகத்துக்கு முன் நாம் எப்படி இருந்தோம் என்பதையும், உலக நாடுகள் ஏன் எம்மை எதிரியாகப் பார்க்கத்தொடங்கின என்பதற்கான காரணங்களையும் நாம் யாரும் ஆராய்ந்துபார்க்க விரும்புவதில்லை..அவற்றைப் பேச வெளிக்கிட்டால் அவற்றின் பின்னே மறைந்துள்ள எமது ஊத்தைகளும் வெளிப்பட்டுவிடுமே என்ற பதற்றத்தில் தெரிந்துகொண்டே காரியத்துடன் நாம் யாரும் அவற்றைப் பற்றி பேசுவதில்லை..இங்கு தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டம் என்பதற்க்குள் புலிகளினது மட்டுமின்றி இனவிடுதலைய வேண்டி நிகழ்த்தப்பட்ட தமிழர்களது எல்லாப் போராட்டங்களும் அடக்கம்...

போதிய வசதிகளின்றிய நிலையில் இயங்கும் 17 பாடசாலைகள்

முல்லைத்தீவு, மாந்தைகிழக்கு பிரதேசத்திலுள்ள 17 இற்கு மேற்பட்ட பாடசாலைகள் போதிய வசதிகளின்றி இயங்கி வருவதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இப் பிரதேசத்தின் 15 கிராமசேவகர் பிரிவுகளிலுமுள்ள 17 பாடசாலைகள் பாடரீதியான ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர் விடுதிகள் இல்லாமை, பௌதீக  வளப்பற்றாக்குறை போன்றவற்றுடன் நீண்டகாலமாக இயங்கி வருகிறது.

நீங்கள் ஒல்லியா?

நோய்களைக் குணமாக்கும் உணவு முறைகள்
நீங்கள் ஒல்லியா?
பரம்பரையாகச் சிலர் ஒல்லியாக இருப்பார்கள். இன்னும் சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் அப்படியே ஒல்லியாக இருப்பார்கள்! இவர்கள் தங்களுக்கு மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு, தூக்கமின்மை, தாம்பத்தியக் கோளாறு, கல்லீரல் கோளாறு, குடல் கோளாறு முதலியவை உள்ளனவா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.
ஏனெனில் மேற்கண்ட காரணங்களாலும் சிலர் தொடர்ந்து ஒல்லியாக இருப்பார்கள்.

வன்னிமண்ணின் பெருமை கூறும்கந்தப்புஜெயந்தனின் இசையில் வவுனியாமண்ணே புதிய பாடல்

கழிவுநீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பம்: பெண் விஞ்ஞானி சாதனை

Sarah Haigh
கழிவுநீரில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை இங்கிலாந்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி உருவாக்கி வருகிறார்.
உலக பணக்காரர் பில்கேட்ஸ் அளித்த நிதியுதவியுடன் இந்த ஆராய்ச்சி நடந்து வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவன அதிபரும், உலக பணக்காரர்களில் முன்னணியில் இருப்பவருமான பில்கேட்ஸ், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான கண்டுபிடிப்பை ஊக்குவிக்க நிதியுதவி அறிவித்தார்.
உலகம் முழுவதும் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது ப்ராஜக்ட்களை அனுப்பினர். அதில் இங்கிலாந்தை சேர்ந்த நானோ தொழில்நுட்ப வல்லுனர் சாரா ஹே என்ற பெண்ணின் ப்ராஜக்ட் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சக்கர நாற்காலிகளுக்கு பதிலாக புதிய சாதனம் கண்டுபிடிப்பு

மார்பகத்தை பெரிதாக்குவதால் புற்றுநோய் ஆபத்து

சிறிய மார்பு உள்ள பெண்கள் உளவியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகி, அவர்களது திறமைகள் மழுங்கிவிடுகின்றன.கவர்ச்சியாக திகழ வேண்டும் என்பதற்காக பெரிய அடர்த்தியான மார்புகளை செயற்கையாக உருவாக்குகின்றனர்.மேலை நாடுகளில் சிலிக்கன் தட்டுக்கள் மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக்கொள்வது இன்றைக்கு நாகரீகமாக காணப்படுகிறது. ஆனால் அவை பக்கவிளைவு கொண்டது. புற்றுநோயை தூண்டக்கூடியவை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

முத்தம் தரப்போறீங்களா? முக்கியமாக படிங்க!

முத்தமிடுவதன் மூலம் முக நரம்புகள் அனைத்தும் உற்சாகமடைகின்றன கலோரிகள் எரிக்கப்படுகின்றன என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுவதன் மூலம் தொண்டையின் புண்கள், உதட்டில் வெடிப்பும் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் பரவும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மோனோநியூக்ளியோசிஸ் (Mononucleosis ) என்று மருத்துவ உலகினர் இந்த நோய்க்கு பெயரிட்டுள்ளனர். இந்த நோய் தாக்கினால் இதை குணப்படுத்த இதுவரைக்கும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இபிவி வைரஸ் மூலம் இந்த நோய் பரவுகிறது. முத்தமிடுவதனால் உமிழ்நீர், ஈறுகளில் இருந்து கசியும் ரத்தம் போன்றவைகளின் மூலம் இந்த வைரஸ் கிருமி பிறருக்கு பரவுகிறது.

இளம் வயதினரையும், கல்லூரி மாணவர்களையும் இந்த நோய் அதிகம் பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இந்த இபிவி வைரஸ் எளிதில் தொற்றுகிறதாம். முதலில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து படிப்படியாக உடலை ஆக்கிரமித்து கிருமிகளை பரப்புகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முத்தமிடுவதன் மூலம் ஏற்படும் வைரஸ் தாக்குதலுக்கு உடலில் உள்ள சக்தி குறைந்த உணர்வு ஏற்படும். ஜீரணசக்தி குறையும். காய்ச்சல் ஏற்படும். வாந்தியும், வயிற்றுவலியும் அதிகரிக்கும். எடைகுறையும், தசைகளில் வலி ஏற்படும். மூக்கில் ரத்தம் வடிதல், தொண்டையில் ரணம், மார்பக வலி, தொடர் இருமல் போன்றவையும் இதன் அறிகுறிகள் என்று அச்சுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் நமக்கு இபிவி வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியலாம். எனவே முத்தமிடுவதன் மூலம் நோய்கள் பரவும் என்பதால் உங்கள் துணையை முத்தமிடும்முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடியுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

Source: http://tamil.indiansutras.com/2012/04/kissing-disease-mononucleosis-aid0174.html

அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த அரங்கேற்றப்பட்ட நாடகம் வெளிவிவகார அமைச்சு சர்வதேசத்துக்கு அறிவிப்பு

இலங்கை அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காகவே பிரேம்குமார் குணரட்ணம் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோரினாலும் அவர்களுக்கு ஆதரவளிப்போரினாலும் இந்தக் கடத்தல் நாடகம் அரங்கேற்றப்பட்டிருப்பதாக சர்வதேச சமூகத்துக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனர்.இது தொடர்பான அறிக்கையொன்றை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ளது.

டீசல் மானியம் வேண்டின் உடன் காப்புறுதி கட்டாயம்; வற்புறுத்தலால் மட்டு. மீனவர்கள் அவதி

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மீனவர்கள் உடனடிக் காப்புறுதியில் இணைந்தால் மட்டுமே எரிபொருள் மானியம் வழங்கப்படும் என்று நீரியல் வளத்திணைக்களம் நிபந்தனை விதிப்பதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தக் காப்புறுதி செய்யாத மீனவர்களுக்கு மானியம் வழங்கப்படமாட்டாது என்று மட்டக்களப்பு மாவட்ட கடல்தொழில் நீரியல் வள உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

விஸா இன்றி வட-கிழக்கில் தங்கியுள்ள 500 இந்தியர் குறித்து பொலிஸ் விசாரணை

விஸா இன்றி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று பல்வேறு துறைசார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் 500இற்கும் மேற்பட்ட இந்தியப் பிரஜைகள் தொடர்பில் அம்மாகாணங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எரிக் பெரேரா தெரிவித்தார்.

பிரேம்குமார் குணரட்ணம் அவசர அவசரமாக நாடு கடத்தப்பட்டார்

பிரேம்குமார் குணரட்ணம் அவசர அவசரமாக நாடு கடத்தப்பட்டார்
கிரிபத்கொடவில் வைத்து ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்டு, நேற்றிரவு விடுவிக்கப்பட்ட முற்போக்கு சோசலிசக் கட்சியின் தலைவர் பிறேம் குமார் குணரட்ணத்தை இலங்கை அரசு அவசர அவசரமாக நாடு கடத்தியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 7.40 மணியளவில் புறப்பட்ட யு.எல் -314 விமானம் மூலம் கோலாலம்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட இவர், அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மாற்று விமானத்தில் பயணத்தை தொடர்வார்.
கொழும்பு குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் பாதுகாப்பு வழித்துணையுடன், கடுமையான காவல்துறை பாதுகாப்புடன் குணரட்ணம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இவர் ஏற்றி விடப்பட்ட சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் செல்லும் வரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருமளவு காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

புலிகள் இயக்கத்தை தடை செய்ததற்கான ஆதாரங்களை வெளியிட முடியாது'


சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்ததற்கான ஆதாரங்களை தேசநலன் கருதி வெளியிட முடியாது என்று சென்னை  உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கம் கடந்த 1992 ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு  ஒருமுறை மத்திய அரசு பிறப்பிக்கும் அறிவிப்பாணை மூலம் இந்தத் தடை நீடிக்கப்பட்டு வருகிறது.

கூடங்குளம்: இலங்கைக்கு கருணாநிதி கண்டனம்


சென்னை: கூடங்குளம் உள்ளிட்ட தென்னிந்திய அணு மின் நிலையங்கள் குறித்து புகார் அளிக்கப்போவதாக கூறியுள்ள  இலங்கைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்," அணுமின் திட்டம் நேற்று ஆரம்பிக்கவில்லை. அந்த திட்டம் நீண்ட காலமாக நடந்து வருகிறது.  பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டு வேலை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு கடுமையாக வீழ்ச்சியடையும்

சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு கடுமையாக வீழ்ச்சியடையும் – மத்திய வங்கி எச்சரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2012, 00:45 GMT ] [ நித்தியபாரதி ]
சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டில் கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2011ல் 8.3 சதவீதமாகக் காணப்பட்ட சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டில் 7.2 வீதமாகச் சரிவடையும் என மத்திய வங்கி ஏற்கனவே எதிர்வு கூறியிருந்தது.

இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமைக்கு அமெரிக்காவே காரணம்


இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமைக்கு அமெரிக்காவே  காரணம்
பஷில் ராஜபக்ஷ



ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடு கள் சபை மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமைக்கு அமெரிக்காவே பிரதான காரணமாகும் எனவும் அதாவது இலங்கைக்கு எதிராக வாக்களிப்பது என்ற அசௌகரியமான தீர்மானத்தை இந்தியாவை எடுக்கவைத்தது அமெரிக்காவே எனவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்ர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

டில்லியின் செயற்பாடுகளால் கடும் அதிருப்தியில் கொழும்பு; கோத்தபாய அசோக்காந்தா முக்கிய பேச்சு



news
இலங்கை குறித்த புதுடில்லியின் அண்மைக்காலச் செயற்பாடுகளால் மஹிந்த அரசு கடும் ஆத்திரமும் அதிருப்தியும் அடைந்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.

புதுடில்லி மீதான கொழும்பின் அதிருப்தி இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்தச் சந்திப்பில் இந்தியாவின் போக்குக்குறித்து இந்தியத் தூதுவருடன் கடும் தொனியில் பேசியிருக்கிறார் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ.

Monday, April 9, 2012

டிரான்சிஷன் பறக்கும் காரின் விலை அறிவிப்பு: இதுவரை 100 பேர் புக்கிங்

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் உலகின் முதல் பறக்கும் காரான டிரான்சிஷனுக்கு ரூ.1.43 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 100 கார்களுக்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரான்சிஷன் என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் முதல் பறக்கும் காரை அமெரிக்காவை சேர்ந்த டெர்ராபியூஜியா வடிவமைத்துள்ளது. ஏற்கனவே பறக்கும் கார்கள் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் வணிக ரீதியில் விற்பனைக்கு வரும் முதல் பறக்கும் காராக டிரான்சிஷன் கருதப்படுகிறது.

கடத்தப்பட்ட குணரட்ணம் நேற்றிரவு கண்டுபிடிப்பு

கிரிபத்கொடவில் வைத்து கடத்தப்பட்ட முற்போக்கு சோசலிசக் கட்சியின் தலைவரான பிறேம்குமார் குணரட்ணம் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அவுஸ்ரேலியக் குடியுரிமை பெற்ற இவரைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கமாறு சிறிலங்கா அரசுக்கு அவுஸ்ரேலியா கடும் அழுதங்களைக் கொடுத்திருந்தது.

கூடங்குளம் அணு உலை- பாதிப்பை தவிர்க்க இலங்கையில் 5 எச்சரிக்கை கோபுரங்கள்!



தமிழ் நாட்டின் கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அணு உலையினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக அணு சக்தி அதிகார சபை கூறியது.
ஜப்பான், புகுசிமாவில் ஏற்பட்டது போன்று அணுகசிவு ஏற்பட்டால் அதனை முன் கூட்டி அறிவதற்காக இந்தியாவை நோக்கி ஐந்து முன்னெச்சரிக்கை கோபுரங்களை அமைக்க உள்ளதாக அணு சக்தி அதிகார சபை தலைவர் டாக்டர் ரஞ்சித் விஜேவர்தன கூறினார்.

புனரமைக்கப்பட்டது காந்தியின் உருவச்சிலை _

  மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று உடைத்து சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தியின் உருவச் சிலை மீளவும் புனரமைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இந்திய நாட்டின் தேசபிதா அஹிம்சா மூர்த்தி அண்ணல் மஹாத்மா காந்தி மற்றும் சாரணிய இயக்கத்தின் தந்தை பேடர்ன் பவுல் ஆகியோரின் சிலைகளின் தலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
___
Source: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37522

American singing tamil song Eeram

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்த வாகனம் கடை மற்றும் இராணுவக் காவலரண் ஆகியவற்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்த வாகனம் கடை மற்றும் இராணுவக் காவலரண் ஆகியவற்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்து கொண்டிருந்த வியாபார வகானத்தின் சாரதி வாகனம் ஓடிக்கொண்டிருக்கும்போதே தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கடை மற்றும் இராணுவக் காவலரண் ஆகியவற்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

சிறிலங்காவினால் கிளப்பிவிடப்பட்டிருக்கும் புலி எனும் கிலி- அனலை நிதிஸ். ச. குமாரன்


ஏறத்தாள மூன்றாண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை கூண்டோடு அழித்துவிட்டதாக பட்டாசு கொளுத்தி கொண்டாடியது மகிந்த அரசு. போர்க்குற்ற மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக நேரடிக் கண்டனங்களுக்கு உட்பட்டிருக்கும் மகிந்தாவின் அரசு பல்வேறு விதமான புரளிகளை கடந்த இரண்டு வருடங்களாக கிளப்பிவிட்டுக் கொண்டு இருக்கிறது.
கடந்த மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவிற்கு எதிராக 24 நாடுகள் வாக்களித்தன. சிறிலங்காவிற்கு எதிராக இந்தியாவும் வாக்களித்ததுதான் சிறிலங்காவிற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இதன் காரணமாகத்தான் சிறிலங்கா அரசு கிளப்பிவிட்டிருக்கிறது மீண்டும் புலி எனும் கிலியை.

இலங்கைப் பொருளாதாரம்

ஒரு நோயாளியின் நாடித் துடிப்பை பிடித்து அறிவது போல ஒரு பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தினை அறிவதற்கு, அந்த நாட்டில் நிலவும் பொருட்களின் விலை, வட்டி வீதங்கள், பங்குச் சந்தை, வெளி நாட்டு வர்த்தகம், வெளி நாட்டு நாணயம் மற்றும் இதர உள் நாட்டு, வெளி நாட்டு பொருளாதார அரசியல் மாற்றங்கள் போன்றவற்றை தொகுத்து ஆராய வேண்டும்.  

Drug Storage At Cancer Hospital At Risk

By Nirmala Kannangara
The effectiveness of medicines, including chemotherapy drugs, stored in the cold room at the Cancer hospital in Maharagama have been drastically affected due to a breakdown in the cooling machines.
Cancer Institute sources told The Sunday Leader on condition of anonymity that although the cooling machines in the cold room have been malfunctioning over the past one and a half months nothing has been done to rectify the situation.

தாம் முன்வைத்த தீர்வு யோசனைகள் குறித்துப் பதிலளிக்கப்படாத நிலையில், நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இடம்பெற முடியாதென இரா சம்பந்தன் கூறினார்.




அரசியல் தீர்வு குறித்த இருதரப்பு பேச்சுக்கான சாதகமான சூழலை அரசாங்கம் இன்னமும் உருவாக்கவில்லையென தமிழத் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் இர.சம்பந்தன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு கூட்டமைப்பு கையளித்த தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பான தீர்வு யோசனைகளுக்கு அரசு இன்னமும் பதிலளிக்காத நிலையில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எவ்வாறு அங்கம் வகிக்க முடியுமென அவர் எமது செய்தியாளரிடம் கேள்வி எழுப்பினார்.

லண்டன் ஒலிம்பிக் இணையத்தளத்தை முடக்கியுள்ளது ஈரான்?



லண்டனில் நடைபெறவுள்ள கோடை ஒலிம்பிக் போட்டிகளின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தை
ஈரான் தடை செய்துள்ளதாக முறைப்பாடு எழுந்துள்ளது. London2012.Com எனும் குறித்த இணையத்தளத்தை தேடுபொறிகளில் தேடினால் தானாக Peyvandha.ir எனும் மாற்றுத்தளத்திற்கு செல்வதாக ஈரானியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஒரே இரவில் தீர்வை கொண்டுவர முடியாது - இறக்குமதியும் செய்ய முடியாது: மஹிந்த ராஜபக்க்ஷ

இலங்கை சுதந்திரம் அடைந்தபின்னர் அதிஉயர் பொருளாதார வளர்ச்சியை கடந்த வருடம் பதிவு செய்துள்ளது என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இன்று காலை நடைபெற்ற 2011 ஆம் வருடத்துக்கான மத்திய வங்கி அறிக்கை வெளியிடும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

Kangoo it! with Kinga - The Roof is on Fire (Bucuresti Mall)

120,000 தமிழீழ ஏதிலிகள் இந்தியாவில்

யுத்த காலத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து இந்தியாவிற்குத் தப்பிச் சென்றவர்களில் 120,000 பேர் இன்னும் இந்திய முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு மாகாணங்களிலும் உள்ள பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

Lanka to complain to international watchdog about India's nuclear plants



The Kudankulam nuclear power plant.
Colombo: Sri Lanka has expressed concern over possible impact of radiation from India's nuclear power plants located in the southern region, as it prepares to raise the issue with global atomic watchdog, the International Atomic Energy Agency or IAEA.

The official raising of concern with the IAEA is to be made in September, Sri Lanka's Power and Energy Minister Champika Ranawaka said.

"We respect the right of India to have nuclear power stations. But our concerns are on the possible radiation affects they could have on Sri Lanka. We have already written a letter", Ranawaka said.

மனதிற்கு அமைதி தரும் வண்ண மீன்கள்

வீடுகளில் செல்ல பிராணிகள் வளர்ப்பில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளவர்கள் நாய், பூனை, கிளி வளர்ப்பதைப்போன்று பலவிதமான மீன்களை வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டுள்ளனர். மீன்களை பொறுத்தவரையில் கோல்ட் பிஷ் போன்றவை அதிக அளவில் விரும்பி வளர்க்கப்படுகின்றன.

பெரிய பங்களாக்களிலும், நிறுவனங்களின் முகப்பிலும் மிகப்பெரிய மீன்தொட்டிகள் வைத்து விலை உயர்ந்த மீன்கள் வளர்க்கபடுகின்றன. பொதுவாக மீன்கள் அழகுக்காக மட்டுமின்றி அமைதிக்காகவும் மீன்களை வளர்க்கின்றனர். வண்ண மீன் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்தும் மீன் வளர்ப்பாளர்கள் உங்களுக்காக கூறியுள்ள ஆலோசனைகள் உங்களுக்காக.

இலஞ்சம் பெற்றதாக வன திணைக்கள அதிகாரி கைது

அனுமதிப்பத்திரத்தின் கால எல்லையை நீடிப்பதற்காக நபரொருவரிடமிருந்து 50,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரியொருவரை கந்தளாயில் வைத்து ஊழல் மற்றும் இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.வன பாதுகாப்புத் திணைக்கள தம்பலகாமல் பிராந்திய அலுவலகத்தில் கடமையாற்றும் அதிகாரியொருவர் காட்டுப் பகுதியில் கிறவல் தோண்டுவதற்கான அனுமதிப்பத்திர ஊழல் மற்றும் இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கிடைக்க முறைப்பாடுகளை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரி கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
Source: http://www.thinakkural.com

கேதீஸ்வரத்தில் வெண்கலப் புத்தர்

மன்னார், திருக் கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக் கரைக்குச் சமீபமாக தனியார் காணி ஒன்றில் போயா தினமான கடந்த வெள்ளிக்கிழமை வெண்கலத்திலான புத்தர் சிலை திடீரென கொண்டு வரப்பட்டு "பிரித்" ஓதி வழி பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறித்த பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் தனியார் காணியில் சிறிய புத்தர் சிலை ஒன்றை வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.ஆனால் தற்போது திடீரென மேற்படி வெண்கலத்திலான சிலை கொண்டுவரப்பட்டு அங்கு வழிபாட்டுத் தலமும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. சுமார் ஆயிரத்து 500 கிலோ கொண்ட இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டமை மன்னார் மாவட்ட இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருக்கேதீஸ்வரத்தின் தீர்த்தக் கரையான பாலாவிக்குச் சமீபமாக, இந்த பௌத்த வழிபாட்டுத் தலம் நிர்மாணிக் கப்பட்டுள்ளதால் இந்துக்கள் மத்தியில் அச்ச உணர்வும் பீதியும் காணப்படுகிறது.
இந்தப் பகுதியில் பௌத்த மக்கள் எவரும் வசிக்காத நிலையில், தனியார் காணியை அபகரித்து பௌத்த தலம் அமைக்கப்பட்டுள்ளமை திருக்கேதீச்சரம் தனித்து இந்து மத வழிபாட்டிடமாக இருப்பதை மாசுபடுத்துவதற்கான திட்டமிட்ட நடவடிக்கை என்று பிரதேச இந்து, கிறிஸ்தவ மக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
புதிதாக மத வழிபாட்டுத்தலங்கள் அமைப்பதற்கு பிரதேச செயலகம் மற்றும் கலாசார, மத விவகாரங்கள் அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால் இந்த நடைமுறை ஏதும் கைக்கொள்ளப்படாமல் படையினர்
 

இந்தியாவுடன் உறவுகளை சிராக்கும் முயற்சி சறுக்கல் ; ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையே முதலில் எதிர்பார்க்கிறது புதுடில்லி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர விரிசலை சரி செய்ய இலங்கை அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்தியாவிடம் இருந்து பச்சைக் கொடி காட்டப்படவில்லை.

வடக்கில் தொடர்ந்தும் இராணுவத்தினரை நிலைநிறுத்த வேண்டியது அவசியம் என்கிறார் நெசர்பே பிரபு!


british mp in jaffna (4)

வடக்கில் தொடர்ந்தும் இராணுவத்தினரை நிலைநிறுத்த வேண்டியது அவசியமானது என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபு தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் முற்று முழுதாக நீங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மரபு ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்ற போதிலும், படையினரை நிலைநிறுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிஹின் லங்காவில் திடீர் தீ-அவசரமாக தரையிறக்கப்பட்டது விமானம்!


mihinanka

மலேசியா நோக்கிப் பயணித்த மிஹின் லங்கா நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தின் பொருட்கள் எடுத்துச் செல்லும் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாகவே விமானம் தரையிறக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Source: http://www.saritham.com/?p=56608

Sunday, April 8, 2012

கடத்தப்பட்ட மகன் குணரட்னத்தை விடுதலை செய்யக்கோரி அவரது தயார் விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்

கொந்தளிப்பான கடலில் மீன்பிடித்தல்: (தமிழாக்க கட்டுரை..)

(சிறிலங்கா அரசு வடக்கிலும் கிழக்கிலும் பாரிய கட்டுமானத் திட்டங்களையும் பொருண்மிய மேம்பாடுகளையும் மேற்கொள்வதாகப் பறை சாற்றுகிறது. தமிழ்மக்களைப் பொறுத்தளவில் அவர்களது பொருளாதாரம் இரண்டு முக்கிய தொழில்களில் தங்கியுள்ளது. ஒன்று விவசாயம். மற்றது மீன்பிடி. இதில் வடக்கில் மீன்பிடித் தொழில்பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது. சுமித் சாமின்டா (Sumith Chaaminda) என்ற சிங்கள ஆய்வாளர் எழுதிய இக்கட்டுரை த அய்லாந்து நாளேட்டில் ஏப்பிரில் 02 ஆம் நாள் வெளிவந்தது. வட மாகாணத்தில் நலிந்து போயிருக்கும் மீன்பிடித் தொழில்பற்றி முடிந்தளவு பக்கசார்பில்லாது எழுதியுள்ளார்.
(தமிழழாக்கம் - நக்கீரன்.)

இலங்கை - இந்திய உறவில் விரிசல் ஏற்படுகிறதா?


ஜெனீவா நகரில் கடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தின் போது இலங்கை விடயமாக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததை அடுத்து இலங்கை இந்திய உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது போல் தான் தெரிகிறது. இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தினால் சற்று மனக் கசப்படைந்து இருப்பதாகவே தெரிகிறது.

AIDS on the rise in Sri Lanka, one more death

An HIV/AIDS death was reported at the Negombo Hospital raising concerns over the increasing number of deaths from the ‘silent
epidemic.’
The victim in his early forties has been working in a European country
for many years. Hospital sources said that he was admitted to the
hospital vomiting blood and died the same evening due to severe
symptoms of AIDS.

72 வயதில் பட்டம் பெற்று மருதானை மூதாட்டி சாதனை

அறிவுப் பயணத்திற்கு வயது தடையாக அமையாது என்பதை மருதானையைச் சேர்ந்த வயோதிப பெண்ணொருவர் எடுத்துக்காட்டியுள்ளார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பிரிவில் 72 வயதான குறித்த வயோதிபப் பெண் பட்டத்தினை பெற்றுக்கொண்டுள்ளார். 10 வருடங்களுக்கு மேலாக தான் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்த இலக்கினை எட்டியுள்ளதாகவும் இது தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காலி வெலிவிடகே பகுதியில் பிறந்த கருணா வெலிவிடகே ஆசிரியையாக தமது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
இந்த விடயம் அனைவருக்கும் சிறந்ததொரு முன்னுதாரணம் என இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடாதிபதி கலாநிதி சாந்த அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கின்னஸ் சாதனைகள் தொடர்பான செயற்குழுவிற்கு தெரியப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Source: http://www.thinakkural.com/news/all-news/local/12483-72------.html

85 சதவீத பெண்களுக்கு 'பிரா' குறித்த விழிப்புணர்வு இல்லையாம்!

ஆஸ்திரேலியாவில் 80 சதவீத பெண்கள் பொருத்தமற்ற, அளவு சரியில்லாத பிராக்களையே அணிகிறார்களாம். ஒரு சர்வேயில் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.

பெரிய அளவிலான மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு ஒவ்வொரு மார்பும் சராசரியாக 600 கிராம் எடை கொண்டதாக இருக்குமாம். இந்த எடையை சரியான முறையில் தாங்கக் கூடிய பிராக்களை அணியாவிட்டால், பெண்களுக்கு முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் ஏற்படுகிறதாம். மேலும் மார்பகங்களும் பொலிவிழந்து, விரைவில் தொய்வடைந்து போய் விடும். எனவேதான் எப்போதுமே சரியான அளவிலான, பொருத்தமான பிராக்களை அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

பரபரப்பை ஏற்படுத்தும் மலையாள பெண் எழுத்தாளரின் நவீன காமசூத்ரா!

வாத்சாயனரின் காமசூத்ரா ஆண்களுக்காக எழுதப்பட்டது. எனவே பெண்களுக்காக நான் ஒரு புதிய காமசூத்ராவை எழுதியுள்ளேன் என்று கூறுகிறார் மலையாள எழுத்தாளர் கே.ஆர்.இந்திரா. இவரது புதிய காமசூத்ரா நூல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே இந்த நூல் குறித்த எதிர்பார்ப்புகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளனவாம்.

ஸ்திரைன காமசூத்ரா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நூலின் ஆசிரியை இந்திரா ஏற்கனவே ஒரு சிறுகதைத் தொகுப்பு உள்ளிட்ட சில நூல்களை எழுதியவர். இப்போது பெண்களுக்கான காமசூத்ரா நூலை எழுதி அத்தனை பேரின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

இலங்கை யுத்தத்தின் போதான தனது பாத்திரத்தை மீளாய்வு செய்ய ஆரம்பித்தது ஐ.நா.

கெலும் பண்டார)

இலங்கை யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் தான் வகித்த பாத்திரம் குறித்து ஐ.நா. மீளாய்வு செய்ய ஆரம்பித்துள்ளது. இலங்கை அதிகாரிகளால் தருஸ்மன் அறிக்கை என அழைக்கப்படும், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் சிபாரிசுக்கிணங்க  இம்மீளாய்வு இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நம்பகமான வட்டாரங்கள் மூலம் தனக்கு இத்தகவல் தெரியவந்ததாக ஜெனீவாவிலுள்ள, ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம், தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

இந்தியாவின் முதலாவது ஆளில்லா உளவு விமானம் இலங்கை-இந்தியக் கடற்பரப்பில்!

Add caption
இந்தியாவின் கிழக்குக் கரையோரத்தில் அந் நாட்டின் முதலாவது ஆளில்லா உளவு விமானம் காண்காணிப்பில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மற்றும் இந்தியாவுக்குமிடையிலான பாக்கு நீரிணையின் கடற் பிராந்திய நடவடிக்கைகளைக் காண்காணிக்கும் நோக்கிலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் மூலம் தமிழ் நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்திற்கு அப்பால் உள்ள பாக்கு நீரிணை, மன்னார் குடா மற்றும் பாக்கு நீரிணை குடா என்பனவற்றை துல்லியமாக கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இராமேஸ்வரத்தில் ஆளில்லா உளவு விமான கூடம் ஒன்றை ஸ்தாபிப்பதன் மூலம் சிறந்த முறையில் இந்தியாவின் கடலோர பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
Source: http://www.eeladhesam.com

வெளியுறவு அமைச்சராக மீண்டும் ரோகித போகொல்லாம?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை வெற்றியடைந்ததன் காரணமாக சிறிலங்கா அமைச்சரவையில் பலவீனமடைந்துள்ள ஜீ. எல். பீரிஸை வெளிவிவகார அமைச்சுப் பொறுப்பிலிருந்து அகற்றிவிட்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சரான ரோஹித போகல்லாகமவை வெளிவிவகார அமைச்சராக நியமிக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி மஹிந்தவின்

பாதுகாப்புக் கடமையில் இருந்த சிறிலங்கா படைச் சிப்பாய் துக்கிட்டு தற்கொலை.

பாதுகாப்புக் கடமையில் நின்றுகொண்டு இருந்த சிறிலங்கா படைச் சிப்பாய் ஒருவர் அருகில் இருந்த மரம் ஒன்றில் துக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று நேற்று இரவு கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேற்படிச் சிப்பாயினது சடலம் இன்று காலை மரத்திலிலுள்ள கொப்பு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் உள்ள படை முகாம் ஒன்றில் 7 பற்றாலியன் படைப்பிரிவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சாந்த (வயது47) என்ற அம்பாறை மாவட்ட சிங்களப் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்.

எனினும் மேற்படிச் சிப்பாயின் மரணம் தொடர்பாக இராணுவத்தில் இருந்து எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை என்றும் தற்போது சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Source: http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=13280:2012-04-08-16-18-34&catid=1:aktuelle-nachrichten

Future Technology Watch your day in 2020

Sri Lanka concerned over Indian n-plants

Concerned over nuclear power plants located in south India, the Sri Lankan government plans to raise the issue before the International Atomic Energy Agency (IAEA). According to Sri Lankan minister for Power and Energy Champika Ranawaka, the issue would be raised at the next International
Atomic Energy Agency confabulation scheduled in September, Xinhua reported Sunday. Sri Lankan is concerned over the impact a nuclear disaster in one of the plants located in southern India could have on Sri Lanka, he said.

இலங்கைக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்கக்கூடிய சாத்தியம்

இலங்கைக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடையை விதிக்க கூடிய சாத்தியம் அதிகரித்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிறிய நாடு ஒன்று ஐ.நா. தீர்மானத்தை கொச்சைப் படுத்தும் வகையில் செயற்படுவது அவ்வளவு நல்லதல்ல என்ற அடிப்படையிலும், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித் தமைக்காக,

இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் நெருங்கிய தொடர்பை வலுப்படுத்த இலங்கை அரசு முயற்சிப்பதையும் அடுத்து,

இலங்கை மீது பொருளாதாரத் தடையை விதிக்க அமெரிக்கா உத்தேசித்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிப்பதன் மூலம் இலங்கை மக்கள் தற்போது உள்ள ஆட்சியை மாற்றி அமைக்க முற்படுவர்.

எனவே எந்நேரமும் பொருளாதாரத் தடை பற்றிய அறிவித்தல் வெளியாகலாம் என்பதால் இலங்கை அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என அரசியல் வல்லுநர்கள் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Source: http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=73758

தோணிதாட்ட மடுவின் சோகக் கதை

  போய்க்கொண்டே இருந்தோம். அந்த முகங்களைத் தேடி. அடர்ந்த காடு, உடைந்த றோட், விரிந்த புல், வயல் வெயிலில் காய்ந்த பயிர் போல் பல பரிதாப முகங்களைக் கண்டு சோகத்தோடு உள்ளே நுழைகிறோம். அங்கே கண்ட காட்சிகள் எம்மை அதிர்ச்சி அடைய வைத்தன.

வடக்கில் நிலக்கண்ணி அகற்றும் பணி ஜூலை மாதத்திற்குள் முடிந்து விடும் அமைச்சர் கூறுகிறார்

வடபகுதியில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளை எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் நிறைவுசெய்ய திட்டமிட்டுள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்துள்ளார். நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை நிறைவுபெற்று இரண்டு மாதங்களுக்குள் மீள் குடியேற்றப் பணிகளை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா செட்டிக்குளம் கதிர்காமர் மற்றும் ஆனந்தகுமாரசுவாமி நிவாரணக் கிராமங்களில் தொடர்ந்தும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியத் துரோகம் மீண்டும் மீண்டும்

1987ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாக ராஜீவ் காந்தியும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர். செல்லாக் காசுக்குச் சமனான அந்த இந்திய இலங்கை ஒப்பந்தம், பின்னாளில் ஒரு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் செயலிழந்தது.

பாகிஸ்தானை கிழக்கு மேற்காகப் பிரித்து வங்க தேசத்தை உருவாக்கிய இந்திரா காந்தி, இலங்கையில் அதைச் செய்ய முன்வரவில்லை.

ஜெனிவாவில் இலங்கையை ஆதரித்த நாடுகளின் நிலையை இந்தியா விரைவில் மாற்றும்: ப.சிதம்பரம்

திருச்சிராப்பள்ளி: ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்த 15 நாடுகளையும் அடுத்த கட்டத்தில் இந்தியா தமது ராஜதந்திரம் மூலமாக தம் பக்கம் மாற்றும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பு, இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு மற்றும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு பாராட்டு என மூன்று விஷயங்களை உள்ளடக்கி முப்பெரும்விழாவை காங்கிரஸ் கட்சி நடத்தியது.

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator